தமிழ்நாடு

தமிழக பட்ஜெட்: எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு

Published On 2025-03-14 11:47 IST   |   Update On 2025-03-14 12:48:00 IST
  • சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும்.
  • போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை:

தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.21,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* டீசல் பேருந்துகளை இயற்கை எரிவாயு மூலம் இயங்கும் பேருந்துகளாக மாற்ற ரூ.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* வரும் நிதியாண்டில் 3000 புதிய பேருந்துகள் வாங்க ரூ.1031 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

* சென்னை, மதுரை, கோவையில் இந்த ஆண்டு முதல் மின் பேருந்து சேவை தொடங்கப்படும்.

* சென்னை 950, மதுரை 100, கோவை 75 மின் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்படும்.

* தமிழகம் முழுவதும் 1,125 மின் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.

* 700 பழைய பேருந்துகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

 

* 120 கோடியில் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்படும்.

* போக்குவரத்து துறைக்கு ரூ.12,964 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

* மின்துறைக்கு பட்ஜெட்டில் ரூ.27,168 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News