தமிழ்நாடு
நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை - உதயநிதி ஸ்டாலின்

நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை - உதயநிதி ஸ்டாலின்

Published On 2025-03-28 11:36 IST   |   Update On 2025-03-28 11:36:00 IST
  • தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.
  • ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை:

தமிழக சட்டசபையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

* முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி எனது காரில் ஏறியபோது நான் ரூட் மாறமாட்டேன் என்றார். ஆனால் டெல்லியில் மாறிவிட்டார்.

* டெல்லியில் 3 கார்கள் மாறித்தான் அ.தி.மு.க. அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார்.

* பாசிஸ்டுகள் எத்தனை ரூட்டுகள் போட்டு அடக்க நினைத்தாலும் பட்ஜெட்டில் ஒரே ஒரு ரூ போட்டு அலற செய்தவர் முதலமைச்சர்.

* எதிர்க்கட்சி தலைவரானாலும் அவருடன் கூட்டணி வைக்க துடிப்பவர்களும் ஆக்கப்பூர்வ அரசியல் செய்க.

* தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு மட்டும் அல்ல, எந்த திணிப்பும் கொண்டுவர முடியாது.

* ஊர்தோறும் திட்டங்களை கொண்டு சேர்ப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* இந்திய ஜனநாயகத்தின் போர்க்குரல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

* நான் பதில் சொல்லும் போதெல்லாம் எதிர்க்கட்சி தலைவர் அவையில் இருப்பதில்லை என்றார். 

Tags:    

Similar News