search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சமூக ஆர்வலர் கொலை வழக்கு: 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க முடிவு
    X

    சமூக ஆர்வலர் கொலை வழக்கு: 5 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க முடிவு

    • ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு.
    • 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது 58). அதிமுக பிரமு கரும் சமூக ஆர்வலருமான இவர் திருமயம் துளையானூர் பகுதியில் இயங்கும் கல் குவாரிகளில் நடைபெறும் முறை முறைகேடுகளுக்கு எதிராக போராடி வந்தார்.

    இதையடுத்து கடந்த 17-ந் தேதி ஜகபர் அலி லாரி ஏற்றி கொலை செய்யப் பட்டார்.

    இது தொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ராசு, ராமையா ஆகிய 2 கல் குவாரி அதிபர்கள் உள்பட 5 பேரை கைது செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. க்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை நடந்த இடம் மற்றும் குவாரி உள்ளிட்ட வழக்கு தொடர்பான பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் கைதான ஐந்து பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    அதன்படி புதுக்கோட்டை இரண்டாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதில் ஒவ்வொருத்தரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

    நீதிமன்றம் அனுமதிக்கும் நாட்களில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×