தமிழ்நாடு
சிறுமலை தனியார் எஸ்டேட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு
- தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.
- சடலத்தின் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் டெட்டனேட்டர்கள் கொண்டு குண்டு தயாரித்து வந்த இளைஞர் உயிரிழந்தார்.
கேரளாவை சேர்ந்த சிபு என்ற இளைஞரின் உடல் தனியார் எஸ்டேட்டில் இருந்து மீட்கப்பட்டது. அவரது உடல் அருகில் இருந்து வெடிபொருட்களும் மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் சிறுமலை தனியார் எஸ்டேட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். வெடிபொருட்கள் மீட்கப்பட்ட நிலையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.