search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் விஜய் தேவரகொண்டா
    X

    ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்கும் விஜய் தேவரகொண்டா

    • கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
    • அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்

    தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. இவர் கீத கோவிந்தம், அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை.

    அந்த வகையில் கடைசியாக இவர் பேமிலி ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். பரசுராம் பெட்லா இயக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

    அதைத்தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தன்னுடைய 12-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கௌதம் தினனுரி இயக்கி வருகிறார். சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் இதற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். கவுதம் தினனுரி இதற்கு முன் நானி நடிப்பில் வெளிவந்த ஜெர்ஸி திரைப்படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆக்ஷன் காட்சிகளுக்கு பெயர் போன அன்பறிவு மாஸ்டர் இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகளை கையாளுகின்றனர்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி இந்த படம் கைதி படத்தை போல் பாடல்களே இல்லாத படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. விறுவிறுப்பான இந்த கதைக்கு பாடல்கள் தேவைப் படாததால் இந்த முடிவை படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் அனிருத்தின் பின்னணி இசை மிரட்டலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    Next Story
    ×