என் மலர்
வழிபாடு

சனி பகவானின் சிறப்புகள்!
- சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள்.
- சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட மக்களிடம் பிரபலமானவர்.
சனிபிடித்தவன் சந்தைக்கு போனாலும் கந்தலும் அகப்படாது என்பார்கள். இப்படி சனியை பலகோணங்களில் வசை பாடினாலும் அவரின் மகத்துவம் சிறப்பானது. சனி ஒருவர் மட்டுமே பிற கிரகங்களை விட உலகத்து மக்களிடம் பிரபலமானவர்.
குரு கிரகத்திற்கு அடுத்த கிரகம் சனி, குறுக்களவு உத்தேசமாக 73 ஆயிரம் மைல். குமரிமாவட்டம் சுசீந்திரம் தாணுமாலையர் கோவிலில் கல்சிலையாக தூணில் பெண்உருவில் காட்சி தருகிறார். நெல்லையை அடுத்த கருங்குளத்தில் சனி பகவான் நீலாவுடன் அமர்ந்துள்ளார்.

மனித உடலில் தொடைகளுக்கு உடையவர், குடல் வாதநோய் இவரால் ஏற்படும்,
மேலும் ஹிரண்யா, முதுகு வலி, விரைவீக்கம், முடக்கு வாதம் யானைக்கால், பேய்தொல்லை, மூலநோய்.
மனதளர்ச்சி இவையும் இவரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் இந்நோய் பிடித்தவர்கள் சனியை வணங்குவதால் நோயின் வேகம் வெகுவாக தணியும்.
சனி ஜாதகத்தில் 3,6,10,11-ல் இருந்தால் நிலபுலம் வாங்குதல், வீட்டு வசதி, விவசாயத்தில் ஈடுபாடு, உத்யோகம், வருவாய் பெரியோர் ஆதரவு தலைமை தாங்கும் பொறுப்பு இவையாவும் சுலபத்தில் வந்து விடும்.
8-ம் இடத்து சனி, தொல்லைகள் அளித்தாலும் ஆயுளை அதிகரிக்கச்செய்வார். ரேகை சாஸ்திரத்தில் நடுவிரலுக்கு நேர் கீழ்பாகம் உள்ள சனி மேட்டில் அதிக ரேகைகள் செங்குத்தாக காணப்பட்டால் ஒன்றல்ல பல வீடுகள் சுலபமாக அவர்களை நாடிவரும்.
12-ல் சனி இருக்க பிறந்தோர் வாழ்க்கைத் துணைக்கு வேட்டு வைக்கும் சுபாவம் நிலைக்கும்.
ஊதாரித்தனம் வந்த வருமானம் நாலாவிதமாக தீய வழியில் செல விடுதல் போன்றவை நிகழும்.

பெருவிரலை அடுத்த சுக்கிரமேட்டில் பலவித குறுக்கு கோடுகள் அடியில் காணப்பட்டால் சனிபாடாய்படுத்தப் போவதற்கான அறிகுறி என உறுதியாக நம்பலாம்.
4-ல் சனி அன்னைக்கு அற்ப ஆயுள், கெட்ட நண்பர்கள் சேர்க்கை, வேண்டாத வம்பில் நம்மை இணைப்பது நிகழும்.
சனிபகவான் ஜாதகத்தில் சீராக அமைந்திந்தால் இரும்பு, மெஷினரி, இரும்பு தொழிற்சாலை, தோல், சிமென்ட் ஏஜென்ட்., தயாரிப்பு, கரும்பலகை, ரோஸ்உட், நல்லெண்ணை மொத்த வியாபாரம் மற்றும் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டால் வெற்றிதரும்.
சனியன்று சந்திராஷ்டம தினமாக மகர ராசி திருவோண நட்சத்திரத்தில் பிறந்தோருக்கு அமையப்பெற்றால் அன்று கண் பார்வைக்காக அறுவை சிகிச்சை செய்தல் கூடாது.