search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • போலீசார் புக்கிரவாரி புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • விற்பனைக்காக அவர் வைத்திருந்த 19 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த னர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வரஞ்சரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையிலான போலீசார் புக்கிரவாரி புதூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கல்லுக்குட்டையில் உள்ள தனது வீட்டின் பின்புறம் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் ராமலிங்கம் தப்பியோடினார். மேலும் அங்கு விற்பனைக்காக அவர் வைத்திருந்த 19 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ராமலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • 30 கிராமங்களில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது.
    • மழைக்காலங்களில் குடிநீரை கொதிக்க வைத்து, ஆறவைத்து பருகவும்.

    கள்ளக்குறிச்சி:

    தமிழ்நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1,000 இடங்களில் டெங்கு மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடை பெறும் என அறிவிக்க ப்பட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தலின்படி, வட்டாரத்திற்கு 3 காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள் வீதம் 30 கிராமங்களில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றது. இந்த முகாமில் காய்ச்சல், சளி, உடல்வலி, வயிற்றுப்போக்கு போன்ற அனைத்து நோய்களுக்கும் மருத்துவ அலுவலர்கள் மற்றும் மருத்துவப்பணியாளர்கள் மூலம் 2,152 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர், ஓ.ஆர்.எஸ் திரவமும் வழங்கப்பட்டது.

    காய்ச்சல் உள்ள நபர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்து மேல்சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.மேலும் முகாம் நடைபெற்ற அனைத்து கிராமங்களிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்த் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோ ரினேசன் செய்யப்பட்டது. இதேபோல் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் கிராமம் முழுவதும் டெங்கு கொசு புழுக்களை ஒழித்தல், தூய்மைப் பணியாளர்கள் மூலம் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்துதல், கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டது.

    மழைக்காலங்களில் குடிநீரை கொதிக்க வைத்து, ஆறவைத்து பருகவும், வீட்டில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்கள் மற்றும் தொட்டிகளை 3 நாட்களுக்கு ஒருமுறை நன்கு கழுவி பின் பயன்படுத்தவும், வீடு மற்றும் அருகில் உள்ள தேவையற்ற பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளில் தண்ணீர் தேங்கவிடாமல் அப்புறப்படுத்தவும், காய்ச்சல் அறிகுறி தெரிந்தால் கடைகளில் விற்கும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடாமல் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

    • விளையாட்டு துறையில் அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார்.
    • தன் திறமையை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் இவருடைய மகன் கௌசிக் (வயது 14). இவர் விழுப்புரத்தில் உள்ள அரசு பள்ளி யில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் விளையாட்டு துறையில் அதி கம் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். இந்த மாணவன் உள்ளூரில் நடைபெறும் கைப்பந்து போட்டியில் கலந்துகொண்டு தன் திறமையை வளர்த்துக் கொண்டு வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி அரியலூரில் நடை பெற்ற மாநில அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான கைப்பந்து தேர்வு போட்டியில் கலந்து கொண்டு இந்திய தேசியப் பள்ளிகளின் விளையாட்டு குழுமத்தால் வரும் நவம்பர் மாதம் புதுடெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவி லான கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு அணியில் விளையாடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    இந்தப் போட்டியில் மாணவன் கௌசிக் வெற்றி பெற உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    • திருவிழா நடைபெறாமல் இருந்தது.
    • புதிய தேர் செய்யப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த சேஷச முத்திரத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தேர் திருவிழா நடைபெற்றது. அதன் பின்னர் சில காரணங்களால் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் பக்தர்கள் இந்த ஆண்டு தேர் திருவிழா நடத்த முடிவு செய்தனர். இதற்கு புதிய தேர் செய்யப்பட்டது.

    இந்நிலையில் கோவிலில் தேர் திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் சக்தி அழைத்தல், ஊரணி பொங்கல், தேர் வெள்ளோட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளினார். இதில் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து அங்கிருந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர், தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்த டைந்தது. 13 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடைபெற்றதால் சேஷசமுத்திரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை விழா குழு வினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.தேர் திருவிழாவில் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் இருக்க கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்தனர்.

    • நடவடிக்கைகள் மேறகொண்டு வருகின்றனர்.
    • 29- ந்தேதி ஆய்வு மேற்கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரின் அறிவுறுத்தலின்படி, உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்டம் முழுவதும் பல்வேறு தனியார் உண வகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உண வின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதோடு, தரமற்ற உணவு பொருட்களை அழித்து தொடர்புடைய உணவ கங்கள் மீது நடவடிக்கைகள் மேறகொண்டு வருகின்றனர். அதன்படி சின்ன சேலத்தில் உள்ள தனியார் உணவகத்தில் உணவு பாது காப்பு துறை அலுவலர்கள் 29- ந் தேதி ஆய்வு மேற் கொண்டனர். அப்போது அரசின் முத்திரையிடப் பட்ட, அரசால் அங்கன்வாடி குழந்தை களுக்கு வழங்கக் கூடிய 2 அட்டை முட்டைகள் உணவகங்களில் இருந்ததை கண்டுபிடிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து அந்த தனியார் உணவகத்திற்கு உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களால் அபராதம் விதித்தனர். மேலும் போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில் உணவகத்தில் வேலை செய்யும் சபரி கடலூர் மாவட்டம் மங்களூர், ஒரங்கூர் மற்றும் குடிகாடு பகுதியில் இருந்து உணவ கத்திற்கு முட்டை வாங்கி வந்தது விசாரனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அரசின் விதிமுறைகளை மீறி முட்டை பயன்படுத்தி யதற்காக, அந்த உணவ கத்திற்கு, மாவட்ட கலெக்ட ரின் அறிவுரையின் படி, வருவாய் துறையினர் மூலம் சீல்வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 1,160 அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.

    அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுகளில் தமிழக அரசு குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு வழங்கக் கூடிய முட்டை களை விற்பனை செய்தாலோ அல்லது வெளியிடங்களுக்கு எடுத்துச் சென்றாலோ, தனியார் உணவு நிறு வனங்கள் வாங்கி பயன்படுத்தினாலும் அவர்கள் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    • 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
    • குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் தேசிய புகையிலை தடுப்புச் சட்டத்தின் கீழ் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராஜா உத்தரவின் பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சம்பத் குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், பாசில் ஆகியோர் சங்கராபுரம் கடைவீதி, திருக்கோவிலூர் சாலை, கள்ளக்குறிச்சி சாலை, டி.எம்.பள்ளி சந்து ஆகிய இடங்களில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது 4 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் குட்கா பொருட்களை கைப்பற்றி 4 கடை உரிமையாளர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

    • பூட்டை பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் பாஷித் மகன் ஷேக் வாகித்
    • மோட்டார் சைக்கி ளை ஷேக்வாகித் ஓட்டினார், அணைதீன் பின்னால் அமர்ந்து வந்தார்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பூட்டை ரோடு பகுதியைச் சேர்ந்த தஸ்தகீர் பாஷித் மகன் ஷேக் வாகித் (வயது 19) .இவர் சென்னை தரமணி யில் உள்ள அரசு பாலி டெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் அதே கல்லூரியில் பயிலும் இவரது நண்பரான சங்கரா புரம் அருகே வடகீரனூர் பகுதியைச் சேர்ந்த அணை தீன் (19) இருவரும் நேற்று இரவு சென்னையிலிருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டி ருந்தனர். மோட்டார் சைக்கி ளை ஷேக்வாகித் ஓட்டினார், அணைதீன் பின்னால் அமர்ந்து வந்தார். இவர்கள் கள்ளக்குறிச்சி- துருகம் சாலையில் தனியார் மருத்து வமனை அருகே சென்று கொண்டிருந்தபோது. எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ்ம மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் படுகாயமடைந்த ஷேக் வாகித் சம்பவ இடத்தி லேயே பலியானார். அணை தீன் படுகாயம் அடைந்தார்.அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அணைதீன் மேல் சிகிச்சைக் காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது குறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து சேலம் மாவட்டம் ஆறகளூர் பகுதியைச் சேர்ந்த அரசு பஸ் டிவைர் சுந்தரம் (45) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்
    • இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 52 )விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு ஊருக்குள் ஒரு வீடும், விவசாய நிலத்தில் ஒரு வீடும் உள்ளது.பகலில் ஊருக்குள் இருக்கும் வீட்டிலும், இரவில் குடும்பத்தோடு விவசாய நிலத்தில் உள்ள வீட்டிலும் வசிப்பது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வழக்கம்போல் தூங்கிவிட்டு காலை மீண்டும் ஊருக்குள் உள்ள வீட்டில் வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 1 லட்சத்து 22 ஆயிரம் பணமும் அைர பவுன் நகையும், வெள்ளி பொருட்களையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் முருகன் புகார் அளித்தார்.அதன் அடிப்படையில் சின்ன சேலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முருகன் வீட்டுக்கு அருகில் உள்ள மேலும் 3 வீடுகளிலும் திருட்டு போய் உள்ளதாக கூறப்படுகிறது.

    • மகள்கள் அனைவரும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர்.
    • விஜயகுமார் மகன் விவேக்கும் உடன் இருந்தான்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே நத்தாமூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கன் (வயது 78). இவர் அதே பகுதியில் உரக்கடை வைத்து நடத்தி வந்தார். இவருடைய மகள்கள் பிரசன்னா, பிரகாஷவாணி, திரவியம். மகன்கள் விஜயகுமார், சதானந்தம். பொன்னுரங்கன் மகன்கள் திருமணமாகி பெற்றோருடன் வசித்து வருகின்றனர். மகள்கள் அனைவரும் திருமணம் ஆகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மதுரைவீரனுடன் திரவியத்துக்கு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ரியாஷினி (5), விஜயகுமாரி (3) ஆகிய 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் மதுரைவீரனுக்கும் திரவியத்திற்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை இருந்து வந்தது.

    இதனால் திரவியம் தனது குழந்தைகளுடன் நத்தாமூர் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து வசித்து வந்தார். திரவியத்திற்கு அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுவது இருந்து வந்தது. இதனால் திரவியம் மன உளைச்சளில் இருந்தார். நேற்று திரவியத்தின் பெற்றோர் மதுரைவீரனை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வீட்டினுள் திரவியம், மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரி, மற்றும் விஜயகுமார் மகன் விவேக்கும் உடன் இருந்தான். வீட்டிற்கு வெளியே மதுரைவீரனுடன், பொன்னுரங்கம், விஜயகுமார் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து வீட்டில் இருந்து பயங்கர சத்தம் கேட்டது. இதில் பதறிஅடித்து கொண்டு உள்ளே சென்ற பொன்னுரங்கம், விஜயகுமார், சதானந்தம் அங்கு தீயில் கருகி எரிந்து கொண்டிருந்த திரவியம் மற்றும் மகள்களை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முற்பட்டனர். ஆனால் அணைக்கமுடியவில்லை.

    இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே திரவியம் மற்றும் அவரது மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரிஆகியோர் உடல் கருகி இறந்தனர். பலத்த படுகாயம் அடைந்த விவேக்கை பொன்னுரங்கம் போராடி மீட்டார். தீ கொழுந்து விட்டு எரிந்ததால் அந்த வீடு முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் விவேக்கை போராடி மீட்ட பொன்னுரங்கம் புகை மண்டலத்தில் சிக்கி மூச்சுதிணறி இறந்தார். மேலும் வீட்டின் வெளியே வந்த விஜயகுமார் மற்றும் விவேக் புகை மண்டலத்தில் சிக்கி மயங்கி கிழே விழுந்தனர். இந்த விபத்தில் வீடு முழுவதும் தீக்கிரையானது. இதை பார்த்த வீட்டின் அருகில் இருந்தவர்கள் அதிர்ந்து திருநாவலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த திருநாவலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்தில் மயங்கி கீழே விழுந்து கிடந்த விவேக் மற்றும் விஜயகுமார், சந்தான ந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக விஜயகுமார், விவேக்கை முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். தீ விபத்தில் உயிரிழந்த திரவியம் மற்றும் ரியாஷினி, விஜயகுமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநாவலூர் போலீசார் வழக்குபதிவு செய்து திரவியம் மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதில் இந்த தீ விபத்து நடந்ததா ? அல்லது வீட்டில் மின்கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து நடந்ததா ? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீசார் திரவியம் கணவர் மதுரைவீரனை போலீஸ் நிலையம் அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • தீக்காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உளுந்தூர்பேட்டை:           

    உளுந்தூர்பேட்டை அருகே  உள்ள வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் திரவியம், இரண்டு மகள்கள் ரியாஷினி, விஜயகுமாரி, ஆகியோர் தீயில் கருகி பலியாகினர்.

    காப்பாற்ற முயன்ற தாத்தா மூச்சுத்திணறல் மயங்கி விழுந்து பலியானார். தீக்காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள் வெளியில் வந்தனர்.
    • கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

    சங்கராபுரம்:

    சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே தனியார் வங்கி ஏ.டி.எம். உள்ளது. இதன் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் பேரூராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் பல்வேறு கடைகள் செயல்படுகின்றன.

    இரவு 10 மணிக்கு மேல் பஸ் நிலையத்திற்குள் பஸ்கள் வராது என்பதால் அங்குள்ள கடைகளை மூடிவிட்டு அதன் உரிமையாளர் வீட்டிற்கு சென்று விடுவார்கள்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்றிரவு 11 மணிக்கு மேல் தனியார் வங்கி ஏ.டி.எம்.மிற்கு வந்துள்ளனர். அங்கிருந்த ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாமல் திணறிய கொள்ளையர்கள் வெளியில் வந்தனர்.

    அருகில் இருந்த பழக்கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரத்து 700 பணத்தை திருடினர். மேலும், அங்கிருந்த ஆப்பிள், திராட்சை போன்ற பழங்களை எடுத்து சாப்பிட்டுள்ளனர்.

    கொள்ளையர்களின் தேவை அதிகமாக இருந்ததால், பழக்கடைக்கு அருகில் இருந்த பல்பொருள் அங்காடியின் பூட்டை உடைத்து அதனுள் நுழைந்தனர். அந்த கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.15 ஆயிரம் பணத்தையும் திருடிவிட்டு, கடையை மூடிவிட்டு சென்றுள்ளனர்.

    இன்று அதிகாலை பணம் எடுக்க ஒரு சிலர் ஏ.டி.எம்,மிற்கு வந்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முயற்சி நடந்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இத்தகவல் காட்டுத்தீ போல பரவியது. இதையடுத்து பஸ் நிலைய பகுதியில் இருந்த கடை உரிமையாளர்கள் அனைவரும் விரைந்து வந்து, தங்கள் கடைகளில் திருட்டு ஏதேனும் நடந்ததா என சோதனை நடத்தினர்.

    அப்போது பழக்கடை மற்றும் பல்பொருள் அங்காடி ஆகியவற்றின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த உரிமையாளர்கள் இது குறித்து சங்கராபுரம் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் போலீசார், முதலில் ஏ.டி.எம். மையத்தில் சோதனை நடத்தினர். தொடர்ந்து பழக்கடை, பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடத்தினர். அப்போது பழக்கடை மற்றும் பல்பொருள் அங்காடிகளில் கொள்ளையர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றதை கண்டனர்.

    இதையடுத்து விழுப்புரத்தில் இருந்த கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மேலும், தனியார் ஏ.டி.எம். நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்து அவர்களை வரவழைத்தனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    சங்கராபுரத்தின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் உள்ள பஸ் நிலையத்தில் உள்ள ஏ.டி.எம்,மில் கொள்ளை முயற்சி, அருகில் உள்ள 2 கடைகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • செல்வி ஆகியோரை ஆபாசமாக பேசி, தாக்கி, செல்வியின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.
    • மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே வடதொரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 54) இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (55) என்பவருக்கும் பொது பாதை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கிருஷ்ணமூர்த்தி அவரது மகன் பெரியசாமி (33) ஆகியோர் பழனி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோரை ஆபாசமாக பேசி, தாக்கி, செல்வியின் சேலையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனி மகன் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கிருஷ்ணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

    ×