தமிழக பட்ஜெட்: வரும் நிதியாண்டில் கான்கிரிட் வீடுகள் கட்ட ரூ.3500 கோடி ஒதுக்கீடு
- தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும்.
- நாவாய் அருங்காட்சியம் 21 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* அகழாய்வு, தொல்லியல் அறிவியல் ஆராய்ச்சி மேற்கொள்ள ரூ.7 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* தமிழகத்தில் 8 இடங்களில் தொல்லியல் ஆய்வுகள் நடத்தப்படும்.
* பூம்புகார் முதல் நாகை வரை ஆழ்கடல் அகழாய்வு நடத்தப்படும்.
* நொய்யல் அருங்காட்சியகம் 22 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
* நாவாய் அருங்காட்சியம் 21 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.
* வரும் நிதியாண்டில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் கான்கிரிட் வீடுகள் கட்டப்படும்.
* முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்திற்கு ரூ.2,200 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ.29,465 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* வரும் நிதியாண்டில் கான்கிரிட் வீடுகள் கட்ட ரூ.3500 கோடி செய்யப்படும்.
* 25 ஆயிரம் வீடுகள் கட்ட ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.