search icon
என் மலர்tooltip icon

    கள்ளக்குறிச்சி

    • சதீஷ்குமார் கூலி வேலை செய்து வருகிறார்.
    • போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    கள்ளக்குறிச்சி:  

    சின்னசேலம் அருகே உள்ள தொட்டியம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (25). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று மணிமேகலை மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பாததால் கணவன் சதீஷ்குமார் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்கை பதிவு செய்து சின்னசேலம் போலீசார் மணிமேகலையை தேடி வருகின்றனர்

    • மது போதையில் தினமும் ரேகாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள பாண்டியன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முருகன். அவரது மனைவி ரேகா (வயது 30) இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த துரைசாமி (50) என்பவர் மது போதையில் தினமும் ரேகாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ரேகாவை துரைசாமி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சின்ன சேலம் போலீஸ் நிலையத்தில் ரேகா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து துரைசாமியை கைது செய்தனர். பின்னர் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி தீர்வு கிடைக்கவில்லை.
    • வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முழு கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    சமீபத்தில் தமிழக அரசு கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகாவை இரண்டாக பிரித்து புதிய வாணாபுரம் தாலுகாவை அறிவித்துள்ளது.

    இதில் உள்ள முரண்பாடுகளை கலைந்து சங்கராபுரத்திற்கு அருகில் உள்ள மூங்கில் துறைப்பட்டு, புதுப்பட்டு, வடபொன்பரப்பி உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் சங்கராபுரத்தில் இணைத்து அப்பகுதி மக்கள் வாணாபுரம் சென்று வருவதில் உள்ள சிரமங்களை நீக்க வேண்டி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி தீர்வு கிடைக்கவில்லை.

    ஆகவே சங்கராபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது சேவை அமைப்புகள் ஒன்றிணைந்து பொதுமக்கள் நலன் வேண்டி வாணாபுரம் தாலுகாவை மறுவரையறை செய்து வடபொன்பரப்பி பிர்க்காவை மீண்டும் சங்கராபுரம் தாலுகாவுடன் சேர்க்க வேண்டி அரசின் கவனத்திற்கு கொண்டுவர பொதுமக்கள் ஆதரவுடன் செப்டம்பர் இன்று (5-ந் தேதி) சங்கராபுரத்தில் முழு கடை அடைப்பு, சாலை மறியல் செய்ய ஏக மனதாக முடிவு செய்தனர்.

    அதன்படி இன்று காலை சங்கராபுரத்தில் உள்ள பொது சேவை அமைப்புகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து முழு கடை அடைப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார்.
    • இணை இயக்குனர் கருணாநிதி வரவேற்பு உரை யாற்றினார்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவ ட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதியில் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை நேற்று தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சென்னையில் இருந்து திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ர்வன் குமார் தலைமை தாங்கினார்.

    உளுந்தூர்பேட்டை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி வரவேற்பு உரை யாற்றினார். நிகழ்ச்சியில் புதிய கட்டிடத்தில் குத்து விளக்கு ஏற்றி 25-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையிலான பவர் டில்லர் எந்திரம், தென்ன மரக் கன்றுகள், பழக்க ன்றுகள் கத்திரிக்கன்றுகள், உள்ளிட்ட விவசாய உபகரணங்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    இதில் ஒன்றிய செய லா ளரும், உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு தலைவருமான ராஜவேல், நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவரும் கிழக்கு ஒன்றிய செயலா ளருமான வைத்தியநாதன், மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், முன்னாள் மாவட்ட கவு ன்சிலர் விஜ யகுமார், தொல்காப்பியன், பத்ம நாபன், ஒன்றிய கவுன்சி லர்கள் ஜெயக்குமார், பழனிவேல், கணேசன், பாக்கியராஜ், ஆறுமுகம், சண்முகம், சர்தார், மனோகர் மற்றும் அலுவலக ஊழியர்கள் அரசு அதிகாரிகள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெரிய ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
    • தண்ணீர் குறைய குறைய நீர்மட்டமும் குறையும்.

    கள்ளக்குறிச்சி:

    திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் இருந்து திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் செல்லும் வரத்து வாய்க்கால் உள்ளது. கடந்த சில தினங்களாக சமூக விரோத கும்பலைச் சேர்ந்த சிலர் இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி, பெரிய ஏரிக்கு தண்ணீர் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தென்பெண்ணை ஆற்றில் தற்போது மழை நீர் ஓடுகிறது. இந்த நீரை ஏரியில் தேக்கி விவசாயத்திற்கு பயன்படு த்தலாம் என விவசாயிகள் விரும்புகின்றனர். அதேசமயம் மீன் குத்தகை எடுத்தவர்கள் ஏரியில் தண்ணீர் நிரம்புவதை விரும்பவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    ஏரியில் தண்ணீர் நிரம்பினால் மீன்பிடிப்பது கஷ்டம் எனவும், தண்ணீர் குறைவாக இருக்கும் போது தான் மீன் பிடிக்க முடியும் எனவும் குத்தகைதாரர்கள் விரும்புகின்றனர். அதனால் தான் தென்பெண்ணை ஆற்றில் தண்ணீர் ஓடுகின்ற போதும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாத ஒரு நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயம் பாதிக்கின்ற நிலையும் உருவாகியுள்ளதாக விவ சாயிகள் புலம்புகின்றனர். மேலும், திருக்கோ விலூர் பெரிய ஏரியில் தண்ணீர் தேங்கி இருக்கும் போது திருக்கோவிலூர் நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். தண்ணீர் குறைய குறைய நீர்மட்டமும் குறையும். இவ்வளவு பிரச்சனைகள் உள்ள நிலையில் ஏரிக்கு தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்காலில் சிமெண்ட் கட்டைகள் மூலம் தடுப்பு ஏற்படுத்திய சமூக விரோத கும்பல் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கவுசல்யா என்ற தடகள வீராங்கனைக்கு வழங்கினார்.
    • அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி முதி யோர் உதவித்தொகை, வீட்டு மனை பட்டாக் கோருதல், விதவை உதவித் தொகை, சாலை வசதி, ஆதரவற்றோர் உதவித் தொகை, பாட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனு தவி கோருதல், ஏரி, குளம் தூர் வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 339 மனுக்களை பொதுமக்களிடமிருந்தும், 32 மனுக்களை மாற்றுத்திற னாளிகளிடம் இருந்தும் மொத்தம் 371 மனுக்களை பெற்றார்.

    மேலும் 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந் தேதி முதல் 30- ந் தேதி வரை உத்திரப்பிரதேச மாநிலம், லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தேக் வாண்டோ சாம்பியன்சிப் போட்டிகளில் தமிழகம் சார்பில் வெற்றி பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், தோட்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி சுதேஷ்னாவை மாவட்ட கலெக்டர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து 5 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வறுமை யில் வாழும், தாகம் தீர்த்தபுரம் அரசு மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கவுசல்யா என்ற தடகள வீராங்கனைக்கு தேவை யான விளையாட்டு உபகர ணங்கள், விளையாட்டு சீருடைகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் வழங்கி னார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சத்திய நாராயணன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலு வலர் கவியரசு, மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், அனைத்துத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

    • நறுமண பொருட்களை கொண்டு கெங்கை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.
    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அடுத்த கீழ்ப்பட்டு கிராமத்தில் உள்ள கெங்கை மாரியம்மன் கோவிலில் தேர் திருவிழா கடந்த 22-ம் தேதி காப்புகட்டி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் ஊரணி பொங்கல் வைத்தல், பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாணம், கழுமரம் ஏறுதல், அலகு போடுதல், காளிகோட்டை இடித்தல், தீ மிதித்தல், அம்மன் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னர் நேற்று பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு நறுமண பொருட்களை கொண்டு கெங்கை மாரியம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் கெங்கை மாரியம்மன் எழுந்தருள தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 3 மணிக்கு நடைபெற்றது. அங்கே திரண்டு நின்ற பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை வந்தடைந்தது. இதில் சுற்றுப்புறத்தை சேர்ந்த கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

    • கால் துண்டான நிலையில் சாலையோரம் கிடந்த உடல்
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள உதயாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நீதி மணி. இவரது மகன் ராஜேஷ் (வயது 38). தியாகதுருகத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் டிரைவராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணி அளவில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சாலப்பாக்கம் பகுதியில் இருந்து செம்பி யன்மாதேவி கிராமம் செல்லும் வழியில் சேலம்- உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இடது கால் துண்டான நிலையில் ராஜேஷ் உயிரிழந்து கிடந்தார். 

    இது குறித்து எலவனாசூர் கோட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ராஜேஷ் நள்ளிரவில் எதற்காக அங்கு வந்தார்? அவர் சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தாரா? அல்லது படுகொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் எலவனாசூர் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த ராஜேசுக்கு திருமணம் ஆகி 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    • தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
    • கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை ஆய்வு செய்தார்.

    கள்ளக்குறிச்சி:

    ரிஷிவந்தியம் வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரடியாக விவசாயிகளின் வயலில் தோட்டக்கலை துணை இயக்குனர் சு.சசிகலா ஆய்வு செய்து தோட்டக்கலை புதிய தொழில்நுட்பம் சாகுபடி குறித்து விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் பாசர், மரூர், முட்டியம் கிராமத்தில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் பணிகள் முடிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குறைந்த விலை வெங்காய சேமிப்பு கிடங்கு, சீர்பாத நல்லூர் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தோட்டக்கலைத் துறையின் மூலம் மானியம் வழங்கப்பட்டு தற்போது உற்பத்தி செய்து வரும் காளான் வளர்ப்பு குடில், கடுவனூர் கிராமத்தில் புதிய பரப்பு விரிவாக்கம், பழப்பயிர் இனத்தின் கீழ் பாக்கு நடவு செடிகளுக்கு இடையில் ஊடுபயிராக பப்பாளி, வாழை நடவு தோட்டத்தினையும், உயர்ரக தோட்டக்கலை தொழில்நுட்ப சாகுபடி இனத்தின் கீழ் துறையின் மூலம் பிளாஸ்டிக் நிலப் போர்வை மற்றும் சொட்டுநீர் பாசன முறையில் தர்பூசணி, முலாம்பழம் நடவு செய்துள்ள விவசாயிகளின் வயல் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

    அதனைத் தொடர்ந்து கூடலூர், மருர், சீர்பாதநல்லூர் ஆகிய கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பில் தமிழக அரசின் மூலம் திறந்த வெளி கிணறு அமைக்கும் பணிகளின் தற்போதைய நிலை மற்றும் திட்ட இனத்தின் வாரியாக பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஆய்வு செய்து தரிசு நில தொகுப்பில் உள்ள விவசாயிகள் மற்றும் அக்கிராம பொறுப்பு அலுவலரிடம் அடுத்த கட்ட பணிகளான தேர்வு செய்யப்பட்டுள்ள தரிசு நில தொகுப்பு செம்மைப்படுத்தும் நோக்கில் விருப்பமுள்ள தகுதியான விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகள் விரும்பும் சொட்டுநீர் பாசன நிறுவனத்தின் மூலம் உரிய ஆவணங்கள் இணையத்தில் பதிவு மற்றும் பணி ஆணை வழங்கி சொட்டுநீர் பாசன வசதிகள் ஏற்படுத்தி கொடுத்து விவசாயிகளுக்கு நீண்ட காலம் வருமானம் தரக்கூடிய மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லி, பாலா, தேக்கு உள்ளிட்ட ஏனைய பல்லாண்டு பழ பயிர்கள் மற்றும் மர பயிர்களை நடவுப் பணிகள் , பயிர் பராமரிப்பு பாதுகாப்பு பணிகள் முறையாக மேற்கொள்ளுமாறு மேலும் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்ட மானியங்கள் பயன்பெறுமாறு விவசாயிகளிடம் கேட்டுக் கொண்டார். ஆய்வின் போது ரிஷிவந்தியம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் முருகன், வேளாண்மை துணை அலுவலர் சிவனேசன் தோட்டக்கலை உதவி அலுவலர் ராஜேஷ், சீனிவாசன், வேலன் வேளாண்மை உதவி அலுவலர் நசுருல்லா, அப்பாஸ் கிராம பொதுமக்கள் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

    • சண்முகப்பிரியனுடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சின்ன சேலம் நோக்கி சென்றார்.
    • இளங்கோவனும், சண்முகப்ரியனும் பலத்த காயமடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் (வயது 40). கூலி தொழிலாளி. இவருக்கு ரேவதி என்ற மனைவியும், சண்முகப்பிரியன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் இளங்கோவன், அவரது மகன் சண்முகப்பிரியனுடன் இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சியில் இருந்து சின்ன சேலம் நோக்கி சென்றார். அப்போது பங்காரம் அருகே உள்ள சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது, பின்னால் வந்த தனியார் சொகுசு பஸ் இணங்கோவன் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் இளங்கோவனும், சண்முகப்ரியனும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் இளங்கோவன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள்.
    • இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த வெங்கடா சலம் (வயது 60). ஓய்வு பெற்ற ெரயில்வே ஊழியரான இவருக்கு சுமதி என்ற மனைவி உள்ளார். இவர்க ளுக்கு சொந்தமான விவ சாய நிலத்தில் உள்ள கூரை வீட்டில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் வெங்கடாசலமும், சுமதியும் தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்பொழுது இவரது கூரை வீடு திடீரென புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனை கண்ட வெங்கடாசலமும், சுமதியும் அலறி அடித்துக் கொண்டு வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மல மலவென கொழுந்து விட்டு எறிந்தது.

    இது குறித்து சின்ன சேலம் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை முழுவது மாக அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் பணம், பீரோ, கட்டில், டி.வி., பிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்ப லானது. திடீரென கூரை வீட்டில் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15 ஆயிரமும், இடைநிலைஆசிரியர் நிலையில் ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும்.
    • பள்ளிஅமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை மாணவர்களின் நலன்கருதி தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் ஆசிரியர் களை நியமனம்செய்ய ஆதி திராவிடர் நல இயக்குநர் தெரி வித்துள்ளார். அதன்படி பட்டதாரி ஆசிரி யர் நிலையில் ஆங்கிலம்-2, கணிதம்-1, அறிவியல்-1, சமூக அறிவியல்-1 என 5 காலிப்பணியிடங்களும், இடை நிலை ஆசிரியர் நிலையில் 22காலிப்பணியிடங்களும் உள்ளன. பட்டதாரி ஆசிரியர் நிலையில் ரூ.15 ஆயிரமும், இடைநிலைஆசிரியர் நிலையில் ரூ.12 ஆயிரம் மாத ஊதியம் வழங்கப்படும்.

    வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற வர்கள், இடை நிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்த வர்க்கும், பள்ளிஅமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். விண்ணப்பதாரர்களிட மிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று களுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம் வருகிற 5-ந் தேதிமாலை 5 மணிக்குள்சமர்ப்பிக்க வேண்டும். கால நிர்ணயத்திற்கு பின்பு வரப்பெறும் விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

    ×