என் மலர்
உள்ளூர் செய்திகள்

முன்னாள் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீட்டில் 2- வது நாளாக அமலாக்கத்துறை அதிரடி சோதனை
- போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள உறவினர் வீடு ஆகியவற்றில் நடைபெற்ற சோதனை இன்றும் நீடித்ததையடுத்து அதிகாரிகள் ஆய்வை தொடர்ந்தனர்.
- மார்ட்டினின் சொத்துக்களை கடந்த ஆண்டு முடக்கிய நிலையில் இந்த சோதனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:
முன்னாள் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். சென்னை மற்றும் கோவையில் இந்த சோதனை இன்று 2-வது நாளாக நீடித்தது.
போயஸ் கார்டனில் உள்ள மார்ட்டினின் வீடு மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள உறவினர் வீடு ஆகியவற்றில் நடைபெற்ற சோதனை இன்றும் நீடித்ததையடுத்து அதிகாரிகள் ஆய்வை தொடர்ந்தனர். மார்ட்டினின் சொத்துக்களை கடந்த ஆண்டு முடக்கிய நிலையில் இந்த சோதனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story