என் மலர்
இந்தியா

ஆந்திராவில் சிறுமியை 4 நாட்கள் வீட்டில் அடைத்து 7 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை
- சிறுமியை கடத்திச் சென்ற இருவரும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர்.
- பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியால் பேச முடியவில்லை.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் ஜி.கொண்டூரை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் கடந்த 9-ந்தேதி பக்கத்து வீட்டுக்காரருடன் வீரபனேனி குடேமில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார்.
கடந்த 13-ந்தேதி உறவினருக்கும், சிறுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் சிறுமி கோபித்துக் கொண்டு உறவினர் வீட்டில் இருந்து வெளியேறி தனியாக நடந்து சென்று கொண்டு இருந்தார்.
இதனை கவனித்த 15 வயது சிறுவன் மற்றும் ரசாக் என்ற வாலிபர் சிறுமியிடம் வந்து நைசாக பேசினர். பைக்கில் அழைத்து சென்று வீட்டில் பத்திரமாக விடுவதாக தெரிவித்தனர். இதனை நம்பிய சிறுமி அவர்களுடன் பைக்கில் சென்றார்.
சிறுமியை கடத்திச் சென்ற இருவரும் ஒரு வீட்டில் அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர் அவர்களின் நண்பர்களான அணில் குமார், ஜிதேந்திராவுக்கு போன் செய்து வரவழைத்தனர். அவர்களும் சிறுமியை வன்கொடுமை செய்தனர். அதன் பின்னர் அனித், ஹர்ஷவர்தன், கேசர்ப்பள்ளியை சேர்ந்த சிறுவன் ஆகியோர் சிறுமியை 4 நாட்களாக வீட்டில் அடைத்து வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
4 நாட்களுக்கு பிறகு சிறுமியை என்.டி.ஆர் மாவட்டம் மச்சாவரம் சாலையில் விட்டு தப்பி சென்றனர்.
அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் சிறுமியை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். பாலியல் வன்கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட சிறுமியால் பேச முடியவில்லை.
இதையடுத்து போலீசார் சிறுமியை சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது சம்பந்தமாக போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் கைது செய்தனர்.