இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்- தங்கம் தென்னரசு
- 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
- அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* இந்திய திருநாட்டில் 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வித்திடும் பட்ஜெட்.
* In equality is a choice bus we can choose different path என்பதன் அடிப்படையில் வெற்றி நடைபோடும் தமிழகம்.
* ஏழை, எளிய நகர்ப்புற குடியிருப்புக்கு தனிவாரியம், மகளிருக்கு வாக்குரிமை, சொத்துரிமை என தமிழகம் அனைத்திலும் சிறப்பானது.
* 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* இருமொழி கொள்கையால் உலகம் எல்லாம் தமிழர்கள் தடம் பதித்து வருகின்றனர்.
* இருமொழி கொள்கை தொடர்ந்து சமரசமின்றி முன்னெடுக்கப்படும்.
* எதிர்கால வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் பட்ஜெட் அமையும்.
* அண்ணாவின் தொலைநோக்கு பார்வையின் அடிப்படையில் தமிழக பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
* திருக்குறளை உலகெங்கும் பரப்புவது நமது தலையாய கடமையாகும்.
* தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்கள் முறைப்படுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.