என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தமிழக பட்ஜெட்- செங்கல்பட்டு உள்பட 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா தமிழக பட்ஜெட்- செங்கல்பட்டு உள்பட 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா](https://media.maalaimalar.com/h-upload/2023/03/20/1852469-chengalpattu.webp)
X
தமிழக பட்ஜெட்- செங்கல்பட்டு உள்பட 3 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா
By
Suresh K Jangir20 March 2023 2:47 PM IST
![Suresh K Jangir Suresh K Jangir](https://media.maalaimalar.com/h-upload/2024/07/17/3376220-ashphoto.webp)
- சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர்.
- ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.
சென்னை:
2023-24-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் விவரம் வருமாறு:-
சென்னையில் முதன் முறையாக 2000-ம் ஆண்டில் டைடல் பூங்காவை நிறுவி, தகவல் தொழில் நுட்பப் புரட்சிக்கு வித்திட்டவர் கலைஞர். இத்துறையின் வளர்ச்சி தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிக்கும் பயனளித்திட வேண்டும் என்ற நோக்கில் 7 மாவட்டங்களில் நியோ-டைடல் பூங்காக்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் நீட்சியாக ஈரோடு, திருநெல்வேலி, செங்கல்பட்டில் தலா ஒரு லட்சம் சதுர அடி கட்டிடப் பரப்பளவில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும். இதன் மூலம் சுமார் 4 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
X