என் மலர்
சினிமா செய்திகள்

அக்ஷரா சிங்
கூட்டத்தில் சிக்கிக் கொண்ட நடிகை.. போலீசார் தடியடி..
- சமீபத்தில் கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் அக்ஷரா சிங் கலந்து கொண்டார்.
- இவரிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல போஜ்புரி நடிகை அக்ஷரா சிங். சமீபத்தில் கர்வாவில் நடந்த ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் உரைக்குப் பிறகு நடன நிகழ்ச்சிக்காக அவர் அங்கு வந்திருந்தார். ஆனால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த போஜ்புரி நடிகையிடம் சிலர் தவறாக நடந்து கொண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா நிகழ்ச்சியில்
கூட்டமாக அவரை திணறடித்தனர். இதனால் அவர் கூட்டத்திற்குள் சிக்கி கொண்டார். கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பலர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் கோபமடைந்த அக்ஷரா சிங் நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Next Story