search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் ஆந்திர மாணவர்களுக்கு கல்வி இட ஒதுக்கீடு ரத்து
    X

    தெலுங்கானாவில் ஆந்திர மாணவர்களுக்கு கல்வி இட ஒதுக்கீடு ரத்து

    • தெலுங்கானாவில் தொழில்துறை படிப்புகளில் ஆந்திர மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது.

    ஆந்திரா, தெலுங்கானா மாநில பிரிவினையின் போது இரு மாநிலங்களுக்கு இடையே 10 ஆண்டுகளுக்கான கல்வி இட ஒதுக்கீடு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இதனால் வரும் கல்வியாண்டு முதல் தெலுங்கானாவில் தொழில்துறை படிப்புகளில் ஆந்திர மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது. தெலுங்கானாவை சேர்ந்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 15 சதவீத ஒதுக்கீடு வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

    இந்த அறிவிப்பின் மூலம் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் தெலுங்கானா கல்வி நிறுவனங்களில் இனி இட ஒதுக்கீட்டில் சேர்ந்து படிக்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×