search icon
என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    தமிழ் திரையுலகில் இளம் நடிகராக வலம் வரும் அதர்வா, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தை சற்குணம் இயக்க உள்ளார்.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த முரளியின் மூத்த மகன் அதர்வா. பாணா காத்தாடி படம் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வருகிறார். இவர் கைவசம் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம், ஒத்தைக்கு ஒத்த, அட்ரஸ் போன்ற படங்கள் உள்ளன. இதில் தள்ளிப் போகாதே, குருதி ஆட்டம் போன்ற படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. 

    இதையடுத்து நடிகர் அதர்வா நடிக்க உள்ள புதிய படத்தை வாகை சூடவா, களவாணி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்க உள்ளார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம், அஜித்தின் விஸ்வாசம் போன்ற பட பாணியில் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.

    சற்குணம், அதர்வா
    சற்குணம், அதர்வா

    இப்படத்தில் நடிகர் ராஜ்கிரணும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். நடிகர் அதர்வா, ராஜ்கிரணுக்கு பேரனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ள இப்படத்திற்கு லோகநாதன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
    பாலிவுட்டில் ஏராளமான படங்களில் நடித்து பிரபலமான நடிகை சுரேகா சிக்ரி, 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.
    பாலிவுட்டில் கடந்த 1978ம் ஆண்டு வெளியான ‘கிசா குர்சி கா’ என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சுரேகா சிக்ரி. இதையடுத்து ஏராளமான இந்தி மற்றும் மலையாள படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்த இவர், 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை வென்றுள்ளார்.

    1988ம் ஆண்டு வெளியான 'தமஸ்', 1995ம் ஆண்டு வெளியான 'மம்மூ', 2018-ம் ஆண்டு வெளியான ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.

    சுரேகா சிக்ரி
    சுரேகா சிக்ரி

    இந்நிலையில், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேகா சிக்ரி, இன்று காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 74. நடிகை சுரேகா சிக்ரியின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
    கமல், விஜய் சேதுபதி முதன்முறையாக இணைந்து நடிக்கும் ‘விக்ரம்’ படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கி உள்ளது.
    மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். 

    அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டே வெளியான போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.

    விக்ரம் படக்குழு
    விக்ரம் படக்குழு

    இந்நிலையில், இன்று விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கும் காட்சிகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படமாக்கி வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
    ரோல்ஸ் ராய்ஸ் கார் விவகாரத்தில் நடிகர் விஜய் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
    நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது. நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது. இதையடுத்து சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது.

    இந்நிலையில், வாகன நுழைவுவரி பாக்கியை செலுத்த நடிகர் விஜய் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

    இதுகுறித்து விஜய்யின் வழக்கறிஞர் குமரேசன் கூறியிருப்பதாவது: “வரி கட்டக்கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை. வரி விதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்டு இருந்ததால்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது. அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆக வேண்டும் என்ற உத்தரவு இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி விஜய் கட்டியிருப்பார். 

    விஜய்
    விஜய்

    சமூகத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, வரி விதிப்பிலிருந்து யாரும் விலகி ஓடவோ, வெளியேறவோ முடியாது. அது விஜய்க்கும் நன்றாகத் தெரியும். ஆனால், இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து, அபராதமும் விதித்திருக்கிறார். தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறோம்.

    இது தனி நீதிபதியின் தீர்ப்பு என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான், எங்கள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யப்போகிறோம். இந்த மேல்முறையீடுகூட வரி கட்ட முடியாது என்பதற்காகவோ, அபராதம் செலுத்தக் கூடாது என்பதற்காகவோ கிடையாது. ஆட்சேபனைக்குரிய கருத்துகளை எதிர்த்துதான். இவ்வளவு காரசாரமான மன வருத்தமளிக்கும் கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது என்பதுதான் எங்களது வாதம். அதை சட்டப்படியாக எதிர்கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.
    கடந்த வாரம் சர்ப்ரைஸாக மோஷன் போஸ்டரை வெளியிட்ட வலிமை படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறதாம்.
    நடிகர் அஜித்தின் 60-வது படம் வலிமை. எச்.வினோத் இயக்கி உள்ள இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    அஜித்
    அஜித்

    வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கடந்த வாரம் சர்ப்ரைஸாக வெளியிட்டு அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்திய வலிமை படக்குழு, தற்போது அடுத்த அப்டேட்டை வெளியிட தயாராகி வருகிறதாம். அதன்படி, வலிமை படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
    அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என பெயரிடப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
    சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

    இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என பெயரிடப்பட்டு உள்ளது. இதன் டைட்டில் லுக் போஸ்டரை கமல்ஹாசன் வெளியிட்டார். இப்படத்தை விஷால் வெங்கட் இயக்குகிறார். இப்படத்தில் மற்றொரு ஹீரோவாக நாசரின் மகன் அபிஹாசன் நடிக்கிறார்.

    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் போஸ்டர்
    சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் போஸ்டர்

    மேலும் அஞ்சு குரியன், ரித்விகா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். இப்படத்தை ஏ.ஆர்.எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் அஜ்மல் கான் மற்றும் ரியா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். ராதன் இசையமைக்கும் இப்படத்திற்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். 
    “இதுபோன்று டி.வி.யை உடைக்க வேண்டாம், பிறகு உன் தந்தை என்னிடம்தான் டி.வி. வாங்கி கொடுக்க சொல்லுவார்” என்று தனது குட்டி ரசிகனுக்கு சோனுசூட் அறிவுரை கூறியுள்ளார்.
    தெலங்கானா மாநிலம் சூர்யாபேட் மாவட்டத்தை சேர்ந்தவர் குருவையா. இவரது 7 வயது மகன் விராட், நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகனாம். குருவையா தனது மகனை உறவினர் வீட்டு திருமணத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அவரது மகன் விராட், சோனு சூட் நடித்த ‘துக்குடு’ என்ற தெலுங்கு படத்தை ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தான். 

    ‘துக்குடு’ படத்தில் ஹீரோ மகேஷ் பாபு, வில்லன் சோனு சூட்டை அடித்து துவம்சம் செய்வது போன்று ஒரு சண்டைக் காட்சி இடம்பெற்றிருக்கும். தனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் அடிவாங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாத விராட், மகேஷ் பாபு மீதான ஆத்திரத்தில் டி.வி மீது கல்லை எறிந்துள்ளான். டி.வி உடையும் சத்தம் கேட்டதும், உறவினர்கள் அங்கு விரைந்தனர். அதன்பிறகு தான் சிறுவன் விராட், சோனு சூட்டுக்காக டி.வி.யை உடைத்தது தெரியவந்தது. 

    சிறுவன் விராட் மற்றும் அவர் உடைத்த டி.வி.யின் புகைப்படம்
    சிறுவன் விராட் மற்றும் அவர் உடைத்த டி.வி.யின் புகைப்படம்

    இந்த செய்தியை அறிந்த சோனு சூட், “இதுபோன்று டி.வி.யை உடைக்க வேண்டாம். பிறகு உன் தந்தை என்னிடம்தான் டி.வி. வாங்கி கொடுக்க சொல்லுவார்” என்று தனது குட்டி ரசிகன் விராட்டுக்கு அறிவுரை கூறியுள்ளார்.
    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குனர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் ‘நானே வருவேன்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது. 

    நானே வருவேன் படத்தின் போஸ்டர்
    நானே வருவேன் படத்தின் போஸ்டர்

    இந்நிலையில், கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இதில், நடிகர் விஷ்ணு விஷாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் தனுஷுக்கு தம்பியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
    ஷங்கர் - ராம்சரண் கூட்டணியில் உருவாக உள்ள தெலுங்கு படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தை தில் ராஜு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

    இந்நிலையில், இப்படத்தில் பிரபல வில்லன் நடிகர் ஜெகபதி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் ராம்சரணுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ‘ரங்கஸ்தலம்’ படத்தில் இணைந்து நடித்திருந்த ஜெகபதி பாபுவும், ராம்சரணும், தற்போது மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர்.

    ஜெகபதி பாபு
    ஜெகபதி பாபு

    நடிகர் ஜெகபதி பாபு, தற்போது சிவா - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் அமீர்கான் நடிப்பில் உருவாகி வரும் ‘லால் சிங் சட்டா’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் லடாக்கில் நடைபெற்றது.
    டாம் ஹாங்ஸ் நடிப்பில் 1994-ல் வெளியாகி வெற்றி பெற்ற ‘பாரஸ்ட் கம்ப்’ ஹாலிவுட் படம் இந்தியில் ‘லால் சிங் சட்டா’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இதில் அமீர்கான் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பை சமீபத்தில் லடாக்கில் நடத்தினர். படப்பிடிப்பை முடித்து விட்டு கிளம்பியதும் அந்த பகுதியில் குப்பைகளை படக்குழுவினர் அப்படியே போட்டு விட்டு சென்றதாக சர்ச்சை கிளம்பியது. 

    படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் கிடந்ததை ஒருவர் வீடியோவில் படம் எடுத்து டுவிட்டரில் பகிர்ந்து “லடாக்கின் வாகா கிராமத்தினருக்கு அமீர்கான் படக்குழுவினர் விட்டு சென்ற பரிசு இது. சுற்றுச்சூழல் தூய்மை பற்றி அமீர்கான் அதிகம் பேசுவார். அவரது படப்பிடிப்பு தளம் அசுத்தமாக உள்ளது’’ என்று கூறியிருந்தார். இதையடுத்து அமீர்கானை பலர் தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

    அமீர்கான்

    இதையடுத்து அமீர்கான் பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களுடைய படப்பிடிப்பு தளம் சுத்தமாக இல்லை என்று குற்றச்சாட்டுகள் வருகின்றன. படப்பிடிப்பு தளத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதில் உறுதியாக இருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள தனிக்குழுவையே வைத்துள்ளோம். நாங்கள் எப்போதுமே படப்பிடிப்பை முடித்து விட்டு அந்த இடத்தை சுத்தப்படுத்தி விட்டு தான் செல்கிறோம்’’ என்று கூறியுள்ளது.
    குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் ப்ரோ டாடி படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.
    பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி மீண்டும் 'ப்ரோ டாடி' படம் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.

    இப்படத்தில் பிருத்விராஜ், கல்யாணி பிரியதர்ஷன், மீனா, லாலு அலெக்ஸ், முரளி கோபி, கனிகா உள்ளிட்ட பலர் மோகன்லாலுடன் நடிக்கவுள்ளனர். குடும்பப் பின்னணி கொண்ட கதையாக உருவாகும் இந்தப் படத்தை ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்து வருகிறார்.

    மோகன்லால்
    மோகன்லால் - பிருத்விராஜ்

    இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலால் படப்பிடிப்பு அனுமதி வழங்கப்படவில்லை. ஆகையால், ஐதராபாத்தில் இதன் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர்.
    தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை சமந்தாவின் புதிய படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிகரின் மகள் ஒருவர் அறிமுகமாக இருக்கிறார்.
    முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தெலுங்கில் 'சகுந்தலம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். 'ருத்ரமாதேவி' படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் குணசேகர், மகாபாரத கதையை அடிப்படையாகக் கொண்டு 'சகுந்தலம்' படத்தை இயக்கி வருகிறார். 

    அல்லு அர்ஜுன்
    அல்லு அர்ஜுன் மகள்

    இந்த நிலையில், தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக, இப்படத்தில் அறிமுகமாகிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கும் அல்லு அர்ஹா 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த அறிவிப்பை அல்லு அர்ஜுன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
    ×