என் மலர்
உள்ளூர் செய்திகள்
தேன்கனிக்கோட்டையில் போராட்டம் அறிவித்து போஸ்டர்: இந்து முன்னணி கட்சினர் 10 பேர் கைது
- மத உணர்வை தூண்டும் வகையில் வாசகம் இடம் பெற்றதாக தெரிகிறது.
- பா.ஜ.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு இந்து முன்னணி மாவட்ட செயலாளரான தேன்கனிக்கோட்டையை சேர்ந்த குருபிரசாத் (எ)கார்த்திக் (வயது29), மற்றும் அரிஷ் (29), சேசாத்திரி (19), வசந்தகுமார் (20), ஜெய குமார் (23), பவன்குமார் (22), சதீஷ் (29), பிரபு (19), ரவிக்குமார் (31), யஷ்வந்த குமார் (28) உள்ளிட்ட 10 பேர் திருப்பரங்குன்றத்தில் வரும் 4-ந்தேதி நடைபெறும் போராட்டம் குறித்து போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.
அதில் மத உணர்வை தூண்டும் வகையில் வாசகம் இடம் பெற்றதாக தெரிகிறது.
நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர் கணேஷ் குமார், எஸ்.ஐ. நாகராஜ் ஆகியோர் போஸ்டர் ஓட்டிக் கொண்டிருந்த 10 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.
அதை அறிந்த இந்து முன்னணி மாவட்ட தலைவர் கலைகோபி, பா.ஜ.க. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட தலைவர் நாகராஜ் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ.க. நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று காலை காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
அப்போது தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக தெரிவித்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தேன்கனிக்கோட்டை நீதி மன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து மேஜிஸ்திரேட் தினேஷ் 10 பேரையும் பிப்ரவரி 13-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தர விட்டார்.