புதுச்சேரி

நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்திய காட்சி.

நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-07 06:29 GMT   |   Update On 2023-05-07 06:29 GMT
  • கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய கோரிக்கை விடுத்தனர்.
  • புதுவை அனைத்து தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

புதுச்சேரி:

கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

இந்த திரைப்படத்தை தடை செய்ய கோரி தமிழகம், கேரளாவில் இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில்

புதுவை தி சினிமா புரோவிடன்ஸ் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கில்  10.15 மணிக்கு மட்டும் ஒரு காட்சி திரையிடப்பட்டது.

இதனால் வணிக வளாகத்தை முற்றுகையிட்டு நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். நாம் தமிழர் தொழிற்சங்கத்தின் மாநிலச் செயலாளர் ரமேசு தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் இளங்கோவன், காமராஜ், மணிபாரதி, கோகுல் வேலவன், மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி தேவிகா திருக்குமரன் முன்னிலை வகித்தார்.

நாம் தமிழர் கட்சியின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் செங்கோலன், கடலூர் மாவட்ச் செயலாளர் சாமிரவி, விழுப்புரம் தொகுதி செயலாளர் விக்ரம் , மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் விசயலட்சுமி, தமிழ்த்தேசிய பேரியக்கம் மாநில செயலாளர் வேல்சாமி, தமிழர்களம் அழகர் புதுவை அனைத்து தொகுதி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் போலீசார் தடுப்பை மீறி வணிக வளாகத்தின் உள்ளே சென்று ஆர்ப்பா ட்டம் செய்ய முயன்றதால் போலீசார் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை கைது செய்தனர். பின்னர், நள்ளிரவு 12.45 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.

Tags:    

Similar News