என் மலர்
உத்தரப் பிரதேசம்
- அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
- தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆளும் பாஜக கட்சிக்கும், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதிக்கும் இடையில் கருத்து மோதல் வலுத்துள்ளது.
சமீபத்தில் தனது சொந்த தொகுதியான கன்னோஜில் வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ், கன்னோஜ் தொகுதி எப்போதும் சகோதரத்துவத்தின் நறுமணத்தை பரப்பியுள்ளது. கன்னோஜ் மக்கள், இந்த பாஜக துர்நாற்றத்தை முற்றிலுமாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அவர்கள் (பாஜக) துர்நாற்றத்தை விரும்புகிறார்கள், அதனால் தான் அவர்கள் பசுத் தொழுவங்களை கட்டுகிறார்கள்.
ஆனால், எங்களுக்கு வாசனை திரவியம் பிடிக்கும், அதனால் தான் நாங்கள் இங்கு ஒரு வாசனை திரவிய பூங்காவைக் கட்டினோம் என்று தெரிவித்தார்.
முன்னதாக தங்கள் அரசாங்கத்தால் கட்டப்பட்ட வாசனை திரவிய பூங்காயும், தற்போது பாஜக அரசால் அதிகளவில் கட்டப்பட்டுவரும் பசுத்தொழுவங்களையும் ஒப்பிட்டு அவர் இவ்வாறு பேசியிருந்தார்.

இந்நிலையில் யோகி ஆதித்யநாத் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் இதற்கு பதிலடி கொடுத்தார்.
அவர் கூறியதாவது, சமாஜ்வாதியினர் பசுவின் சாணம் நாற்றமடிப்பதாக கூறுகிறார்கள். உண்மை என்னவென்றால் பசுவதை செய்வோருடன் அவர்கள் பசுக்களை கொடுத்து வந்தனர்.
பசுக்கடத்தல், பசுவதை செய்வோருக்கும் சமாஜ்வாதியினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. நாங்கள் பசுவதை செய்வோர் மீது நடவடிக்கை எடுத்ததால் தற்போது சமாஜ்வாதியினர் எங்களை கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு கோமாதாவுக்கு சேவை செய்வது பற்றி என்ன தெரியும்?.
அவர்களுக்கு பசுவின் சாணம் நாற்றமடிகிறது. ஆனால் தங்கள் செயல்களின் துர்நாற்றத்தை அவர்கள் பார்ப்பதில்லை. அதனால்தான் கோமாதாவுக்கு சேவை செய்வதை அவர்களின் தலைவர் (அகிலேஷ் யாதவ்) நாற்றமாக நினைக்கிறார் என்று தெரிவித்தார்.
- கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன்.
- அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல என தெரிவித்தார்.
லக்னோ:
சமீபத்தில் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். காரியாலயத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது, விரைவில் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் என தகவல் வெளியானது.
இதற்கிடையே, பிரதமர் மோடிக்குப் பிறகு அமித்ஷா அல்லது உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் இருவரில் ஒருவர் பிரதமர் பதவியை ஏற்க உள்ளனர் என செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், உத்தரப் பிரதேச முதல் மந்திரியான யோகி ஆதித்யநாத் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான் இப்போது மாநில முதல் மந்திரியாக இருக்கிறேன். இதுவும்கூட கட்சி தான் என்னை உத்தரப் பிரதேச மக்களுக்காக இந்த பொறுப்பை வழங்கியுள்ளது.
அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல. நான் ஒருபோதும் என்னை முழு நேர அரசியல்வாதியாகக் கருதியது இல்லை. கட்சி இந்தப் பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன். ஆனால் உண்மையில் நான் ஒரு யோகி. இங்கு இருக்கும் வரை இந்த வேலையை செய்வேன். ஆனால் இந்த வேலையும் ஒரு கட்டத்தில் முடிந்துவிடும்.

நான் முதல் மந்திரியாக இருக்கவே கட்சி தான் காரணம். தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் நான் இங்கே தொடர்ந்து முதல் மந்திரியாக இருக்கமுடியுமா?
தேர்தலில் யாரைக் களமிறக்கலாம் என்பதைக் கட்சியின் பாராளுமன்ற குழு தான் முடிவு செய்யும். எல்லா விவாதமும் அங்கு தான் நடக்கும்.
பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். எனவே சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லக் கூடாது. ஆனால், வேண்டும் என்றே இதுபோல பேசுபவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது என தெரிவித்தார்.
- உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம்
- வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்.
தேசிய கல்விக்கொள்கையில் இடம்பெற்ற மும்மொழிக் கொள்கையை இந்து திணிப்பு என தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2000 கோடி வரையிலான கல்வி நிதியை மத்திய அரசு தர மறுத்துவிட்டது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் மொழியை வைத்து குறுகிய அரசியல் செய்வதாக பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மீண்டும் விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் தமிழ்நாடு மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பது குறித்து யோகி ஆதித்யநாத் விமர்சித்திருந்த நிலையில் செய்தி நிறுவனத்துக்கு அளித்த நேர்காணலில் மீண்டும் அதே விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் மொழி சர்ச்சையை குறுகிய அரசியல் நலன்களுக்காக உருவாக்குகிறார்கள். இதன்மூலம் அவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம், ஆனால் இளைஞர்களின் வேலைவாய்ப்பைத் தடுக்கிறார்கள்.

உ.பி.யில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், பெங்காலி மற்றும் மராத்தி மொழிகளைக் கற்பிக்கிறோம், அதனால் உ.பி. சிறியதாகிவிட்டதா?. மாறாக உத்தர பிரதேசத்தில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன"
முன்னதாக யோகி ஆதித்யநாத்தின் முந்தைய விமர்சனத்துக்கு பதிலளித்திருந்த முதல்வர் ஸ்டாலின், "எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மொழி திணிப்பையும் ஆதிக்கத்தையுமே நாங்கள் எதிர்க்கிறோம். வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை, இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம். வெறுப்பு குறித்து யோகி ஆதித்யநாத் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக நிலத்தை கையகப்படுத்தியது.
- உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து
212 கி.மீ நீளமுள்ள டெல்லி-டேராடூன் விரைவுச் சாலைப் பணியை முடிக்க அப்பகுதியில் அமைந்துள்ள இடத்தில 1,600 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள வீடு தடையாக உள்ளது.
1998 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச வீட்டுவசதி வாரியம் தனது நிலத்தை கையகப்படுத்த முயற்சித்ததை எதிர்த்து வீர்சென் சரோஹா என்பவர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தை அணுகினார். உயர்நீதிமன்றம் வீர்சென் சரோஹாவிற்கு சாதகமாக தீர்ப்பளித்தது.
இப்போது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவுச் சாலைக்காக அவரது நிலத்தை கையகப்படுத்தியதால், வீர்சென் சரோஹாவின் பேரன் லக்ஷயவீர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ அமர்விற்கு பரிந்துரைத்து. ஏப்ரல் 16 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளது.
இந்த விரைவுச் சாலை கட்டி முடிக்கப்பட்டவுடன், டெல்லிக்கும் டேராடூனுக்கும் இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கணவனை கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகில் கைது செய்யப்பட்டனர்.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகிலுடன் சேர்ந்து கொலை செய்து பிளாஸ்டிக் டிரம்மில் சிமெண்ட் கலவையை நிரப்பி அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகில் கைது செய்யப்பட்டனர்.
தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் டிரம்மில் கணவனை கொலை செய்து அடைத்து வைத்த சம்பவத்தால் அப்பகுதியில் டிரம் விற்பனை சரிந்துள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அக்கம் பக்கத்தினரின் கிண்டலுக்கு உள்ளாவோம் என புதிய டிரம் வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டுவதால், மாதம் 60 டிரம் வரை விற்பனையான நிலையில் தற்போது 15 டிரம் விற்பனையாவதே சவாலாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- விபத்து ஏற்படுத்திய லம்போர்கினி கார் பறிமுதல்
- கார் மோதியதில் காயமபட்ட 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்ட வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து, விபத்து ஏற்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு, காரை ஓட்டிய தீபக் என்ற நபரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கைதான தீபக்கிற்கு சூரஜ்பூரில் உள்ள நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி கார் நின்றது.
விபத்துக்கு பின்பு எடுக்கப்பட்ட வீடியோவில், "விபத்துக்குள்ளான சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரை நோக்கி கட்டுமான தொழிலாளர்கள் ஓடுகின்றனர். காரை ஓட்டிய நபரிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "இந்த விபத்தில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்க, அதற்கு காரை ஓட்டியவர், 'இங்கே யாராவது இறந்தார்களா?' என்று அலட்சியமாக பதில் கூறினார்.
கார் மோதியதில் காயமடைந்த 2 தொழிலாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களது உயிருக்கு ஆபத்தில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.
- நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
- அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?.
ரம்ஜான் பண்டிகையை சுதந்திரமாக கொண்டாட பாஜக தலைமையிலான அரசு தடைகளை ஏற்படுத்துவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-
நமது ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பிற்கும் இன்று மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. நான் இதை சொல்லக்கூடாது என்றாலும், முழுப்பொறுப்புடன் செல்கிறேன். பாஜக நாட்டை அரசியலமைப்பின்படி நடத்தவில்லை.
நீங்கள் பல வருடங்களாக ரம்ஜான் பண்டிகையை பார்த்து இருப்பீர்கள். இதுபோன்று அதிக அளவில் தடுப்பு வேலி அமைக்கப்பட்டிருப்பதை இதற்கு முன்னதாக பார்த்து இருக்கிறீர்களா?. போலீசார் காரணங்கள் ஏதுமின்றி என்னுடைய பாதுகாப்பு வாகனங்களை (Convoy) வேண்டுமென்றே அரைமணி நேரம் நிறுத்தி வைத்தனர்.
நான் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறேன் என்று கேட்டபோது, எந்த அதிகாரியிடமும் பதில் இல்லை. இதை நான் என்னவென்று அழைப்பது? சர்வாதிகாரமா? அறிவிக்கப்படாத அவசரநிலையா? அல்லது பிற சமூகங்களின் நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருக்க எங்களை மிரட்டும் முயற்சியா?
இவ்வாறு அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
- இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மிரட்டிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோண்டா:
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த சவுரவ் சுக்லா என்பவரை அவரது மனைவி முஸ்கான் ரஸ்தோகி மற்றும் அவரது காதலன் ஷாகிலுடன் சேர்ந்து கொலை செய்து தண்ணீர் நிரப்பி வைக்கப்படும் பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து வைத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கணவருடன் தகராறில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை, அதிகமாக பேசினால் மீரட் படுகொலை போன்றே உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்து விடுவேன் என மிரட்டி உள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள கோண்டா பகுதியை சேர்ந்தவர் என்ஜினீயர் தர்மேந்திர குஷ்வாஹா. இவரும், பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த மாயா மவுரியா என்பவரும் காதலித்து கடந்த 2016-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவருக்கு ஒரு மகள் உள்ளார்.
என்ஜினீயர் தர்மேந்திர குஷ்வாஹா தனது மனைவி பெயரில் நிலத்தை வாங்கி வீடு கட்டுவதற்கான ஒப்பந்ததை தனது உறவினரான நீரஜ் மவுரியாவிடம் கொடுத்தார். அதன்பிறகு மாயாமவுரியா, நீரஜூடன் நெருங்கி பழகினார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவரும் நெருக்கமாக இருப்பதை தர்மேந்திர குஷ்வாஹா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் மனைவியிடம் கேட்டபோது, அவரும் நீரஜூம் சேர்ந்த தர்மேந்திர குஷ்வாஹாவை தாக்கி உள்ளனர். மேலும் மாயா வீட்டில் இருந்து நகை, பணத்துடன் தலைமறைவானார். இதுதொடர்பாக குஷ்வாஹா போலீசில் புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாயா வீட்டுக்கு வந்தார். அப்போது தர்மேந்திர குஷ்வாஹா மற்றும் அவரது தாய் ஆகியோரை மாயா மவுரியாவும், நீரஜூம் சேர்ந்து தாக்கி உள்ளனர்.
மேலும் தர்மேந்திர குஷ்வாஹாவை பார்த்து, நீ அதிகமாக பேசினால், மீரட் படுகொலை போல உன்னையும் வெட்டி டிரம்மில் அடைத்துவிடுவேன் என மாயா மிரட்டி உள்ளார்.
இதற்கிடையே தனது கணவர் பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும், அவர் தன்னை நான்குமுறை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்தியதாகவும் மாயா கூறினார்.
இருதரப்பு புகார்களின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மாயா தர்மேந்திர குஷ்வாஹாவை மிரட்டிய சி.சி.டி.வி. வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நான் மெதுவாக ஆக்ஸிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார்
- அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் காரில் வந்த நபர் 2 பேரை மோதிவிட்டு, "இங்கு யாராவது இறந்தார்களா என்ன? என்று அலட்சியமாக கேட்டுள்ளார்.
இன்று மாலை நொய்டாவின் செக்டார் 94 இல், கட்டுமானத்தில் உள்ள ஒரு வளாகத்தை ஒட்டிய நடைபாதையில் ஒரு சிவப்பு லாம்போர்கினி கார் இரண்டு தொழிலாளர்கள் மீது மோதியது. பின் மரத்தில் மோதி நின்றது.
சம்பவத்தின் பின் இதுதொடர்பாக வெளியான வீடியோவில், நடைபாதையில் சிவப்பு நிற லாம்போர்கினி ஸ்போர்ட்ஸ் கார் நின்றிருப்பதும், கட்டுமான தொழிலாளர்கள் அதை நோக்கி ஓடுவதையும் காட்டியது.
காரை ஒட்டியவர்களிடம் அந்த தொழிலார்கள்களில் ஒருவர், "நீங்கள் இங்கு ஸ்டண்ட் கற்றுக்கொண்டீர்களா?, இங்கே எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் தெரியுமா?" என்று கேட்கிறார்.
அதற்கு காரை ஓட்டியவர் அலட்சியமாக, இங்கே யாராவது இறந்தார்களா? என்று கேட்கிறார். அந்த வீடியோவைப் பதிவுசெய்து கொண்டிருந்த நபர், "காவல் துறையினரை அழைக்கவும்" என்று கூறுகிறார் அதற்கு கார்ஓட்டி "நான் மெதுவாக ஆக்சிலரேட்டரை அழுத்தினேன்" என்று கூறினார், அதற்கு வீடியோ எடுப்பவர், " அதை மெதுவாக அழுத்தினீர்களா?" என்று கேட்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கார் மோதியதில் படுகாயமபட்ட 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர்கள் ஆபத்தில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.
மேலும் அந்த லாம்போர்கினி கார் புதுச்சேரியில் பதிவுசெய்யப்பட்டது என்று தெரிவித்தனர். கார் பறிமுதல் செய்யப்பட்டு, அதை ஓட்டி வந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
உத்தரப் பிரதேசத்தில் கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட விரக்தியில் 9 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள கமலா ஷரன் யாதவ் இன்டர் பள்ளியில் பயின்று வந்த 9 ஆம் வகுப்பு மாணவி ரியா பிரஜாபதி (17 வயது) நேற்று தேர்வு எழுத சென்றுள்ளார்.
பள்ளிக் கட்டணத்தில் ரூ.800 நிலுவைத் தொகையை செலுத்தாததால் அவரை தேர்வு எழுத அனுமதிக்காமல் பள்ளி நிர்வாகத்தினர், கட்டணம் செலுத்தாததற்காக அவரை அவமானப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வருத்தத்துடன் வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தற்கொலை செய்த சிறுமியின் தாய் பேசுகையில், "பள்ளி மேலாளர் சந்தோஷ் குமார் யாதவ், அதிகாரி தீபக் சரோஜ் மற்றும் முதல்வர் ராஜ்குமார் யாதவ் மற்றும் பலர் அவளை எல்லோர் முன்னிலையிலும் அவமானப்படுத்தியுள்ளனர். அவளை தேர்வு எழுத விடவில்லை.
அவர்களின் நடத்தையால் வருத்தமடைந்த என் மகள் வீட்டிற்கு திரும்பி வந்து தன் அறைக்குச் சென்றாள். நான் வயலில் வேலை செய்து கொண்டிருந்தேன்.
நான் வீடு திரும்பியபோது, என் மகள் தூக்கில் தொங்குவதை கண்டேன்" என்று தெரிந்தார். பள்ளி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்தினர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]
- மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.
- பிரசவத்தின்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் 50 வயது பெண் ஒருவர் தனது 14 வது குழந்தையை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹாபூர் மாவட்டம் பில்குவாவில் உள்ள பஜ்ரங்புரியில் வசிப்பவர் இமாமுதீன். இவரது 50 வயது மனைவி குடியா. இவர்களுக்கு 13 குழந்தைகள். மூத்த மகன் வயது 22. கடைசி குழந்தை வயது 3.
இந்நிலையில் 50 வயதில் மீண்டும் கருத்தரித்த குடியா, கடந்த வெள்ளிக்கிழமை 14வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. மருத்துவமனை செல்லும்போது ஆம்புலன்ஸிலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. அப்போது அவரது 22 வயது மகனும் உடன் இருந்தார்.

அதன்பின் குடியாவும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர்.
இமாமுதீனின் மனைவிக்கு 14வது குழந்தை பிறந்த செய்தியைக் கேள்விப்பட்ட பிறகு, அருகிலுள்ள பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல், தொலைதூர இடங்களிலிருந்தும் மக்கள் இமாமுதீனையும் அவரது 14 குழந்தைகளை கொண்ட குடும்பத்தையும் வருகிறார்கள்.
- ஏப்ரல் 6 ஆம் தேதி உ.பி. முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை
- அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரிக்கை
உத்தரபிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 31) முதல் ஏப்ரல் 6 வரை மத வழிபாட்டு தலங்களில் இருந்து 500 மீட்டர் தூரத்திற்குள் சட்டவிரோத இறைச்சிக் கூடங்கள் செயல்படுவதையும், இறைச்சி விற்பனை செய்வதையும் உத்தரப் பிரதேச அரசு தடை செய்துள்ளது.
மேலும், ராமநவமியை முன்னிட்டு ஏப்ரல் 6 ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சி விற்பனைக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என்று பாஜக அரசு தெரிவித்துள்ளது.
அரசின் உத்தரவை மீறுபவர்கள் மீது உ.பி. மாநகராட்சி சட்டம் மற்றும் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாஜக அரசு எச்சரித்துள்ளது.