search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • வெள்ளையன் நிலத்திற்கு அருகே பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது.
    • ரவி மனைவி செல்வி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படு கிறது.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர் மனைவி செந்தமிழ் செல்வி (வயது 40) ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (43) நிலத்திற்கு அருகே பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்தவெளி கிணறு அமைக்கப்பட்டது. இதனால் வெள்ளையன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவ்வப் ேபாது செந்தமிழ் செல்வியை திட்டியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று தனது வீட்டிற்கு முன்பு நின்று கொண்டு இருந்த செந்தமிழ்செல்வியை வெள்ளை யன், அவரது சகோதரர்கள் பழனி, மாது, நாகராஜ் மற்றும் அவரது உறவினர்கள் பெரியசாமி மகன் கட்டிமுத்து, ரவி மனைவி செல்வி ஆகியோர் திட்டி, தாக்கி கொலை மிரட் டல் விடுத்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து செந்தமிழ் செல்வி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ் குமார் வழக்கு பதிவு செய்து வெள்ளை யன், நாகராஜ் ஆகியோரை கைது செய்தார். மற்றவர்களை தேடி வரு கிறார்.

    • இரு தரப்பினரும் ஒருவரையொரு வர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • வரஞ்சரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே விருகாவூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆதிமூலம் (வயது 50). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் (38) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்ப வத்தன்று இரு தரப்பினரும் ஒருவரையொரு வர் திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து ஆதிமூலம் கொடுத்த புகாரின் பேரில் அரிகிருஷ்ணன், கலிவரதன், மதுர முத்து ஆகிய 3 பேர் மீதும், இதேபோல் ராதா கிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் ஆதிமூலம், ராஜி மற்றும் அவரது மனைவி சிவகாமி, மகன் தனுஷ், ஆதிமூலம் மகன் மணிகண்டன் ஆகிய 5 பேர் மீதும் வரஞ்சரம் போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.
    • மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில், மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் மக்கள்குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதியோர்உதவித்தொகை, வீட்டுமனை பட்டாக் கோருதல், விதவை உதவித்தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித்தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம், நில அளவை தொடர்பான மனுக்கள், வேளாண் உழவர் நலத்துறை சார்ந்த திட்டம் மற்றும் காவல் துறை தொடர்பான பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 515 மனுக்கள் பொதுமக்க ளிடமிருந்து பெறப்பட்டன.

    இதேபோல் மாற்றுத்திற னாளிகளிடமிருந்து 31 மனுக்களும்என மொத்தம் 546 மனுக்கள் தொடர்புடைய அலுவலர்களுக்கு அனுப் பப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்ட லம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்கி 1 கிலோ மீட்டர் முட்டி போட்டுக் கொண்டு12.36 நிமிடத்தில் 2 கைகளிலும் சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்து, வேல்ட் புக் ஆப்ரெக்கார்ட் நிறுவனம் உலக சாதனை விருது வழங்கியதை தொடர்ந்து, மாணவன் விக்கி மாவட்ட கலெக்டரிடம் விருதுகளை காண்பித்து வாழ்த்துகளை பெற்றார்.

    சின்னசேலம் வட்டம் எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜா 14.9.2021 அன்று ஆதிதிராவிடர் அல்லாத பிற இனத்தவரால் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டு இறந்ததை தொடர்ந்து, அவருடைய மனை விபிரியா வுக்கு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1995 திருத்தவிதிகள் 2016 பிரிவு 46(1)ன் கீழ் மேல்வாழப்பாடி அரசு பழங்குடியினர் உண்டி உறைவிட நடுநிலைப் பள்ளி யில் காலியாக உள்ள சமை யலர் பணிக்கான ஆணை யினையும், மாற்றுத்திற னாளிநலத்துறை சார்பில் செவித்திறன் குறை யுடை யோருக்கு காதொலி கருவி 3 ேபர்களுக்கு தலா ரூ.4ஆயிரம் மதிப்பீட்டிலும் வழங்கினார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (வேளாண்மை) விஜயராக வன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணைகலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    • கள்ளக்குறிச்சி போலீசார் ஷமீர் அகமது வை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • நான் உயர் ரக கார்களை வாங்குகிறேன் என்று முதலீடு செய்ய வருபவர்களிடம் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார் பாளையத்தை சேர்ந்தவர் ஷமீர் அகமது. இவர் ரூ.1 லட்சத்திற்கு ரூ.12 ஆயிரம் வரை வட்டி தருவதாக விளம்பரம் செய்தார். இதற்காக தனி அலுவலகம், ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடமிருந்து 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளை பெற்றார். இவர் கடந்த சில மாதங்க ளுக்கு முன்பாக தலைமறை வானார். சென்னையில் பதுங்கியிருந்த ஷமீர் அகமதுவை கண்டறிந்த ஏஜெண்டுகள், அவரிடம் லாவகமாக பேசி மூரார்பா ளையத்திற்கு அழைத்து வந்து போலீசாரிடம் ஓப்ப டைத்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் ஷமீர் அகமது வை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்க ளிடம் இருந்து முதலீடு களை பெற ஷமீர் அகமது கையாண்ட யுக்திகள் குறித்த தகவல்கள், அவரது ஏஜெண்டுகள் மூலமாக வெளியாகியுள்ளது. பொது மக்களிடம் இருந்து பெற்ற பணத்தை கட்டு கட்டாக அடுக்கி வைத்து அதனுடன் ஷமீர் அகமது வீடியோ எடுத்துக் கொள்ளார்.

    தன்னை நம்பி எவ்வளவு முதலீடுகள் வந்துள்ளது பாருங்கள் என முதலீடு செய்ய வருபவர்களிடம் காண்பித்துள்ளார். உயர்ரக கார்களான ஆடி, வோல்ஸ் வேகன், பி.எம்.டபள்யு, ஜாகுவார் போன்ற வாகனங்களை வாங்கி அதில் பயணம் செய்வது. இதனை வீடியோ எடுக்கும் ஷமீர் அகமது, நீங்கள் அளிக்கும் பணத்தை சினிமா தொடர்புடையவர்களுக்கு வட்டிக்கு அளிக்கிறேன். அதில் கிடைக்கும் லாபத்தில் உங்களுக்கு பாதி தருகிறேன். மீதியை வைத்துதான் நான் உயர்ரக கார்களை வாங்குகிறேன் என்று முதலீடு செய்ய வரு பவர்களிடம் கூறியுள்ளார். மேலும், உயர்ரக கார்கள், மோட்டார் சைக்கிளில் சென்னைக்கு சென்று வருவதால் முதுகு வலி ஏற்படு வதாகவும், விரைவில் ஹெலி காப்டர் வாங்க உள்ளதாகவும் கூறி யுள்ளார். இதனை உண்மை என்று நம்பிய விவசாயி ஒருவர், தன்னுடைய நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த மொத்தபண மான ரூ.70 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். மேலும், விரைவில் நடை பெறவுள்ள நாடாளு மன்ற தேர்தலுக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடனாக பணம் கேட்பதாகவும், நிறைய முதலீடுகளை பெற வேண்டுமென்று ஏஜெண்டு களிடம் கூறியுள்ளார். இவை யனைத்தையும் நம்பிய பொதுமக்கள் பல கோடி ரூபாயினை ஷமீர் அகமது நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    • இதனால் சந்தேகமடைந்த நில உரிமையாளர் முகமது யுசூப் மோட்டார் சைக்கிள் அருகே சென்று பார்த்தார்.
    • மோட்டார் சைக்கிளை கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வாங்கிச் சென்றது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ஒலையனூர் பகுதியில் உள்ள விவசாய நிலப் பகுதியில் ஒரு மோட் டார் சைக்கிள் கடந்த 2 நாட்களாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேக மடைந்த நில உரிமையாளர் முகமது யுசூப் மோட்டார் சைக்கிள் அருகே சென்று பார்த்தார். விவசாய நிலத்திற்கு வந்தவர்கள் யாரேணும் மோட்டார் சைக்கிளை விட்டு சென்றிருக்கலாம் என நினைத்த முகமதுயுசூப், மோட்டார் சைக்கிள் யாரு டையது மற்ற நில உரிமை யாளர்களிடம் விசாரித்தார். ஆனால், இது குறித்து யாருக்கும் தெரியவில்லை. மேலும், மோட்டார் சைக்கி ளின் அருகில் இருந்த கிணற்றின் நீரில் வாலிபர் ஒருவரின் உடல் மிதப்பது போன்ற தெரிந்தது. இதனால் மேலும் அதிர்ச்சி யடைந்த முகமதுயுசூப், உளுந்தூர்பேட்டை போலீ சாருக்கு தகவல் கொடுத்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியுடன் கிணற்றில் மிதந்த வாலிபரின் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    மோட்டார் சைக்கிளின் பதிவு எண்ணை வைத்து விசா ரித்தபோது, இது கடலூர் மாவட்டம் விருத்தா சலம் அடுத்த ஆயிபேட்டையை சேர்ந்த இளங்கோவன் என்பவருக்கு சொந்தமானது என்று தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் உளுந்தூர்பேட்டை போலீ சார் விசாரணை நடத்தினர். அதில், அதே ஊரைச் சேர்ந்த பாண்டுரங்கன் மகன் தமிழ்செல்வன் (வயது 28) என்பவர் இளங்கோவனிடம் இருந்து மோட்டார் சைக்கிளை கடந்த 3 தினங்களுக்கு முன்பாக வாங்கிச் சென்றது தெரியவந்தது. மேலும், கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவர் தமிழ்செல்வன் என்பதையும் உளுந்தூர்பேட்டை போலீ சார் உறுதி செய்தனர். இதையடுத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார், தமிழ்செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்தனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை.
    • பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம், பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதனை நம்பிய ஒரு சிலர் பணத்தை கட்டியுள்ளனர். அறிவித்தபடி வட்டி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்துவந்தார்.

    தொடர்ந்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.12 லட்சம் என முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு வட்டி திட்டங்களை அறிவித்தார். மேலும் மூரார்பாளையம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், நெடுமானுர், சங்கராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு மூரார்பாளையத்தில் நகை கடை, சூப்பர் மார்க்கெட், ஷேர் மார்க்கெட் போன்ற பல்வேறு நிறுவனங்களைத் திறந்து ஷமீர் குரூப் ஆஃப் கம்பெனியை தொடங்கினார்.

    இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை. பணத்தை முதலீடு செய்தவர்கள் ஷமீர் அகமதுவிடம் பணத்தைக் கேட்டனர். விரைவில் தருவதாக கூறிய ஷமீர் அகமது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரார்பாளையத்தில் உள்ள கடைகள், அலுவலகத்தை காலி செய்து விட்டு தலைமறைவானார்.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஏஜெண்டுகளை சுற்றிவளைத்து பணத்தை திருப்பி கேட்டனர். இதையடுத்து ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை ஏஜெண்டுகள் கண்டுபிடித்தனர். அவரிடம் பேசி முரார்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய ஷமீர் அகமதுவை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம் கட்டிய ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்களிடமும் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.50 கோடிக்கு வட்டியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல், ஷமீர் அகமது மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஷமீர் அகமதுவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை என்ன செய்தார்? என்பது குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் முன்னிலையில் மாவட்ட தீ மற்றும் தொழிலக பாதுகாப்பு குழுவின் ஆலோசனை க்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில்மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    தமிழகத்தில் சமீபகால மாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள்மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசுவிற்பனை மற்றும் வெடி பொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறை ப்படுத்தி உயிர் சேதம்மற்றும் பொருட்சே தம் ஆகியவற்றை தவிர்த்திடும் பொருட்டும், வெடிபொருள் தயாரிக்கு ம்போதுபின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்தும், வெடிபொருள் தயாரிக்கும் உரிமத்தலங்களை தணிக்கை செய்திட செல்லும் அரசுஅலுவலர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் மாவட்ட அளவிலான தீ மற்றும்பாதுகாப்பு தொழிலக குழு உறுப்பினர்கள் மற்றும் பட்டாசு உரிமம் பெற்ற விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பட்டாசு தயாரிக்கும் எந்த மூலப்பொருளும்கடையில் வைத்திருக்க அனுமதி இல்லை. மின்சார மெயின் சுவிட்ச் மற்றும் பட்டாசு கடைக்கு வெளியே இருக்க வேண்டும். பட்டாசு கடையிலோ அல்லது அருகிலோ பட்டாசு பெட்டிகள் தயார் செய்யக்கூ டாது. கிப்ட் பெட்டியில் தீப்பெட்டி மத்தாப்பு மற்றும் கேப்வெடிகள் இருத்தல் கூடாது. பட்டாசுக் கடை அருகில் புகைப்பிடித்தல் கூடாது மற்றும் பட்டாசு வெடித்தல் கூடாது என்ற அறிவிப்பு பதாகைகள் இருக்க வேண்டும் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை பட்டாசு கடை உரிமம் பெற்றவர்கள் கண்டிப்பாக பின்பற்றவேண்டும். இந்நடைமுறைகள் குறித்து தொடர்புடைய அலுவலர்கள் அறிவியல் முறையில்கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டு, ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தொழிலாளர்களு க்கு உள்ள காப்பீடு வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் .தடை செய்யப்பட்ட நாட்டு வெடி, சீன வெடிக ளை பயன்படுத்தக் கூடாது.

    இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கள்ளக்குறிச்சி வருவாய்கோட்டாட்சியர் பவித்ரா, திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணன், துணை இயக்குநர் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) ராஜா, தேசிய நல்வாழ்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர்சரவ ணன், சென்னை முதன்மை இணை கட்டுப்பாட்டு அலுவலர் (வெடிபொருள்) தானுலிங்கம், விழுப்புரம் மாவட்ட தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநர் பருவதம், வெடிபொருள் உரிமம் வழங்கப்பட்ட உரிமதாரர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்
    • அப்போது அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் பகண்டை கூட்டு ரோடு சப்-இன்ஸ்பெக்டர் பிரபா கரன் தலைமையிலான போலீசார் அத்தி யூரில் வாகன சோதனை யில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அட்டைப் பெட்டியில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    அவரிடம் போலீ சார் நடத்திய விசாரணையில், அவர் புதுப்பட்டு கிரா மத்தை சேர்ந்த மூர்த்தி (வயது 47) என்பதும், விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் மூர்த்தியை கைது செய்து, அவரிடமிருந்த இருசக்கர வாகனம் மற்றும் 100 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
    • குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கள்ளக்குறிச்சி :

    சிறையில் உள்ள சிறுபான்மையினரை விடுவிக்க அ.தி.மு.க. சார்பில் சட்டமன்றத்தில் பேசிய கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., செந்தில்குமாரை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமத் ரபி தலைமையிலான நிர்வாகிகள் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது மாவட்ட துணைத் தலைவர் ஷபி, கல்வியாளர் அணி மாநில தலைவர் மாலிக் பாஷா, மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி, தொகுதி தலைவர் சல்மான், செயற்குழு உறுப்பினர் அசாருதீன், நகர தலைவர் சலிம் பாஷா, நகர பொருளாளர் அப்துல் ரஹீம், ஊடக அணி பொறுப்பாளர் குல்ஜார்ஷா மற்றும் இப்ராஹிம் ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது.
    • முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நடைபெற்றது. வட்ட வழங்கல் அலுவலர் ராஜா தலைமை தாங்கினார். இளநிலை வருவாய் ஆய்வாளர் அசோக் முன்னிலை வகித்தார். தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் வரவேற்றார். முகாமில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம், குடும்ப அட்டையில் திருத்தம் என மொத்தம் 28 மனுக்கள் பெறப்பட்டது. 28 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது. இதில் வட்ட பொறியாளர் அய்யனார் மற்றும் நுகர்வோர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் பொது விநியோக சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்ட வழங்க அலுவலர் கங்காலக்ஷ்மி தலைமை தாங்கினார். முகாமில் 36 மனுக்கள் பெறப்பட்டு உடனே தீர்வு காணப்பட்டது.

    • பாலஸ்தீன்_ இஸ்ரேல் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக பாலஸ்தீன்_ இஸ்ரேல் பிரச்சனையில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்ற கோரிக்கையோடு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் சலீம் பாஷா தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ஷேக் அப்துல் ரகுமான் வரவேற்புரை நிகழ்த்தினார். கள்ளக்குறிச்சி மாவட்ட துணை தலைவர் ஷபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெய்லாப்பூதீன், வர்த்தக அணி தலைவர் ருமானா ஷாகுல், தொகுதி துணைத் தலைவர் இலியாஸ், துணை செயலாளர் அப்துல்லா, நகர செயலாளர் உசேன், பொருளாளர் அப்துல் ரஹீம், அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் உசேன், துணைத்தலைவர் பக்கரி முகமது ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ரபி மற்றும் மாவட்டச் செயலாளர் தர்பார் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். முன்னதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள். இறுதியாக மாவட்ட பொருளாளர் தாஹிர் அலி நன்றி கூறினார்.

    • பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
    • இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே நெடுமானூரில் உள்ள பெரிய ஏரியில் ஊராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு மீன் குஞ்சுகள் விடப்பட்டன. தற்போது இந்த மீன்கள் வளர்ந்து பெரியதாகி விட்ட நிலையில், மீன்களை பிடித்து கிராம மக்களுக்கு வழங்க ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. பின்னர் அதன்படி ஏரியில் மீன்கள் பிடிக்கப்பட்டன. பிடிக்கப்பட்ட மீன்களை 1300 குடும்ப அட்டை தாரர்களுக்கு தலா 2½ கிலோ மீன்கள் இலவசமாக வழங்கப்பட்டது. இதனை கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

    ×