என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருப்பூரில் பெண்ணை வழிமறித்து சரமாரி அரிவாள் வெட்டு: மர்மநபர்கள் வெறிச்செயல்
திருப்பூர்:
திருப்பூரை சேர்ந்தவர் சரண்யா (வயது 20) , திருமண மானவர். இவர் இன்று காலை தனது தாயார் வீட்டிற்கு செல்வதற்காக திருப்பூர் அவிநாசி-பெருமாநல்லூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
60 அடி சாலையில் சென்று கொண்டிருந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 நபர்கள் சரண்யாவின் இருசக்கர வாகனத்தை மறித்துள்ளனர்.
அதில் பின்னால் அமர்ந்திருந்த ஹெல்மெட் அணிந்திருந்த நபர் தான் வைத்திருந்த கூர்மையான அரிவாளால் சரண்யாவின் கை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரி வெட்டினார்.
அருகில் இருந்தவர்கள் கூச்சலிடவே ஹெல்மெட் அணிந்திருந்த நபர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றனர்.
காயம் அடைந்த சரண்யாவை அக்கம்ப க்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலு தவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு சரண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் பெண் மீது நடைபெற்ற இந்த தாக்குதல் சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குடும்பத் தகராறு காரணமாக இந்த தாக்குதல் நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் காரணமா ? என்பது குறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்தநிலையில் சரண்யாவின் கணவர் ரமேஷ், திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். எனவே அவர்தான் சரண்யாவை வெட்டினாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.