என் மலர்
வழிபாடு

6 ராசிக்காரங்க நிம்மதியா இருக்கலாம்.. 29-ந்தேதி சனிப்பெயர்ச்சி இல்லை- கடைசியில் வெளியான தகவல்
- சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் தொடர்பான செய்திகள் அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
- சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் பங்குனி மாதம் 15-ம் நாள் அதாவது வருகிற 29-ந்தேதி இரவு 9.44 மணிக்கு திருக்கணித பஞ்சாப்படி சனி பகவான் தனது சொந்த வீடான கும்ப ராசி பூரட்டாதி 3-ம் பாதத்தில் இருந்து குருவின் வீடான மீன ராசி பூரட்டாதி 4-ம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.
இதனால் 12 ராசிகளுக்குமான பொதுப்பலன், சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் தொடர்பான செய்திகள் அண்மை காலமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனால் சனிப்பெயர்ச்சியால் பாதிக்கப்படும் ராசிக்காரர்கள் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.
இந்த நிலையில், வருகிற 29-ந்தேதி சனிப்பெயர்ச்சி இல்லை என்று திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், வாக்கிய பஞ்சாக முறைப்படி அடுத்த ஆண்டு அதாவது 2026-ல் தான் சனிப்பெயர்ச்சி நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் கவலையில் ஆழ்ந்த ராசிக்காரர்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.