உலகம் (World)

போர் நிறுத்தம் செய்யும் வரை இஸ்ரேலுடன் ஆன உறவுகளை முறித்துக் கொள்ள தென் ஆப்பிரிக்கா முடிவு

Published On 2023-11-22 08:35 GMT   |   Update On 2023-11-22 10:37 GMT
  • தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
  • தென்னாப்பிரிக்க நாடாளுமன்றம்தனது தூதரக அதிகாரியை இஸ்ரேல் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.

இஸ்ரேலிய தூதரகத்தை மூடவும், காசாவில் போர்நிறுத்தம் செய்யும் வரை, இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொள்ள  தென்னாப்பிரிக்கா முடிவு செய்துள்ளது.

இஸ்ரேல் தூதரகத்தை மூடுவதற்கும், காசாவில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளும் வரை அனைத்து உறவுகளையும் துண்டிப்பதற்கும் அழைப்பு விடுக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எதிர்க்கட்சியான பொருளாதார சுதந்திரப் போராளிகளால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்திற்கு 248 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றதோடு 91பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்தனர்.

தொடர்ந்து, தென்னாப்பிரிக்க பாராளுமன்றம் இது தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றிய நிலையில், தனது தூதரக அதிகாரியை இஸ்ரேல் திரும்பப் பெறுவதாக கூறியுள்ளது.

Tags:    

Similar News