என் மலர்
வழிபாடு

40 நாட்கள் தவக்காலம் தொடங்குகிறது: கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை `சாம்பல் புதன்' சிறப்பு வழிபாடு

- தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும்.
- 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னை:
கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை கடை பிடிக்கப்படுகிறது. இந்த காலத்தை இலையுதிர் காலம் என்றும் கூறுவது உண்டு.
பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் நம்மை சீரமைத்து கொள்ளக் கூடிய காலமாக இந்த தவக்காலம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக கருதப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) சாம்பல் புதனை யொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நாளையில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து எளிய முறையில் ஆலய வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.
கத்தோலிக்க திருச்சபையில் நாளை நடைபெறும் சாம்பல் புதன் ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பூசி வழிபாடுவார்கள். இந்த சிறப்பு ஆராதனை நாளை காலையில் நடைபெறும்.
தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பெந்தேகோஸ்து, இ.சி.ஐ., லுத்தரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பிற திருச்சபைகளில் சாம்பல் புதன் ஆராதனை நாளை மாலை நடைபெறும்.
தவக்காலத்தில் பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்ப்பார்கள். அசைவ உணவு உள்ளிட்ட ஆடம்பர செலவினங்களை தவிர்த்து அவற்றை ஏழைகளுக்கு உதவிடும் வகையில் காணிக்கையாக ஆலயத்திற்கு செலுத்துவார்கள்.
தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும். ஒவ்வொரு வாரமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து திருச்சபைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை இந்த வழிபாடு நடைபெறும். இதில் குடும்பத்துடன் கிறிஸ்தவர்கள் பங்கேற்பார்கள்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 13-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, 18-ந்தேதி பெரிய வெள்ளி, 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.