என் மலர்tooltip icon

    வழிபாடு

    மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்
    X

    தேரோட்டம் நடந்த போது எடுத்த படம்.

    மயிலாடுதுறை வதாரண்யேஸ்வரர் கோவில் தேரோட்டம்

    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்தனர்.
    • கடைமுக தீர்த்தவாரி விழா இன்று நடைபெறுகிறது.

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 18-ந் தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் கடைசி 10 நாட்கள் உற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக வதாரண்யேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நேற்று மாலை 2 மணி அளவில் தொடங்கிய தேரோட்டம் மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.

    Next Story
    ×