என் மலர்tooltip icon

    வழிபாடு

    சனி பெயர்ச்சியால் ஏற்படும் பொது பலன்கள்!
    X

    சனி பெயர்ச்சியால் ஏற்படும் பொது பலன்கள்!

    • வருகிற 29-ந்தேதி சனிப்பெயர்ச்சி.
    • சனிப்பெயர்ச்சி மிகவும் நல்ல பெயர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

    வருகிற 29-ந்தேதி நிகழ இருக்கும் சனிப்பெயர்ச்சி மிகவும் நல்ல பெயர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

    சனி பகவான் குருவின் வீட்டில் அமர்வதால், ஆன்மிகம் தொடர்பான பிரச்சினை அதிகரிக்கும். போலி ஆன்மிகவாதிகளை மக்கள் கண்டறிந்து ஒதுக்குவார்கள்.

    அதே வேளையில் புனிதமான சந்நியாசிகள் குறு பீடங்கள் தொடர்பாக போலியான செய்திகளும் பரவும். எனவே மக்கள் செய்திகளை பகுத்தறிந்து பார்த்து செயல்பட வேண்டியது அவசியம்.

    கல்வி நிறுவனங்கள் தொடர்பான சர்ச்சைகள் அதிகரிக்கும். ஒருமித்த கருத்துக்கள் ஏற்படுத்த முடியாமல் ஆட்சி செய்பவர்கள் திண்டாடுவார்கள்.

    என்றாலும் சனிபகவானின் பார்வையால் சர்ச்சைகள் அனைத்தும் மக்களுக்கு நன்மையாகவே முடியும். பொருளாதாரம் நல்ல படியாகவே அமையும்.


    இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியப் பொருளாதாரம் நிலை பெற்று உலக அளவில் மதிக்கப்படும். இந்தியாவின் மதிப்பு உலக அளவில் உயரும்.

    மலைப் பகுதிகளில் நிலச்சரிவுகள், பெரும் மழைப்பொழிவு ஆகியவை ஏற்படும். அரசாங்கம் முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், சேதங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.

    கடல்சார் ஆராய்ச்சியிலும் கடல்சார் பொருளாதாரத்தி லும் நல்லதொரு முன்னேற்றம் உண்டாகும். கடல்மாசை குறைக்கும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபடும். மீன் வளம் அதிகரிப்பதால் மீனவர்கள் வாழ்க்கை நன்றாக அமையும்.

    சர்வதேச கடல் எல்லைப் பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

    பெண்களுக்குச் சகல நிலைகளிலும் ஏற்றமும் முன்னேற்றமும் உண்டாக வாய்ப்பு உண்டு.

    பெரும்பாலான துறைகளில் பெண்கள் கோலோச்சுவார்கள், அரசியல் சார்ந்த பெண்களின் ஆளுமையும் சாதுரிய மும் உலகை வியக்க வைக்கும். சமூக செயல்பாடுகளிலும் பொது காரியங்களிலும் அவர்களின் பங்களிப்பு வலுவாக இருக்கும்.

    மற்றபடி உலகில் ஆங்காங்கே போர் பதட்டங்கள் அதிகரிக்கும். ரத்தம் சம்பந்தமான புதிய நோய்கள் பரவ வாய்ப்பு உண்டு.

    காற்றில் பரவும் நோய்கள் புதிதாக தோன்றும். அதேவேளையில் தீர்க்க முடியாத கேன்சர் போன்ற நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும்.

    இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் உலக அளவில் பாராட்டப்படும். கலைத்துறையைச் சார்ந்தவர்க ளுக்கு இந்த சனிப்பெயர்ச்சி மிகுந்த நன்மை தருவதாக அமையும்.

    அந்த வகையில் இந்த சனிப்பெயர்ச்சியில் கும்பம், மீனம், மேஷம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் ஏழரைச் சனிக்காலத்துக்கு ஆட்படுகிறார்கள்.

    ஏழரைச் சனி என்றதும் பயம் கொள்ளத் தேவையில்லை. அப்படியே அஷ்டமத்துச் சனி, ஜென்மச் சனி போன்ற நிலைகளை எண்ணியும் கலங்க வேண்டியதில்லை. சனி பகவான் நம் வினைகளைக் கரைக்க அருள் செய்பவர்.

    Next Story
    ×