search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சர்க்கரை நோயினாலும் பாதிக்கப் பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
    • அனைத்து மாவட்டங்க ளிலும் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழக பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழகம் முழுவதும் 18 முதல் 69 வயதுடைய மக்களிடையே நடத்தப்பட்ட களஆய்வின் இறுதி அறிக்கையின்படி, 23.4 சதவீதம் பேர் உயர் ரத்த அழுத்தத்தினாலும், 7.1 சதவீதம் பேர் சர்க்க ரை நோயினாலும், 10.5 சத வீதம் பேர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினாலும் பாதிக்கப் பட்டுள்ளதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இளம் தலைமுறையின ரை பாதிப்பிலிருந்து காத்தி டும் பொருட்டு, தமிழக சுகாதாரதுறை சார்பில் வருகிற 4.11.2023 அன்று முதல்- அமைச்சர் நடப் போம் நலம் பெறு வோம் திட்டத்தை தொடங்கி வைக்க வுள்ளார். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்க ளிலும் இத்திட்டம் செயல்படுத்தபடவுள்ளது.

    அதன்படி கள்ளக்குறிச்சி சுகாதாரதுறை சார்பில், 4.11.2023 அன்று மாவட்ட கலெக்டர் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் முன்னிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அலுவலகத்திலிருந்து தொடங்கி கச்சிராப்பாளை யம் சாலையில் குதிரைச்சந் தல் பஸ் நிறுத்தம் வரை 4 கி.மீ தொலைவிற்கு நடந்து சென்று மீண்டும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தடையும் நடைபயிற்சி யினை தொடங்கி வைக்க உள்ளனர். இத்திட்டத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலை மையில் அனைத்து துறை அலுவலர்கள் கூட்டம் நடை பெற்றது. இதையொட்டி நடப்போம் நலம்பெறு வோம் திட்டம் குறித்து மாவட்ட நடைப்பயண குழுவின் ஆலோசனைபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராஜா கள ஆய்வு மேற்கொண்டதன்படி நடைபயிற்சிக்கான பாதை முடிவு செய்யப்பட்டது.

    நடப்போம் நலம்பெறு வோம் திட்டத்தில் பொது மக்கள் தங்களது உடல்நலம் காக்கும் பொருட்டு நடை பயிற்சி மேற்கொள்ள முன்வர வேண்டும். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் தன்னார்வத்தோடு இதில் கலந்து கொண்டு இதய நோய், ரத்தழுத்த நோய், நீரிழிவு நோய், மன அழுத்த நோய் போன்ற வற்றிலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என மாவட்ட கலெக்டர் தெரி வித்துள்ளார்.

    • 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது.
    • உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது .

    கள்ளக்குறிச்சிடு

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் இலவச திருக்குறள் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:- திருக்குறளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, 1,330 திருக்குறளை மனப்பாடமாக கூறும் மாணவர்களுக்கு 2000-ம் ஆண்டு முதல் தமிழக அரசு பரிசுத்தொகையும், சான்றிதழ்களையும் வழங்கி வருகிறது. உலகத் தமிழ் வளர்ச்சி மன்றம் என்ற அமைப்பு தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 5 ஆண்டுகளுக்கு 2,000 திருக்குறள் புத்தகங்களை விலையில்லாமல் வழங்க முன்வந்துள்ளது. அதன்படி,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு உலகத்திருக்குறள் முற்றோதல் இயக்கம் சார்பில் திருக்குறள் புத்தகங்கள் வழங்கப்படுகிறது . இவ்வாறு அவர் கூறினார்.

    இதனை தொடர்ந்து அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கள்ளக்குறிச்சி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி சின்னசேலம்,அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சின்னசே லம்,பெரிய சிறுவத்தூர் மேல்நிலைப்பள்ளி, பெரிய சிறுவத்தூர் மாதிரி பள்ளி, தாகம்தீர்த்தாபுரம் மேல்நிலைப்பள்ளி, நயினார்பாளையம் மேல்நிலைப்பள்ளி, அரங்கநாதபுரம் உயர்நிலை ப்பள்ளி, மூரார்பாது மகளிர் உயர்நிலை ப்பள்ளி, சேஷச முத்திரம் உயர்நிலைப்பள்ளி, சித்தால் அரசு மாதிரிப் பள்ளி, சித்தேரிப்பட்டு மேல்நிலைப்பள்ளி, அரசம்பட்டு மேல்நிலைப்ப ள்ளி, ஏமப்போர் உயர்நிலைப்பள்ளி எனமொத்தம் 15 அரசு பள்ளி மாணவர்களுக்கு 750 திருக்குறள் புத்தகம் ரூ.7 ஆயிரம் மதிப்பீட்டில் மாவட்ட கலெக்டர் வழங்கி னார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாரா யணன், முன்னாள் இணை இயக்குநர் (நலப்பணிகள்) உதயகுமார், பாரதியார் தமிழ்ச்சங்கம் தலைவர் தியாகதுருகம் துரைமுருகன், சின்னசேலம் திருக்குறள் பேரவை தலைவர்பாசுகரன் என்ற பூங்குன்றன், முன்னாள் துணை கலெக்டர் கிருட்டிணசாமி,மாவட்டத் தொடர்பாளர் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் புலவர் அய்யா மோகன்,அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • மனைவி சின்னப் பிள்ளைக்கும், ராமருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.
    • மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சின்னசேலம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நாகக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் (55). கூலித் தொழிலாளி. இவர் கள்ளக்குறிச்சி அருகே உள்ள நல்லாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னபிள்ளை(50) என்பவரை கடந்த 30 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி தனித்தனியே வசித்து வருகின்றனர்.

    ராமருக்கும் அவரது மாமியார் குடும்பத்தினருக்கும் கடந்த 20 வருடமாக பேச்சுவார்த்தை இல்லை என கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு ராமரின் மாமியார் இறந்து விட்டார்.நேற்று தன்னுடைய தாயின் கரும காரியத்திற்கு செல்வதாக ராமரிடம் சின்னபிள்ளை தெரிவித்துள்ளார்.

    இது சம்பந்தமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர் கரும காரியத்திற்கு கணவரிடம் சொல்லாமல் சின்னபிள்ளை நல்லாத்தூர் கிராமத்திற்கு சென்றதாகத் தெரிகிறது. பின்னர் மாலை வீட்டுக்கு வந்த மனைவி சின்னப் பிள்ளைக்கும், ராமருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த ராமர் நேற்று இரவு 9 மணி அளவில் தூங்கிக் கொண்டிருந்த சின்னப்பிள்ளையின் தலையில் அம்மி குழவி கல்லால் தலையில் பலமுறை அடித்துள்ளார் இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த சின்னப்பிள்ளை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் ராமர் சின்னசேலம் போலீஸ் நிலையத்திற்கு நேரடியாக சென்று தன் மனைவியை கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்தார். இதனை தொடர்ந்து சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சின்னப் பிள்ளையின் உடலை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

    மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர்.
    • அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள இரவார் கிராமத்தை சேர்ந்தவர் ரவி, விவசாயி. இவரது மகள் பைரவி (18).

    இவர் அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். தொடர்ந்து மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுதினார். ஆனால் அதில் குறைந்த மதிப்பெண் பெற்றார். இதனால் பெற்றோர் திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் உடைந்த அவர் கடந்த வாரம் வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்தார்.

    பின்னர் மருந்து குடித்ததை வீட்டில் கூறாமல் வயிற்று வலி என்று பெற்றோரிடம் கூறி வந்தார். இதையடுத்து அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்துள்ளனர். ஆனாலும் தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டுள்ளது .

    இதையடுத்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்த உறவினர்கள் கதறி துடித்தனர்.

    பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட உள்ளது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் அவரது உறவினர்கள் அதிக அளவில் திரண்டுள்ளனர். இதையொட்டி அரசு ஆஸ்பத்திரியில் பாதுகாப்புக்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

    • வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் கார்னரில் செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடு களினால்ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023 -2024 -ம் ஆண்டிற்கான சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் அறிவிப்பு செய்யப்பட்ட பகுதிகளில் நெல் (சம்பா) பயிருக்கு15.11.2023 மற்றும் மக்காச்சோளம், பருத்தி பயிர்களுக்கு 31.10.2023-ம் தேதி வரையிலும்,உளுந்து பயிருக்கு 15.11.2023 வரையும், மணிலா பயிருக்கு 30.12.2023, கரும்பு பயிருக்கு30.3.2024, தோட்டக்கலை பயிர்களான மரவள்ளி பயிருக்கு 29.02.2024, கத்தரி மற்றும்வெங்காயம் பயிருக்கு 31.01.2024 தேதி வரையிலும் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடுசெய்து கொள்ளலாம்.

    மேலும், காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிருக்கு ரூ.487- ம்,மக்கா ச்சோளத்திற்கு ரூ.296-ம், பருத்தி ரூ.484-ம், உளுந்து பயிருக்கு ரூ.207-ம், மணிலாபயிருக்கு ரூ.427, கரும்பு பயிருக்கு ரூ.2,717, மரவள்ளி பயிருக்கு ரூ.1,499, கத்தரி பயிருக்குரூ.808 மற்றும் வெங்காயம் பயிருக்கு ரூ.884 காப்பீட்டுத் தொகையை பொது சேவை மைய ங்கள்,தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும்தேசிய காப்பீட்டு இணைய தளத்தில் உள்ள விவசாயிகள் கார்னரில்செலுத்தி பதிவு செய்து பதிவிற்கான ரசீது பெற்றுக்கொள்ளலாம். அதற்கு தேவை யானஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல்(பசலி ஆண்டு 1433), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம்மற்றும் ஆதார் அட்டை ஆகியவையாகும். பதிவு செய்யும் போது விவசாயின் பெயர் மற்றும்விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகியவிவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்துகொள்ள வேண்டும். கள்ளக் குறிச்சி மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் குறித்த கூடுதல் விவரங்களுக்கு பயிர் காப்பீடு இணையதள முகவரியையோ அல்லது அருகிலுள்ள வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை தொடர்பு கொண்டு இணைந்து பதிவுசெய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர்.
    • மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள எலவடி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வெங்கடேஷ் (வயது 24). இவர் அ.தி.மு.க. கிளை செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை வெங்கடேஷ் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபால் விளையாட முடிவு செய்தனர். போதிய வெளிச்சம் இல்லாததால், விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்த மின் கம்பத்திலிருந்து மின்சாரம் எடுத்து மின் விளக்கினை பொருத்த முயற்சி செய்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக வெங்கடேஷ் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து தகவல் அறிந்த சின்னசேலம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிந்து சின்னசேலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடுமுறை தினங்களில் ஏரியை சுற்றியுள்ள சிறுவர்கள் இங்கு சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதும் வழக்கம்.
    • இதையடுத்து சத்தம் வந்த புதருக்கு அருகே சிறுவர்கள் சென்று பார்த்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பகண்டை கூட்ரோட்டில் பெரிய ஏரி உள்ளது. கடந்த மாதம் பெய்த மழையினால் ஏரி நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது. விடு முறை தினங்களில் ஏரியை சுற்றியுள்ள சிறுவர்கள் இங்கு சென்று குளிப்பதும், மீன் பிடிப்பதும் வழக்கம். அதன்படி இன்று காலை 7 மணிக்கு அப்பகுதி சிறுவர்கள் கையில் தூண்டி லுடன் மீன் பிடிக்க பெரிய ஏரிக்கு சென்றனர். ஏரியின் கரையின் மீது நடந்து சென்ற போது, பாம்பு மூச்சுவிடும் சத்தம் கேட்டுள்ளது. இதை யடுத்து சத்தம் வந்த புதருக்கு அருகே சிறுவர்கள் சென்று பார்த்தனர். அங்கு அதிக தடிமன் கொண்ட நீளமான பாம்பு ஒன்று படுத்துக் கிடந்த தை பார்த்து பயத்தில் வீடு திரும்பினர். அங்கிருந்த வர்களிடம் நடந்த சம்பவத் தை சிறுவர்கள் கூறினர். இதையடுத்து ஏரிக்கரைக்கு சென்ற பொதுமக்கள், அங்கிருப்பது மலைப் பாம்பு என்பதை உறுதி செய்தனர்.

    இதையடுத்து சங்கராபுரம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் பகண்டை கூட்ரோடு பெரிய ஏரிக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். புதருக்கு அருகில் ஏரியில் கரையில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு உலாவிக் கொண்டிருந்தது. அதனை லாவகமாக பிடித்த தீயணைப்பு வீரர்கள், அதனை எடுத்துச் சென்று சங்கராபும் வனப்பகுதியில் விட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது.
    • 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் விவசாய கிணற்றில் உள்ள தண்ணீரில் ஒரு மயில் விழுந்து வெளியே வரமுடியாமல் உயிருக்கு போராடியது. இது குறித்து அப்பகுதி மக்கள் தியாகதுருகம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ராஜா தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுமார் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி பெண் மயிலை உயிருடன் மீட்டனர். இதையடுத்து அந்த மயிலை கள்ளக்குறிச்சி வனத்துறை வனவர் பாலு, மற்றும் வனக்காவலர் ஜெயபால் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

    • சங்கராபுரம் அருகே சாராயம், மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டி யன் தலைமையில் போலீசார் மோட்டாம்பட்டி கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் விஜயகாந்த் (வயது 32) என்பவர் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்தார். உடனே போலீசார் விஜயகாந்தை கைது செய்து, அவரிடமிருந்து 120 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    இதேபோன்று சங்கரா புரம் காவல் உதவி ஆய்வாளர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீ சார் பூட்டை கிராமத்தில் ரோந்து பணியில் ஈடு பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியில் மது பாட்டில் விற்பனை செய்த சிவா (33) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 24 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • கோவிந்தன் .இவரது மனைவி மகேஸ்வரி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    • கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி முதல் மகேஸ்வரியை காணவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட் டம் சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டை சேர்ந்தவர் சிங்காரவேல். இவரது மகன் கோவிந்தன் (வயது 29) லாரி டிரைவர். இவரது மனைவி மகேஸ்வரி (25). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரதாப் (3) என்ற மகன் உள்ளார். கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு இருந்த நிலையில், கடந்த மாதம் (செப்டம்பர்) 30-ந் தேதி முதல் மகேஸ்வரியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோவில்களை புனரமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர்.
    • விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வேங்கைவாடி கிராமத்தில் சுமார் 100 ஆண்டுகள் பழைமையான மாரியம்மன் கோவில் உள்ளது. இக் கோவிலில் புதிய கோபுரம் கட்டி புனரமைக்கவும், இதேபோல் அருகில் உள்ள விநாயகர், முருகன், பெருமாள் ஆகிய கோவில்களை புனரமைக்கவும் அப்பகுதி பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்கள் புனரமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனையடுத்து கோவில்க ளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொ ட்டி நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜை, புண்யாவாஜனம், கும்ப அலங்காரத்துடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது.

    மேலும் நேற்று காலை பிம்பசுத்தி, ரக்ஸாபந்தனம், நாடி சந்தானம் ஆகிய பூஜைகளுடன் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து மேளதாளம் முழங்க கலசங்கள் புறப்பட்டு விநாயகர், முருகன், பெருமாள், மாரியம்மன் ஆகிய கோவில்களின் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெ ற்றது. இதனையடுத்து மூலவர் சாமிகளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் குடியநல்லூர், தியாகை, கொங்கராயபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவி ற்கான ஏற்பாடுகளை அறநி லையத்துறை அதிகாரிகள், விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    அஞ்சலை (வயது 59) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெ க்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் கிடங்குடையாம்பட்டு கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.அப்போது அங்குள்ள காட்டுக்கொட்டாய் பகுதி யில் அரசம்பட்டை சேர்ந்த அஞ்சலை (வயது 59) என்பவர் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அஞ்சலையை கைது செய்து, அவரிடமிருந்து 12 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    ×