என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிண்டி பாம்பு பண்ணை 50 ஆண்டுகளை நிறைவு செய்தது

- நாட்டின் பிற இடங்களில் இதே போன்ற முயற்சிகள் அமையவும் கிண்டி பாம்பு பண்ணை ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.
- சென்னையின் புறநகரில் உள்ள சேலையூரில் முதலில் நிறுவப்பட்டது.
சென்னை:
கிண்டியில் உள்ள பாம்பு பூங்கா சிறப்பு பெற்றது. இது புகழ்பெற்ற ரோமுலஸ் விட்டேக்கர் என்பவரால் கடந்த 1972 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
பாம்புகளை பராமரிக்கவும், காட்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த பாம்பு பண்ணை தொடங்கப்பட்டது. இது லாப நோக்க மற்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் பாம்புகள் மற்றும் பிற ஊர்வன விலங்குள் மீது பொது மக்களின் ஆர்வத்தை வெளிப்படுத்த தூண்டுகிறது.
இது இந்தியாவின் முதல் ஊர்வன பூங்காவாகும். சென்னையின் புறநகரில் உள்ள சேலையூரில் முதலில் நிறுவப்பட்டது. பின்னர் ஒரு குழுவின் உதவியுடன் சென்னையைச் சேர்ந்த இயற்கை ஆர்வலர்கள், 1972-ம் ஆண்டு கிண்டியில் பாம்பு பூங்கா அமைக்கப்பட்டது.
தமிழக அரசின் வனத் துறையிடம் இருந்து குத்தகைக்கு பெறப்பட்ட நிலத்தில் பாம்பு பண்ணை அமைந்துள்ளது. இதனை நிர்வகிக்க ஒரு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் ஊர்வனவற்றை பாதுகாப்பதில் மட்டுமல்லாமல், ஊக்குவிப்பதிலும், நாட்டின் பிற இடங்களில் இதே போன்ற முயற்சிகள் அமையவும் கிண்டி பாம்பு பண்ணை ஒரு முன்மாதிரியாக திகழ்கிறது.
கிண்டி பாம்பு பண்ணையில் தற்போதைய நிலவரப்படி 20 இந்திய பாம்புகளின் இனங்கள், இந்திய முதலைகளின் 3 இனங்கள். இரண்டு வகையான கவர்ச்சியான பாம்புகள், முதலைகள், மூன்று வகையான இந்திய ஆமைகள் மற்றும் ஆமைகள், 4 வகையான இந்திய பல்லிகள், பச்சை ஓணான்கள், ஸ்லைடர் ஆமை போன்ற சில வெளிநாட்டு ஊர்வன என மொத்தம், 34 இனங்களைச் சேர்ந்த 300 விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மிகவும் சிறப்பு மிக்க கிண்டி பாம்புபண்ணை அதன் வெற்றிகரமான 50 ஆண்டுகளை நிறைவு செய்து, பொன்விழா விழாவைக் கொண்டாட தயாராகி வருகிறது.
இந்த விழா நிகழ்ச்சி கிண்டியில் உள்ள ஹோட்டல் ரமடா பிளாசாவில் நாளை(21-ந்தேதி) நடைபெறுகிறது. இதில் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, வனத்துறை அதிகாரி சையத் முஸம்மில் அப்பாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற் கிறார்கள்.