search icon
என் மலர்tooltip icon

    மேஷம் - தமிழ் மாத ஜோதிடம்

    மேஷம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17.8.2022 முதல் 17.9.2022 வரை

    சிந்தித்த கருத்துக்களை சந்தித்தவர்களிடம் எல்லாம் சொல்லி மகிழும் மேஷ ராசி நேயர்களே!

    ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் தன ஸ்தானத்தில் இருப்பதால் தனவரவு திருப்திகரமாக இருக்கும்.

    சிம்ம - சூரியன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதியான சூரியன், மாதம் முழுவதும் பூர்வ புண்ணிய ஸ்தானத்திலேயே இருக்கிறார். எனவே பிள்ளை களால் மேன்மை ஏற்படும். சகாய ஸ்தானாதிபதி புதன், சூரியனோடு இணைந்து சஞ்சரிப்பதால் 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. எனவே கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெறுவீர்கள்.

    கன்னி - புதன் சஞ்சாரம்

    ஆவணி 8-ந் தேதி கன்னி ராசிக்குச் செல்லும் புதன், அங்கு உச்சம் பெறுகிறார். எனவே தொழில், உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான உதவி கிடைக்கும். எதிரிகளின் பலம் குறையும். இதுவரை நீங்கள் செய்ய நினைத்தும் முடியாதுபோன காரியங்கள் ஒவ்வொன்றாக நடந்தேறும். 3-ம் இடத்திற்கும் அதிபதியாக புதன் விளங்குவதால் சகோதர உறவு மேம்படும். வழக்குகள் சாதகமாகும்.

    வக்ர புதன் சஞ்சாரம்

    ஆவணி 12-ந் தேதி, சிம்ம ராசிக்குச் செல்லும் புதன் அங்கு வக்ரமாக மாறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, திடீர் திருப்பங்கள் ஏற்படும். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். தொழில் கூட்டாளிகளில் ஒருசிலர் விலகினாலும் புதியவர்கள் வந்திணைந்து பொருளாதார நிலை உயர வழிவகுத்துக் கொடுப்பர்.

    சிம்ம - சுக்ரன் சஞ்சாரம்

    ஆவணி 16-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பஞ்சம ஸ்தானத்திற்கு வருவது யோகம்தான். பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைக்கும். பெண் பிள்ளைகளின் சுபச்சடங்குகளில் இருந்து வந்த தடை அகலும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுபகாரியங்கள் நடத்தும் வாய்ப்பு உருவாகும்.

    குரு வக்ரமும், சனி வக்ரமும்

    இந்த மாதம் முழுவதும் குருவும், சனியும் வக்ர இயக்கத்தில் உள்ளனர். உங்கள் ராசிக்கு 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், குரு. அவரது வக்ர காலத்தில் தந்தை வழி உறவில் விரிசல் ஏற்படும். பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது. உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். அவரது வக்ரத்தால் இந்த காலகட்டத்தில் தொழிலில் சில பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும். எண்ணங்கள் எளிதில் நடைபெற இறை வழிபாடு அவசியம்.

    இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் வராஹி அம்மனை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    ஆகஸ்டு: 20, 25, 26, செப்டம்பர்: 5, 6, 10, 11, 16, 17

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் பொருளாதார நிலை உயரும். புதிய பாதை புலப்படும். கணவன் - மனைவிக்குள் கனிவு உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு வேலை, மாலை இரண்டும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்தாலும் சனியின் வக்ர காலத்தில் சகப் பணியாளர்களால் சில தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். எதையும் நிதானமாகச் செய்யுங்கள்.

    மேஷம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    17-07-2022 முதல் 16-08-2022 வரை

    உழைப்பதன் மூலமே உன்னத வாழ்வை அடையலாம் என்று சொல்லும் மேஷ ராசி நேயர்களே!

    ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே பலம்பெற்று சஞ்சரிப்பது யோகம்தான். பொருளாதார நிலை உயரும்.

    ஆடி 13-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். எனவே சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த முன்னேற்றங்களும், ஊதிய உயர்வும் உண்டு. பணி நிரந்தரமாகும் வாய்ப்பு சிலருக்கு வாய்க்கும். பாகப்பிரிவினைகளில் இருந்த தடைகள் அகலும். இனிய பலன்கள் நிறைய நடைபெறும் நேரம் இது.

    ஆடி 22-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சுக்ரன். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. ஒரு சிலர் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்குவர். தனவரவு திருப்தி தரும். நிதிப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சி வெற்றியாகும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்துசேரும். பாதியில் நின்ற பணிகள் துரிதமாக நடைபெறும்.

    ஆடி 23-ந் தேதி, குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசி அடிப்படையில் பார்க்கும் பொழுது 9, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. அவர் வக்ரம் பெறும் பொழுது நன்மை, தீமை இரண்டும் கலந்தே நடைபெறும். 12-க்கு அதிபதியாக குரு இருக்கிறார். விரயாதிபதி வக்ரம் பெறும் நேரம் விரயங்கள் குறையும். இந்த காலகட்டத்தில் சுபகாரியங்கள் நடத்துவதில் கவனம் செலுத்தலாம். 9-ம் இடத்திற்கும் குரு அதிபதி. அந்த வகையில் இந்த வக்ர காலத்தில் தந்தை வழி உறவில் விரிசல்கள் ஏற்படலாம். சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைப்பது அரிது. வாகன பழுது வாட்டத்தைக் கொடுக்கும். உடல் நலத்தில் அச்சுறுத்தல் உருவாகும். இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படலாம்.

    ஆடி 25-ந் தேதி, ரிஷப ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிநாதன் தன ஸ்தானத்திற்கு வரும்போது பொருளாதார நிலை உயரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அருளாளர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் ஆலோசனை தக்க சமயத்தில் கைகொடுக்கும். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம் பலமடங்கு விலை உயர்ந்து மகிழ்ச்சிப்படுத்தும். கடன்சுமை குறையும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் நடைபெறும். தொழிலை விரிவுபடுத்தச் செய்யும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

    இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் அம்பிகையை வழிபட்டு வருவதன் மூலம் இன்பங்கள் இல்லம் தேடி வரும்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 18, 23, 24, 28, 29, ஆகஸ்டு: 9, 10, 13, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- சிவப்பு.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் ஆரோக்கியம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். இல்லம் கட்டிக் குடியேறும் எண்ணம் நிறைவேறும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளின் எதிர்கால நலன்கருதி நீங்கள் எடுத்த முயற்சியில் வெற்றி உண்டு. ஆபரண சேர்க்கை திருப்தி தரும். சுபச்செய்திகள் வந்துசேரும். பணிபுரியும் பெண்களுக்கு மதிப்பும், மரியாதையும் உயரும். கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

    மேஷம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை

    யாரையும் சந்தித்தவுடன் நண்பர்களாக்கிக் கொள்ளும் மேஷ ராசி நேயர்களே!

    ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், விரயாதிபதி குருவுடன் இணைந்து விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே எதிர்பாராத விரயம் அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

    ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் செல்கிறார். 2, 7 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், வாக்கு, தனம், குடும்பம் ஆகியவற்றை அறிந்து கொள்ளும் இடமான தன ஸ்தானத்தில் உலா வரும்பொழுது, நல்ல யோகங்களைக் கொடுப்பார். குறிப்பாக குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். கொடுக்கல் -வாங்கல்கள் ஒழுங்காகும். தனவரவு தாராளமாக வந்து கொண்டேயிருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.

    ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகோதர, சகாய ஸ்தானாதிபதியான அவர், அதற்குரிய வீட்டிலேயே சஞ்சரிக்கும் வேளையில் உடன்பிறப்புகளால் உதவி கிடைக்கும். அவர்களின் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடை அகலும். உடன்பிறந்தவர்களின் உத்தியோகத்தில், பணி நிரந்தரமாகலாம்.

    உங்கள் ராசிநாதன் செவ்வாய், ஆனி 12-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஒரு பொற்காலமாகும். இதுவரை சனியின் பார்வையில் சிக்கியிருந்த செவ்வாய், இப்பொழுது விடுபடுவதால் எதிர்பார்த்த நல்ல திருப்பங்கள் வந்து சேரும். இடையூறு சக்திகள் அகலும். கட்டிடப் பணியில் இருந்த தொய்வு மாறும். பொதுவாக ராசிநாதன் பலம் பெற்றிருக்கும் இந்த நேரத்தில், ஆரோக்கியத் தொல்லைகள் அகலும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள்.

    ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், தாய், வாகனம், கல்வி, சுகம் ஆகியவற்றைக் குறிக்கும் இடத்திற்கு வருகிறார். அந்த இடங்களில் உள்ள தடைகள் மறையும். தாய்வழி பிரச்சினைகள் நீங்கும். வாகனம் வாங்க, கட்டிடம் கட்ட, உத்தியோகத்தில் சலுகை கேட்டு விண்ணப்பித்திருந்தால் அது கிடைக்கும். கைவசம் இருந்த நிலம், மதிப்புமிக்கதாக மாறும்.

    ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்கு பஞ்சமாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். தனாதிபதியும், பஞ்சமாதிபதியும் இணையும் போது, தனவரவு தாராளமாகும். பிள்ளைகளுக்கு படிப்பிற்கேற்ற வேலை கிடைத்து, பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும்.

    இம்மாதம் சிவபுராணம் படிப்பதோடு நடராஜர் வழிபாட்டையும் நம்பிக்கையோடு செய்வது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 15, 16, 20, 21, 26, 27, ஜூலை: 1, 2, 12, 13, 14 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். வருங்கால முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி, ஆனி மாதம் 11-ந் தேதிக்கு மேல் நடைபெறும். மாதத் தொடக்கத்தில் சனி, செவ்வாய் பார்வை இருப்பதால், கணவன்- மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து மகிழ்ச்சியடைவதோடு கல்யாண முயற்சி கைகூடும். பணிபுரியும் பெண்களுக்கு சகப்பணியாளர்களால் தொல்லைகள் அதிகரிக்கும்.

    மேஷம்

    தமிழ் மாத ராசிப்பலன்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான குணமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆனால் தனாதிபதி சுக்ரன், விரயாதிபதி குருவுடன் கூடி விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அஷ்டமாதிபதியாக இருக்கும் செவ்வாயும் 12-ம் இடத்திற்குச் செல்லும் போது, திட்டமிடாது செய்யும் சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம், விலை உயர்ந்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப்போகிறது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். எனவே விரய ஸ்தானம் வலுக்கிறது. இதனால் வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படலாம். கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இதனால் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றியாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வைகாசி 11-ந் தேதி முதல் மகரத்தில் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். திட்டமிட்ட பணிகளை குறித்த நேரத்தில் செய்ய இயலாது. வாகனங்களால் தொல்லையுண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் குறுக்கீடு வரலாம். இக்காலத்தில் சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

    இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:மே: 19, 20, 23, 24, 30, 31, ஜூன்: 4, 5 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்க வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும். கணவன் - மனைவி உறவு திருப்தி தரும். உறவினர்களை யும், உடன்பிறப்புகளையும் அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். சனியின் வக்ர காலத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டால் வீண் பழி உண்டாகாது.

    மேஷம்

    வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2022 முதல் 14-06-2022 வரை

    வெள்ளை உள்ளமும், விடாப்பிடியான குணமும் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

    வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். ஆனால் தனாதிபதி சுக்ரன், விரயாதிபதி குருவுடன் கூடி விரய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும்.

    மீன - செவ்வாய் சஞ்சாரம்

    வைகாசி 3-ந் தேதி, மீன ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அஷ்டமாதிபதியாக இருக்கும் செவ்வாயும் 12-ம் இடத்திற்குச் செல்லும் போது, திட்டமிடாது செய்யும் சில காரியங்களில் வெற்றி கிடைக்கும். வீண் பழிகளில் இருந்து விடுபடுவீர்கள். என்றைக்கோ வாங்கிப் போட்ட இடம், விலை உயர்ந்து உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யப்போகிறது. விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து இணைவர். வாகன மாற்றம் செய்ய முன்வருவீர்கள்.

    சனி - செவ்வாய் பார்வைக் காலம்

    வைகாசி 3-ந் தேதி முதல் மாதக் கடைசி வரை, மீனத்தில் உள்ள செவ்வாயை மகரத்தில் உள்ள சனி பார்க்கப் போகிறார். எனவே விரய ஸ்தானம் வலுக்கிறது. இதனால் வாங்கிய இடத்தை விற்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படலாம். கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.

    புதன் வக்ர நிவர்த்தியும், ரிஷப சஞ்சாரமும்

    வைகாசி 7-ந் தேதி, மேஷ ராசியில் புதன் வக்ர நிவர்த்தியாகிறார். இதனால் சகோதர ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வைகாசி 23-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் செல்கிறார். இதனால் பாக்கிகள் வசூலாகி பரவசப்படுத்தும். காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். வழக்குகளில் திருப்பம் ஏற்படும். திறமைக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும்.

    மேஷ - சுக்ரன் சஞ்சாரம்

    இதுவரை உச்சம் பெற்று மீனத்தில் சஞ்சரித்து வந்த சுக்ரன், வைகாசி 10-ந் தேதி உங்கள் ராசிக்கு வருகிறார். இதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் வெற்றியாகும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள். கல்யாண முயற்சி கைகூடும்.

    மகரச் சனியின் வக்ர காலம்

    உங்கள் ராசிக்கு 10, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அவர் வைகாசி 11-ந் தேதி முதல் மகரத்தில் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. தொழில் வளர்ச்சியில் தடைகள் ஏற்படலாம். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். திட்டமிட்ட பணிகளை குறித்த நேரத்தில் செய்ய இயலாது. வாகனங்களால் தொல்லையுண்டு. வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளிலும் குறுக்கீடு வரலாம். இக்காலத்தில் சனிபகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நல்லது.

    இம்மாதம் செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள்.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:மே: 19, 20, 23, 24, 30, 31, ஜூன்: 4, 5 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- வைலட்.

    பெண்களுக்கான பலன்கள்

    இம்மாதம் வரவைக் காட்டிலும் செலவு அதிகரிக்கும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்க வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள். குலதெய்வ வழிபாடு குடும்ப முன்னேற்றத்திற்கு வித்திடும். கணவன் - மனைவி உறவு திருப்தி தரும். உறவினர்களை யும், உடன்பிறப்புகளையும் அனுசரித்துச் செல்லுங்கள். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். சனியின் வக்ர காலத்தில் மிகுந்த கவனத்தோடு செயல்பட்டால் வீண் பழி உண்டாகாது.

    மேஷம்

    March : வேகம் மற்றும் விவேகத்தோடு செயல்பட்டு வெற்றி காணும் மேஷ ராசி நேயர்களே.

    13.2.2022 முதல் 14.3.2022 வரை

    வேகம் மற்றும் விவேகத்தோடு செயல்பட்டு வெற்றி காணும் மேஷ ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் செவ்வாய் 9-ம் இடத்தில் தனாதிபதி சுக்ரனோடு கூடிஇருக்கிறார். எனவே தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.

    ராகு-கேது ஆதிக்கம்

    உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் ராகுவும், 8-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ராகுவின் சஞ்சாரத்தால் தனவரவு தாராளமாக வந்து சேரும். அதே நேரம் குடும்பப் பிரச்சினை அதிகரிக்கும். கோபத்தால், உறவினர்களை பகைத்துக் கொள்ள நேரிடும். உழைப்பு அதிகம் தேவைப்படும். அஷ்டமத்தில் கேது இருப்பதால் அடிக்கடி ஆரோக்கியத் தொல்லை ஏற்படும். பயணங்களில் அடிக்கடி மாற்றம் வரலாம். சுபவிரயங்களை மேற்கொள்வதன் மூலம் வீண் விரயங்களில் இருந்து விடுபடலாம்.

    மகர - சுக்ரன் சஞ்சாரம்

    மாசி மாதம் 14-ந் தேதி, மகர ராசிக்கு சுக்ரன் செல்கிறார். மகர சுக்ரனால் நிகரற்ற வாழ்வு உங்களுக்கு வரப்போகிறது. காரணம் தன, சப்தமாதிபதியாக விளங்குபவர் சுக்ரன். அவர் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய பங்குதாரர்கள் வந்து இணைவார்கள். பொருளாதாரநிலை உயரும். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை, சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் எண்ணம் கைகூடும். வரன்கள் பார்த்துக் கொண்டிருந்தால், அது சுமுகமாக முடியும்.

    உச்ச செவ்வாய் சஞ்சாரம்

    உங்கள் ராசிநாதன் செவ்வாய், மாசி 14-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அங்கு அவர் உச்சம் பெறுவதால், மிகுந்த யோகம் வரப்போகிறது. உடல்நலம் சீராகும். இருப்பினும் அங்குள்ள சனியோடு செவ்வாய் சேர்வது சில தாக்கத்தையும் ஏற்படுத்தலாம். எனவே முடிந்த அளவு கவனத்தோடு செயல்படுங்கள். தொழில் பங்குதாரர்களால் தொல்லை உண்டு. புதிய ஒப்பந்தங்கள் வந்தால் அதை ஏற்றுக்கொள்ள இயலாத சூழ்நிலை உருவாகும். தைரியமும், தன்னம்பிக்கையையும் தேவைப்படும் நேரம் இது.

    கும்ப - புதன் சஞ்சாரம்

    உங்கள் ராசிக்கு 3, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். சகோதர, சகாய ஸ்தானம் மற்றும் ஜீவன ஸ்தானத்திற்கும் அதிபதியான புதன், மாசி 17-ந் தேதி உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்திற்கு வருகிறார். உத்தியோக முன்னேற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம். நல்ல நிறுவனங்களில் இருந்து கூடுதல் சம்பளத்துடன் அழைப்புகள் வரலாம். கும்ப ராசியில் உள்ள சூரியன், குருவோடு இணைவதால் அரசுவழி ஆதாயம் உண்டு. அரசாங்க வேலைக்காக முயற்சி செய்து விண்ணப்பித்தவர்களுக்கு அதுவும் கிடைக்கலாம்.

    இம்மாதம் அஷ்டமத்து கேது இருப்பதால், வெள்ளிக்கிழமை தோறும் விநாயகப்பெருமானை வழிபடுவது நல்லது.

    பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- பிப்ரவரி: 15, 16, 26, 27, மார்ச்: 2, 3, 10, 11, 14மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.

    பெண்களுக்கான பலன்கள்

    பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும் மாதம் இது. கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெறுவதால், நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். வீடு வாங்கும் யோகம் உண்டு. படித்து முடித்த பிள்ளைகளுக்கு உத்தியோகமும், உயர்பதவிகளும் கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.

    ×