என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
    • கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.

    சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே நாஷிக்கில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசினார். அப்போது உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    * மும்பை கொள்ளையடிக்கப்படுகிறது. மும்பையில் இருந்து அனைத்தும் குஜராத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

    * கவர்னர் இடத்தை வேறு எங்கேயாவது மாற்றிவிட்டு, மும்பை ராஜ் பவனை சிவாஜி மகாராஜாவின் நினைவிடமாக மாற்ற வேண்டும்.

    * நான் பாஜக-வில் இருந்து பிரிந்து விட்டேன். இருந்தாலும் உயிர் போனாலும் இந்துத்துவாவை கைவிடமாட்டேன்.

    * பாஜகவின் சிதைந்து வரும் இந்துத்துவாவை நான் ஏற்கவில்லை.

    * சிவசேனா இல்லாமல், பாஜக அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் நிலையை எட்டியிருக்காது.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    • சென்செக்ஸ் 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
    • நிஃப்டி 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் இன்று தொடர்ந்து 3ஆவது நாளாக ஏற்றத்துடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பால் இந்திய பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது. உலக நாடுகள் எதிர்ப்பால் டிரம்ப் 90 நாட்களுக்கு இந்த வரி விதிப்பை நிறுத்தி வைத்துள்ளார்.

    இதனால் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டு வருகின்றன. நேற்றைய முன்தினம், நேற்றைய வர்த்தக முடிவில் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டிருந்தன. இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது.

    புதிய வெளிநாட்டு முதலீடு, சில்லறை பணவீக்கம் கடந்த ஆறு வருடங்களாக இல்லாத வகையில் குறைந்துள்ளது பங்குச் சந்தை உயர்வுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

     மும்பை பங்குச் சந்தை குறியீடு எண் செக்செக்ஸ் நேற்றைய வர்த்தக முடிவில் 76,734.89 ஆக இருந்தது. இன்று காலை சுமார் 260 புள்ளிகள் உயர்ந்து 76,996.78 புள்ளிகள் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 76,543.77 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 77,110.23 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 309.40 புள்ளிகள் உயர்ந்து 77,044.29 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இந்திய பங்குச் சந்தை குறியீடு எண் நிஃப்டி நேற்றைய வர்த்தக முடிவில் 23,328.55 புள்ளியாக இருந்தது. இன்று காலை 16 புள்ளிகள் உயர்ந்து 23,344.10 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. குறைந்தபட்சமாக 23,273.05 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,452.20 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 108.65 புள்ளிகள் உயர்ந்து 23,437.20 புள்ளிகள் வர்த்தகம் நிறைவடைந்தது.

    • மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
    • அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

    பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் வந்துள்ளது. மும்பையில் வோர்லி போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸப் எண்ணுக்கு, சல்மான் கானை அவரது இல்லத்தில் வைத்து கொலை செய்துவிட்டு அவரது வாகனத்தை வெடிகுண்டு வைத்து தகர்த்த போவதாக மிரட்டல் செய்தி வந்துள்ளது. மிரட்டல் வந்த எண்ணை வைத்து அடையாளம் தெரியாத நபரை வோர்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் மிரட்டல் விடுத்ததாக அடையாளம் காணப்பட்ட குஜராத்தின் வதோதராவைச் சேர்ந்த  மயங்க் பாண்டியா என்ற 26 வயது இளைஞரை வோர்லி போலீசார் இன்று  கைது செய்தனர். ஆனால் அவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர்போல் காணப்பட்டுள்ளார். இதனால் ஒரு நோட்டீசுடன் அவர் விடுவிக்கப்பட்டார்.

    முன்னதாக மும்பையில் உள்ள சல்மான் கானின் கேலக்ஸி அபார்ட்மெண்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத இரண்டு பைக் ஓட்டுநர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    இதன் பின்னர், அவரது வீட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு, அவரது நெருங்கிய நண்பரும் என்சிபி தலைவருமான பாபா சித்திக் கடந்த வருடம் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போதிருந்து, சல்மானின் பாதுகாப்பு மிகவும் இறுக்கமாக செய்யப்பட்டுள்ளது, அவரது வீட்டின் பால்கனியின் கண்ணாடி கூட குண்டு துளைக்காததாக மாற்றப்பட்டுள்ளது.

    கடந்த 1998-ஆம் ஆண்டு சல்மான்கான் ராஜஸ்தானுக்கு படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அப்போது அரிய வகை பிளாக் பக் மான்களை அவர் வேட்டையாடியதாக தெரிகிறது. இது தொடர்பான வழக்கில் சல்மான் கான் நீதிமன்றத்தை நாடி ஜாமின் பெற்றார். பிஷ்னோய் மக்களின் குருவான 16-வது நூற்றாண்டில் வாழ்ந்த ஜம்புகேஸ்வரரின் மறு வடிவமாக அந்த அரியவகை மான்கள் கருதப்பட்டுகிறது. இதனால் பிஷ்னோய் சமூகத்தை சேர்ந்த லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் தொடர்ந்து சல்மான் கானுக்கு மிரட்டல் விடுகின்றனர்.

    • பயங்கரவாத அமைப்பு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
    • ராணாவுக்கு துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 11-ந் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மிகப் பெரிய தாக்குதல் நடத்தினார்கள். இதில் 166 பேர் உயிரிழந்தனர். 238 பேர் படுகாயமடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களில் பாகிஸ்தான்- அமெரிக்கா பயங்கரவாதி டேவிட் ஹெட்லியும் ஒருவர். இவரது நெருங்கிய நண்பர் ராணா.

    ராணாவுக்கு பாகிஸ்தானை சேர்ந்த பல்வேறு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்தது. அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு லாஸ் ஏஞ்சல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார்.

    டெல்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டு 18 நாட்கள் ராணாவிடம் விசாரணை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 4-வது நாளாகவும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் ராணாவை நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

    பயங்கரவாத அமைப்பு மும்பை தாக்குதலுக்கு பின்னர் பல்வேறு நகரங்களிலும் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். அதன் அடிப்படையில் அவரை பல நகரங்களுக்கு அழைத்து செல்ல முடிவு எடுத்துள்ளனர்.

    மேலும், கொச்சியில் ராணாவின் குரல் மாதிரிகளும் ஆய்வு செய்யபடவுள்ளது. என்.ஐ.ஏ. அதிகாரிகளின் காவலில் இருக்கும் முக்கிய சாட்சி ஒருவர் கொச்சியை சேர்ந்தவர். அவர் பயங்கரவாதி ராணா மற்றும் டேவிட் ஹெட்லி ஆகியோருக்கு உதவியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதுதொடர்பாக மேலும் விசாரணை நடத்தவும் ராணாவை தெற்கு பகுதி நகரங்களுக்கு அழைத்து வருகின்றனர். ராணாவிடம் விசாரணை நடத்தும் 19 என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவில் 2 பேர் கொச்சியை சேர்ந்தவர்கள்.

    ராணாவுக்கு துபாயில் உள்ள தாவூத் இப்ராகிம் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

    என்.ஐ.ஏ. அதிகாரிகளின் விசாரணைக்கு ராணா முழுமையாக ஒத்துழைக்கவில்லை. இருந்தாலும் அவர் மும்பை தாக்குதலுக்கு முன்னதாக அவர் மும்பையில் இருந்ததை ஒத்துக்கொண்டுள்ளார். அவரிடம் மேலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள்.
    • 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை வழக்கப்படுகிறது.

    முத்ரா யோஜனா திட்டத்தின்கீழ் 52 கோடி மக்களுக்கு தொழில் தொடங்குவதற்காக பிணையில்லாமல் 33 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதில் பயனடைந்தவர்களில் 68 சதவீதம் பேர் பெண்கள் ஆவார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

    மேலும், "இந்த கடன் 50 ஆயிரம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும். இன்று, இந்த உதவி மூலம் மக்கள் புதிய வியாபார முயற்சிகளை தொடங்குகின்றனர். அத்துட்ன நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கின்றனர்.

    கடந்த 10 ஆண்டுகளாக மத்திய அரசு கட்டமைப்புகளுக்கான பட்ஜெட்டை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன" என்றார்.

    • ஐபிஎஸ் ஆன பிறகு அப்பெண்ணை அந்த நபர் தவிர்த்தகத் தொடங்கியுள்ளார்.
    • அந்த நபரின் பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு பதிலளிக்கவில்லை.

    மகாராஷ்டிராவின் நாக்பூரில் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பெண் மருத்துவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக 30 வயது ஐபிஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட பெண் அந்த நபரை இன்ஸ்டாகிராம் மூலம் சந்தித்து நண்பர் ஆகியுள்ளார். அப்போது அந்த பெண் எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருந்தார். அந்த நபர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

    பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல முறை அவருடன் அந்த நபர் உடல் ரீதியாக உறவில் ஈடுபட்டுள்ளார்.

    இதற்கிடையே அந்த நபர் யுபிஎஸ்சி தேர்வில் வென்று ஐபிஎஸ் அதிகாரி ஆனார். அந்த பெண்ணும் படிப்பை முடித்து மருத்துவர் ஆனார். ஐபிஎஸ் ஆன பிறகு அப்பெண்ணை அந்த நபர் தவிர்த்தகத் தொடங்கியுள்ளார். ஆனால் அந்த நபர் பெண்ணை  திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார்.

    அந்த நபரின் பெற்றோரும் அந்தப் பெண்ணுக்கு பதிலளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அவரது புகாரின் அடிப்படையில், ஐபிஎஸ் அதிகாரி மீது இன்று பாலியல் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

    • 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.
    • ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது.

    26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் முக்கிய குற்றவாளியான தஹாவூர் உசேன் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள பீகார் சட்டமன்றத் தேர்தலின் போது, ராணாவை மோடி அரசு தூக்கிலிடும் என்று சிவசேனா (யுபிடி) எம்பி சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

    முன்னதாக ராணா வியாழக்கிழமை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய சிறிது நேரத்திலேயே தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அவரை கைது செய்தது. மேலும் 18 நாட்கள் என்ஐஏ காவலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் பாஜக இதை அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தும் என்று சஞ்சய் ராவத் குற்றம் சாட்டினார். அவர் கூறியத்தவது, "ராணாவை உடனடியாக தூக்கிலிட வேண்டும், ஆனால் அவர் பீகார் தேர்தலின் போது தூக்கிலிடப்படுவார். ராணாவை நாடு கடத்துவது 16 வருடப் போராட்டம். அது காங்கிரஸ் ஆட்சியின் போது தொடங்கியது. எனவே ராணாவை மீண்டும் கொண்டு வந்ததற்கான பெருமையை யாரும் எடுத்துக்கொள்ளக்கூடாது" என்று கூறினார்.

    பீகாரில் ஆளும் பாஜக-ஜேடியு கூட்டணி, காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணியுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. பாஜக-ஜேடியு கூட்டணி கூட்டணி ஆட்சிக்கு வந்தால் முதல்வர் பதவியைக் கோரும் வகையில், பாஜக தனது வாக்கு எண்ணிக்கையை மேம்படுத்திக் கொள்வதில் ஆர்வமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே சஞ்சய் ராவத்தின் கருத்துக்கள் வந்துள்ளன.  

    • அண்ணிக்கும் நாத்தனாருக்கும் இடையிலான சண்டையில் நாத்தனார் கடித்துள்ளார்.
    • அண்ணி அளித்த புகார் அடிப்படையில் போலீசார் பயங்கர ஆயுதம் மூலம் காயம் ஏற்படுத்துதல் பிரிவில் வழக்குப்பதிவு.

    மிகப்பெரிய அளவில் தீங்கு விளைவிக்கும் வகையில் மனித பற்கள் அபாயகரமான ஆயுதங்களாக கருத முடியாது என, பெண் ஒருவர் தனது நாத்தனார் கடித்ததில் காயம் ஏற்பட்டதாக கூறிய புகாரில், எஃப்.ஐ.ஆர்.-யை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

    மும்பையில் சொத்து விசயமாக ஒரு பெண்ணிற்கும் அவரது நாத்தனாருக்கும் (கணவரின் தங்கை) இடையில் தகராறு இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் கைகலப்பு ஏற்பட்டபோது, நாத்தனார் தனது அண்ணியை கடித்துள்ளார்.

    இதனால் அந்த பெண் (அண்ணி) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல் நிலையத்தில் காயம் விளைவிக்கக் கூடிய பயங்கர ஆயுதத்தால் தாக்குதல் பிரிவின் கீழ் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பயங்கர ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதாக தன் மீது போடப்பட்டுள்ள எஃப்.ஐ.ஆர்-யை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்சில் மனுத்தாக்கல் செய்தது.

    இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனித பற்களை பயங்கரமான ஆயுதங்களாக கருத முடியாது. இதனால் பயங்கர ஆயுதங்கள் மூலமாக காயம் ஏற்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.-யை ரத்து செய்வதாக உத்தரவிட்டுள்ளது.

    மருத்துவ சான்றிதழில் பற்கள் தடம் பதிந்துள்ளது. அதனால் லேசான காயம்தான் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் விபா கண்கண்வாடி, சஞ்சய் தேஷ்முக் தெரிவித்துள்ளனர்.

    இந்த தண்டனைச் சட்டம் பிரிவு 324-ன் கீழ் குற்றம் நிரூபிக்கப்படாதபோது, குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணையை எதிர்கொள்ள வைப்பது சட்ட செயல்முறையை தவறாகப் பயன்படுத்துவதாகும் எனத் தெரிவித்துள்ளது.

    • வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை தானேயில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

    மும்பை:

    பிரபல இந்தி நடிகர் சைஃப் அலி கான் மகாராஷ்டிர மாநிலம் மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் 11-வது மாடியில் வசித்து வருகிறார்.

    கடந்த ஜனவரி 16-ந்தேதி அதிகாலை அவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் சைஃப் அலி கானை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த வழக்கில் வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் என்பவரை தானேயில் வைத்து போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவிய அவர் தனது பெயரை மாற்றிக்கொண்டு சுற்றியது தெரிய வந்தது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணை பாந்த்ரா கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், குற்றவாளி மீதான பல ஆதாரங்கள் உள்பட 1000 பக்க குற்றப்பத்திரிகையை கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளதாக பாந்த்ரா போலீசார் தெரிவித்தனர்.

    இந்த குற்றப்பத்திரிகையில் தடயவியல் ஆய்வகத்தின் அறிக்கையும் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்திலும், சைஃப் அலி கான் உடலில் இருந்து மீட்கப்பட்ட கத்தி துண்டுகள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவரின் கைரேகை அறிக்கை உள்ளிட்டவையும் குறிப்பிடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    • பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது.
    • கத்தி, இரும்புச் சங்கிலி, காண்டம் பாக்கெட் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டன.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் கோட்டி என்ற பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பைகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டது. அப்போது கத்திகள், இரும்புச் சங்கிலிகள், சைக்கிள் சங்கிலிகள், காண்டம் பாக்கெட்டுகள், சீட்டுக்கட்டுகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையறிந்த அந்தப் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

    இதுதொடர்பாக, துணை முதல்வர் கூறுகையில், மாணவர்களில் சிலர் போதைப்பொருள்களுக்கு அடிமையாகி இருக்கலாம் என்றும், பள்ளி உள்ளேயே போதைப் பொருட்களை பயன்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதுபோல் பல நாட்கள் நடத்திய சோதனையில் பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

    மாணவர்களின் தவறான நடத்தை மட்டுமின்றி சமூக ஊடகங்களில் காணப்படும் தீய உள்ளடக்கங்களும், தவறான நட்பு வட்டங்களின் பாதிப்புகளும் காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. கண்டிப்பான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு முறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர்.

    • நான்கரை லட்சம் சதுர அடி நிலத்தை சுமார் ரூ.21 கோடிக்கு வாங்கியுள்ளார்.
    • வழக்கு நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    முகேஷ் அம்பானி, நீதா அம்பானி மற்றும் ஆகாஷ் அம்பானியின் ஆடம்பரமான இல்லமான ஆன்டிலியா, நாட்டின் மிகவும் ஆடம்பரமான வீடுகளில் ஒன்றாகும். பக்கிங்ஹாம் அரண்மனைக்கு பிறகு 2-வது மிக விலையுயர்ந்ததாக திகழம் இந்த வீடு ரூ.15,000 கோடி மதிப்புள்ளதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலராலும் ஆச்சரியப்பட்ட இந்த வீடு தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.

    இதற்கு காரணம் அதன் ஆடம்பர வசதிகள் குறித்தோ வீட்டின் உரிமையாளர்கள் குறித்தோ அல்ல... ஆம் சமீபத்தில் வக்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அது சட்டமாகியுள்ளது. அந்த சட்டத்தின் படி, வக்பு வாரியத்தின் சொத்தை தனியார் பயன்பாட்டிற்கு விற்க முடியாது. இதற்கும், அந்த வீட்டிற்கும் எந்த சம்பந்தம் என்று தானே எண்ணத்தோன்றுகிறது.

    மும்பையின் பரேட் சாலை பகுதியில் அமைந்துள்ள இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த ஆடம்பரமான வீடான ஆன்டிலியா, வக்பு வாரியத்தின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி 2002 ஆம் ஆண்டில் வக்பு வாரியத்திடமிருந்து நான்கரை லட்சம் சதுர அடி நிலத்தை சுமார் ரூ.21 கோடிக்கு வாங்கியுள்ளார்.



    மேலும், நிலத்தின் முந்தைய உரிமையாளரான கரீம் பாய் இப்ராஹிம், மதக் கல்வி மற்றும் அனாதை இல்லம் கட்டுவதற்காக வக்பு வாரியத்திற்கு நிலத்தை வழங்கியுள்ளார். ஆனால் இந்த இடம் விற்பனையில் அப்படி இல்லை. ஏனெனில் அந்த நிலம் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானிக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்த வழக்கு நீண்ட காலமாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே, வக்பு சட்டம் அமலாகியுள்ளதால் இது அம்பானிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வழக்கின் முடிவு அம்பானி குடும்பத்திற்கு எதிராக வழங்கினால், அவர்கள் வீட்டை காலி செய்ய வேண்டியிருக்கும்.

    • மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது.
    • இந்திய பங்குச் சந்தை இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு காரணமாக உலகளாவிய பங்குச் சந்தைகள் இன்று கடும் ஆட்டம் கண்டன. அமெரிக்கா முதல் இந்திய பங்கு சந்தை வரை கடும் வீழ்ச்சியை எதிர்கொண்டன. ஜெர்மனி பங்குச் சந்தை 10 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ், இந்திய பங்குச் சந்தை நிஃப்டி ஆகியவை இன்று கடும் சரிவை சந்தித்தன. கடந்த வெள்ளிக்கிழமை மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 75,364.69 புள்ளிகளில் முடிவடைந்தது.

    இன்று காலை 3,915.35 புள்ளிகள் சரிந்து 71,449.94 புள்ளிகளுடன் வர்த்தகம் தொடங்கியது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.

    மதியம் ஒரு மணி வரை சற்று ஏறுவதும், இறங்குவதுமாக இருந்தது. மதியம் ஒரு மணிக்குப் பிறகு மெல்லமெல்ல ஏற்றம் கண்டது. இறுதியாக 2,226.79 புள்ளிகள் சரிந்து 73,137.90 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று அதிகபட்சமாக 73,403.99 புள்ளிகளிலும், குறைந்த பட்சமாக 71,425.01 புள்ளிகளிலும் வர்த்தகமானது.

    மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் போல், இந்திய பங்குச் சந்தை நிஃப்டியும் இன்று தொடக்கத்தில் கடுமையாக சரிவை சந்தித்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்திய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 22,904.45 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    இன்று காலை நிஃப்டி 1,146.05 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியது. இன்று அதிகபட்சமாக 22,254.00 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 21,743.65 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 742.85 புள்ளிகள் குறைந்து 22,161.60 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

    ×