உலகம்

போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் மட்டுமே அமெரிக்க பணயக் கைதி விடுவிப்பு: ஹமாஸ் திட்டவட்டம்

Published On 2025-03-15 17:24 IST   |   Update On 2025-03-15 17:24:00 IST
  • ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த உடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
  • ஆனால், போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் நிறைவு பெறாமல் உள்ளது.

இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நடைபெற்று வந்த நிலையில், ஒப்பந்தம் ஏற்பட்டு கடந்த ஜனவரி மாதம் 19-ந்தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. அப்போது 25 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவித்தனர். அத்துடன் உயிரிழந்த 8 பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது. இதற்குப் பதிலாக சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனர்களை சிறையில் இருந்து இஸ்ரேல் விடுவித்தது.

ஏழு வார ஒப்பந்தம் நிறைவு பெற்றதும், 2-வது கட்ட ஒப்பந்தம் அதனைத் தொடர்ந்து நீடிக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் ஏழு வாரக்கால போர் நிறுத்தம் இந்த மாதம் தொடக்கத்தில் நிறைவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட போர் நிறுத்தத்திற்கான ஒப்பந்தம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் நேற்று அமெரிக்க-இஸ்ரேல் பணயக் கைதி ஒருவர் விடுவிக்கப்படுவார். உயிரிழந்த 4 பணயக் கைதிகள் உடல் ஒப்படைக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் முதற்கட்ட போர் நிறத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் அமல்படுத்தினால் மட்டுமே பணயக் கைதி விடுவிக்கப்படுவார். 4 பணயக் கைதி உடல்கள் ஒப்படைக்கும் என ஹமாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் "போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் குறித்து நீண்டகாலமாக தாமதமாகி வரும் பேச்சுவார்த்தைகள் விடுதலை செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கி 50 நாட்களுக்கு மேல் நீடிக்கக்கூடாது.

மனிதாபிமான உதவிகள் நுழைவதைத் தடுப்பதை இஸ்ரேல் நிறுத்திவிட்டு, எகிப்துடனான காசா எல்லை பாதையில் இருந்து விலக வேண்டும். பணயக் கைதிகளுக்கு ஈடாக மேலும் பல பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இஸ்ரேல் உடனடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர், இது ஹமாஸின் சூழ்ச்சி மற்றும் உளவியல் போர் என குற்றம் சாட்டியிருந்தார்.

நிரந்தர போர் நிறுத்தத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்னும் சில வாரங்களுக்கு போர் நிறுத்தம் நீடிப்பதற்கான திட்டத்தை முன்வைப்பதாக அமெரிக்கா கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தது. அதே நேரத்தில் முற்றிலும் நடைமுறைக்கு மாறான கோரிக்கைகளை தனிப்பட்ட முறையில் முன்வைப்பதாகவும் ஹமாஸ் தெரிவித்திருந்தது.

மூத்த ஹமாஸ் தலைவர் கலில்-அல்-ஹய்யா நேற்று எகிப்து நாட்டிற்கு சென்றார். அதன்பின் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டு வருகின்றன.

முதற்கட்ட போர் நிறுத்தம் முடிவடைந்ததும், இந்த மாதம் தொடக்கத்தில், நாங்கள் அமெரிக்காவின் புதிய திட்டத்தை ஏற்றுள்ளோம். அது ஹமாஸ் தற்போதுள்ள பணயக் கைதிகளில் பாதிபேரை விடுதலை செய்ய வேண்டும். அதற்குப் பின் நிரந்தர போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு உறுதி அளிக்கிறோம் எனத் தெரிவித்திருந்தது.

ஆனால், கையெழுத்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து இஸ்ரேல் பின்வாங்குகிறது. போர் நிறுத்தத்தை நாசப்படுத்த முயற்சிக்கிறது என ஹமாஸ் குற்றம் சாட்டியது.

ஜனவரி மாதம் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், இஸ்ரேலும் ஹமாஸும் பிப்ரவரி தொடக்கத்தில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்க இருந்தன. இதில் ஹமாஸ் மீதமுள்ள அனைத்து பணயக்கைதிகளையும் நிரந்தர போர் நிறுத்தத்திற்கு ஈடாக விடுவிக்க வேண்டும் என்பதுதான். ஆனால் இது நடைபெறாமல் உள்ளது.

Tags:    

Similar News