தமிழகத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் அனைத்து மகளிருக்கும் ரூ.2000 வழங்கப்படும்- பொள்ளாச்சி ஜெயராமன்
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை.
- தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை.
திருப்பூர்:
திருப்பூரில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசியதாவது:-
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்து நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி அமைந்ததும் மீண்டும் செயல்படுத்தப்படும்.
இன்று மின் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி உயர்ந்து விட்டது. பாதாள சாக்கடை வரி 129 சதவீதம் உயர்ந்துவிட்டது. நாய், பூனை வளர்த்தாலும் பூனை குட்டி போட்டாலும் வரி போடுகிறார்கள்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 10 ஆண்டு காலம் எந்த வரியும் உயர்த்தப்படவில்லை. ஆனால் இன்று வீட்டு வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டு விலைவாசியும் உயர்ந்து விட்டது.
தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை. இன்னும் 10 அமாவாசையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும் என்றார்.