search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    சங்கராபுரத்தில் பொதுமக்களை அரிவாளை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பொய்க்குணம் சாலையில் லோகநாதன் (வயது 34) என்பவர் வசித்து வருகிறார். இவர் சங்கராபுரம் வள்ளலார் மன்றம் அருகில் கையில் வீச்சரிவாளுடன் சுற்றி வந்தார். மேலும் அங்கு வந்த பொதுமக்களை திட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். இது பற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார் விரைந்து சென்று லோகநாதனை பிடிக்க முயன்றனர். அப்போது லோகநாதன், தான் வைத்திருந்த வீச்சரிவாளை காண்பித்து, என்னை பிடித்தால் வெட்டி கொலை செய்து விடுவேன் என்று போலீசாரையும் மிரட்டினார். இருப்பி னும் போலீசார் லோகநாதனை சுற்றிவளைத்து பிடித்து அவரிடம் இருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து லோகநாதனை கைது செய்தார்.

    • சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
    • இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டி உள்ளதால் தற்போது 650 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை யாற்றின் தரைப்பாலங்களை பொதுமக்கள் யாரும் கடக்க வேண்டாம். ஆற்றின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். இதனை வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டு ள்ளது. இத்தகவலை வாணாபுரம் தாசில்தார் குமரன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.

    • அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது வேன் வரும்போது வழியில் வாகனம் நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது.
    • இதில் ராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா மனைவி ராணி (வயது 45) சம்பவத்தன்று அந்தப் பகுதியில் சூட்டிங் நடைபெற்றதாகவும் அப்போது வேன் வரும்போது வழியில் வாகனம் நிறுத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது சம்பந்தமாக அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் கேட்டபோது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் திட்டி தாக்கிக் கொண்டதாக தெரிகிறது. இதில் ராணி மற்றும் சிவக்குமார் ஆகியோர் லேசான காயமடைந்தனர்.

    இதுகுறித்து ராணி கொடுத்த புகாரின் பேரில் சிவக்குமார் அவரது மனைவி செல்வி ஆகிய 2 பேர் மீதும், இதே போல் சிவகுமார் கொடுத்த புகாரின் பேரில் ராஜா அவரது மனைவி ராணி, மகள் சங்கீதா உறவினர் ஏழுமலை ஆகிய 4 பேர் மீதும் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது.
    • ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது

    கள்ளக்குறிச்சி:

    தமிழகத்தில் சமீப காலமாக வெடிபொருள் மற்றும் பட்டாசுகள் உற்பத்தி மற்றும் சேமிப்பு இடங்களில், வெடிவிபத்துக்கள் ஏற்பட்டு அதிக அளவில் மனித உயிரிழப்புகள் மற்றும் பொருட்சேதங்கள் ஏற்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு ஆகியவற்றை வரன்முறைப்படுத்தி உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம்ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடி க்கையாக ,சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் மாவட்ட நிர்வாகம் ஆய்வுமேற்கொள்ள உள்ளது.

    இந்த ஆய்வின்போது, அரசிடமிருந்து உரிய அனுமதியோ, உரிமமோ பெறாம ல்வெடிபொருட்கள் தயாரிப்பு, பட்டாசு விற்பனை மற்றும் வெடிபொருட்கள் இருப்பு வைத்தல் ஆகியவற்றில் பொதுமக்கள் எவரேனும் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டால் அந்த நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கோள்ளப்படும். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், வெடிபொரு ள் மற்றும் பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக வெடிபொருள் உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள், அரசு பொது இ-சேவை மையத்திற்கு உரியஆவணங்களுடன் சென்று இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்கவேண்டும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • ரிஷிவந்தியம் அருகே முன்விரோத தகராறில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியம் அருகே பாசார் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி(வயது38). இவருக்கும், இவரது அண்ணன் கந்தசாமி(40) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று இருவருக்கும் பொதுவான வயலில் உள்ள தென்னை மரத்தில் தண்டபாணி தேங்காய் பறித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி, மற்றும் அவர் மனைவி முனியம்மாள், மகன் ஏழுமலை(21) ஆகியோர் தண்டபாணியின் வீட்டு மின் இணைப்பை துண்டித்து அவரை ஆபாச வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் தண்டபாணி கொடுத்த புகாரின் பேரில் கந்தசாமி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • 100 சதவீத மானியத்தில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் மூலம்நடவு செடிகள் வழங்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை வாயிலாக தேசிய எண்ணைப்பனை இயக்கத்திட்டத்தின் மூலம் எண்ணைப்பனை சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனத்தை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவ ட்டத்தில் எண்ணைப்பனை திட்டத்தின் மூலமாக பாமாயில் மரம்சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை மற்றும் கோத்ரேஜ் அக்ரோவெட் லிமிட் இணைந்து பல்வேறு விழிப்பு ணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடி ப்படையில் அனைத்து வட்டாரங்களுக்கும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பாமாயில் சாகுபடி குறித்து விழிப்புணர்வு காணொளி காட்சி வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வாகனம் ஒரு வாரத்திற்குபிரச்சார பணி மேற்கொள்ளவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2022-2023 -ம் ஆண்டு முதல்தோட்டக்கலை துறை மூலம் 30.5 எக்டர் பரப்பளவிற்கு 2023-2024 ல் 20 எக்டர் பரப்பிற்கும் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் மூலம்நடவு செடிகள் வழங்கப்பட்டது.

    எண்ணைப்பனை ஒரு எக்டருக்கு 143 மரங்கள் வரை நடவு செய்யலாம். ஒருமரத்தில் ஒரு வருடத்திற்கு 12 குலைகள் வரை அறுவடை செய்யலாம். ஒரு குலையின்சராசரி எடை 25 கிலோ. இதன் மூலம் ஒரு எக்டருக்கு 42.9 டன்கள் பழங்களை அறுவடைவதால் குறைந்தபட்சம் ரூ.5,46,000 வரை வருமானம் ஈட்டலாம். மேலும் இதன்மூலம் 25 முதல் 30 ஆண்டுகளுக்கு நிலையான மாத வருமானம் பெறமுடியும். எனவே விவசாயிகள் மாத வரு மானம் தரும் மகத்தான பாமாயில் மர சாகுபடி செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதில் வேளாண்மை இணை இயக்குநர் கருணாநிதி, தோட்டக்கலை துணை இயக்குநர்மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளா ண்மை) விஜயரா கவன், தோட்டக்கலை உதவி இயக்குநர் உமா, தோட்டக்கலை துறை அலுவலர்கள் மற்றும் விவாசயிகள் கலந்து கொண்டனர்.

    • நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.
    • கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசிய விவகாரத்தில் பொதுக்கூட்டம் நடத்தி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் வருத்தம் தெரிவித்தார்.

    கள்ளக்குறிச்சி மந்தைவெளி பகுதியில் கடந்த மாதம் 19-ந் தேதி அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு, விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை அவதூறாக பேசியதை கண்டித்து மாவட்டம் முழுவதும் தி.மு.க.வினர் போலீஸ் நிலையங்களில் புகார் அளித்தனர்.

    இதனால் குமரகுரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து முன்ஜாமீன் பெற சென்னை ஐகோர்ட்டில் குமரகுரு மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி முறையாக அனுமதி பெற்று மீண்டும் ஒரு பொதுக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில் குமரகுரு மன்னிப்பு கேட்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தும் விதமாக கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் அ.தி.மு.க. மதுரை மாநாடு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

    இதில் பங்கேற்ற மாவட்ட செயலாளர் குமரகுரு, அமைச்சர் உதயநிதி குறித்து நான் அவதூறாக பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

    அந்த பேச்சு புண்படும் படி இருந்தால் வருத்தம் தெரிவிப்பதாக அப்போதே சமூகவலை தளங்கள் வழியாக தெரிவித்து இருந்தேன். இப்போதும் இந்த கூட்டத்தின் வாயிலாக அவ்வாறு புண்படும் படி பேசி இருந்தால் வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.

    அப்போது கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் அமைதியான சூழல் காணப்பட்டது.

    • ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    • பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கல்வராயன்மலை ஊராட்சி ஒன்றியத்தில் வேளாண்மைதுறை, கால் நடைதுறை, ஊராக வளர்ச்சிதுறை ஆகிய துறைகள் இணைந்து விவசாயி களுக்கு ஆலோ சனைகள் நேற்று வழங்கப்ப ட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஒன்றிய குழு தலைவர் சந்திரன், ஒன்றிய பொறியாளர் அருண் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம் வரவேற்றார். இதில் தொழில் நுட்பங்கள் மற்றும் அரசு செயல்படுத்தும் வேளாண் திட்டங்கள் குறித்து விவ சாயிகளுக்கு தெரிவிக்க ப்பட்டது. மேலும், மண்மா திரி சேகரித்தல், மண்வள அட்டை பயன்பாடு குறித்தும், மண்வளம், இணை யதளம் மற்றும் மத்திய மாநில அரசு திட்டங்கள் செயல்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு எடுத்து கூறப்பட்டது.

    அதேபோல் கால்நடை மருத்துவர் கவிதா கலந்து கொண்டு கோமாரி நோய் தடுப்புமுறை, தடுப்பூசி பயன்பாடு, கால்நடை பராமரிப்பு குறித்து எடுத்து கூறினார். தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்க லை உதவி இயக்குனர் சிவாமலை கலந்து கொண்டு நுண்ணீர்பாசனத்தின் முக்கியத்துவம், பயிர்காப் பீடு திட்டம் மற்றும் ஒன்றிய, மாநில அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். விழாவில் கலந்து கொண்ட விவசாயிகளுக்கு தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பழமர செடி தொகுப்புகள் வழங்கப் பட்டது. இதில் துணை வட்டார வளர்ச்சி அலு வலர்கள் ஆரோக்கியசாமி, ரமேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் வேங்கோடு கல்யாணி கிருஷ்ணன், செல்வராஜ், ஆன்டி சீனுவாசன், குப்புசாமி, செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர்.
    • அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கருங்குழி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 48). இவர் தனது வீட்டை விரிவாக்கம் செய்து கட்டினார். கிராமத்தின் சாலையில் 4 அடி ஆக்கிரமித்து வீடு கட்ட முயற்சிப்பதாக அக்கம் பக்கத்தினர் புகார் தெரிவித்தனர். இதையடுத்து ஊர் பிரமுகர்கள் கண்ணனிடம் பேசி, உங்களுக்கு சொந்தமான இடத்தில் மட்டும் வீடு கட்டிக் கொள்ளுங்கள், சாலை ஆக்கிரமிக்காதீர்கள் என்று கூறினர். இருந்தபோதும் கண்ணன் தொடர்ந்து வீடு கட்டும் பணியை மேற்கொண்டார். அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரிடம் (32) முறையிட்டனர். அவரும் வருவாய்த் துறையில் உள்ள நில அளவையரை அழைத்து வந்து கண்ணனுக்கு சொந்தமான இடத்தை அளவீடு செய்தார். அப்போது கிராம சாலையில் 4 அடியை ஆக்கிரமித்து வீடு கட்டியது தெரியவந்தது.

    இதையடுத்து அங்கு வீடு கட்டக்கூடாதென பஞ்சாயத்து தலைவர் அறிவுறுத்தி சென்றார். இதனை மீறி கண்ணன் மீண்டும் வீடு கட்டவே, ஊர் பிரமுகர்கள் கண்ணனை அழைத்து நேற்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கண்ணன், அவரது மகன்கள் பொன்மணி (25), வெற்றிவேல் (23), செல்வக்குமார் (19) ஆகியோருடன் வந்தார். 4 அடி ஆக்கிரமித்து கட்டிய வீட்டை இடிக்க ஊர் பிரமுகர்கள் சொன்னதால் ஆத்திரமடைந்த கண்ணன், தனது மகன்களை அழைத்துக் கொண்டு பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் வீட்டிற்கு நேற்று இரவு 10 மணிக்கு சென்றார். தான் கொண்டு சென்ற கடப்பாறை மூலம் பஞ்சாயத்து தலைவர் சசிக்குமாரின் வீட்டை இடிக்க முயற்சித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அவர்களை தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.

    இதில் ஆத்திரமடைந்த கண்ணன் மற்றும் அவரது மகன்கள் கொடுவா கத்தியால் பஞ்சாயத்து தலைவரின் தலையில் வெட்டிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதில் பலத்த காயமடைந்த சசிக்குமார் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அக்கம் பக்கத்தினர் சசிக்குமாரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனு மதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்த பஞ்சாயத்து தலைவர் சசிக்குமார் அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு கண்ணன் மற்றும் அவரது 3 மகன்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இது சம்மந்தமாக பொன்மணி, வெற்றிவேல், செல்வக்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கண்ணன் எங்குள்ளார் என்று அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சின்னசேலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • சங்கராபுரத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இதயதுல்லா, பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலையில் நடைபெற்றது.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் கேலிச் சித்திரமாக 10 தலை ராவணன் அவதாரத்தில் ராகுல் காந்தியை வரைந்து லட்சகணக்கான பாரதீய ஜனதாசமூக வலைதள குழுக்களில் வாயிலாக வெளியிட்டு வெறுப்பு பிரச்சாரத்தை செய்யும் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் , பேரூராட்சி துணைத் தலைவர் ஆஷா பி ஜாகீர், மாவட்ட துணைத் தலைவர் இதயதுல்லா, பொதுக் குழு உறுப்பினர் துரைராஜ் முன்னிலையில் நடைபெற்றது. நகரத் தலைவர்வக்கீல் முகமது பாஷா வரவேற்றார். மாணவர் காங்கிரஸ் மாநில செயலாளர் அதில் கான் தலைமையில் கண்டன உரையாற்றி எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர்.

    • கரும்புத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் மின்சார கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது.
    • தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் பகண்டை கூட்டு ரோட்டை சே ர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் தனது விளை நிலத்தில் கரும்பு பயிர் வைத்திருந்தார். இந்நிலையில் கரும்புத்தோட்டத்தில் உள்ள பயிர்களில் மின்சார கம்பிகள் உரசி தீப்பொறி ஏற்பட்டுள்ளது. இதில் கரும்பு பயிர்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுபற்றிய தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 2 ஏக்கர் கரும்பு பயிர்கள் தீயில் கருகி சேத மடைந்தது.

    • கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார்
    • கரும்பு வெட்டும் தொழிலாளி

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த அலியாபாத்பாளையத்தை சேர்ந்த கணபதி மனைவி ஆனந்தாயி(73). இவர் அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்த பின்னர் கோவிலை பூட்டிவிட்டு கோவில் வளாகத்திலேயே ஆனந்தாயி படுத்து தூங்கினார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆனந்தாயி ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து ரிஷிவந்தியம்போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண் பூசாரியை கொன்றதாக காட்டுஎடையூர் பகுதியை சேர்ந்த கரும்பு வெட்டும் தொழிலாளி அருளப்பன் மகன் அலெக்சாண்டரை (34) கைது செய்தனர்.

    ×