என் மலர்
சினிமா செய்திகள்

இன்று மாலை வெளியாகிறது வீர தீர சூரன்: விக்ரம் ரசிகர்களிடம் இயக்குநர் மன்னிப்பு கோரினார்
- அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்
- விக்ரமின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியீடு
சித்தா' பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக 'வீர தீர சூரன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. 'வீர தீர சூரன்' படம் இன்று (மார்ச் 27) வெளியாகவிருந்தது.
இந்நிலையில், வீர தீர சூரன் படத்திற்கு நிதி வழங்கியதால் படத்தின் பெரும்பாலான உரிமைகள் தங்களிடம் உள்ளதாகவும், தங்களின் அனுமதியை பெறாமல் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டதாக படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான B4U என்டர்டெயின்மென்ட் நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுத்தது.
இந்த் வழக்கின் விசாரணையில் வீர தீர சூரன் படத்தை வெளியிட 4 வாரங்களுக்கு தடை விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் வீர தீர சூரன் படத்தின் காலை, மதிய காட்சிகள் திரையிடப்படவில்லை.
இந்நிலையில், தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தில் முதலீடு செய்த B4U நிறுவனம் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்பட்டது.
இதனையடுத்து, வீர தீர் சூரன் படத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், 3 நாட்களுக்குள சேட்டிலைட் உரிம ஆவணங்களை வழங்க வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்பந்தத்தை மாலை 5 மணிக்குள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து வீர தீர சூரன் படம் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அப்படத்தின் இயக்குநர் அருண் குமார் வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
வீர தீர சூரன் படம் வெளியீடு தாமதமானதற்காக படக்குழுவினர் சார்பாக விக்ரமின் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் என்று அந்த வீடியோவில் இயக்குநர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.