என் மலர்
உள்ளூர் செய்திகள்

மழை நேரத்தில் 'புக்கிங்'கை ரத்து செய்து பயணிகளை தவிக்க வைத்த கார் டிரைவர்கள்

- ஆப் மூலம் புக் பண்ணினால் எளிதில் புக் ஆவதில்லை. புக் ஆனாலும் இரு மடங்கு கட்டணம் கேட்பார்கள்.
- வாடிக்கையாளர்கள் செயலியில் இவ்வளவுதானே கட்டணம் வந்துள்ளது என்று கேட்டால் மழை நேரம் கூடுதல் கட்டணம் தந்தால் தான் முடியும் என்று கூறி விடுகிறார்கள்.
சென்னை:
சென்னையில் மழை வந்தால் பொதுமக்களுக்கு திண்டாட்டம். ஆனால் வாடகை கார், ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கொண்டாட்டம் தான்.
மழை நேரம் என்பதால் அலுவலகங்கள் மற்றும் வேலைகளுக்கு செல்பவர்கள் ஓலா, ஊபர் கார் மற்றும் ஆட்டோக்களை நாடினார்கள். பெரும்பாலும் எல்லோரும் போன்களில் ஓலா, ஊபர் செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்து உள்ளனர்.
இந்த ஆப் மூலம் புக் பண்ணினால் எளிதில் புக் ஆவதில்லை. புக் ஆனாலும் இரு மடங்கு கட்டணம் கேட்பார்கள்.
வாடிக்கையாளர்கள் செயலியில் இவ்வளவுதானே கட்டணம் வந்துள்ளது என்று கேட்டால் மழை நேரம் கூடுதல் கட்டணம் தந்தால் தான் முடியும் என்று கூறி விடுகிறார்கள்.
அதில் பலர் சவாரியை ஏற்ற பிறகு வருவதில்லை. அந்த டிரிப்பை அவர்கள் ரத்து செய்யவும் மறந்து விடுகிறார்கள். வாடிக்கையாளர்கள் ரத்து செய்தால் ரூ.50 வசூலிப்பார்கள்.
எழும்பூரில் இருந்து அயனாவரம் பஸ் நிலையத்துக்கு ஆட்டோ கட்டணம் செயலியில் ரூ.117 காட்டியது. ஆனால் டிரைவர்கள் ரூ.200 கேட்டனர். இதே போல் கார் வாடகை ரூ.150 ஆக இருந்தது. ஆனால் ரூ.250 வசூலித்தார்கள்.