search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
    X

    நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

    • பெண்கள் அமைப்பு போராட்டம் காரணமாக மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றச்சாட்டுகளால் மலையாள திரைப்பட உலகம் தற்போது பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

    நடிகைகள் கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் நடிகர்கள் முகேஷ் எம்.எல்.ஏ., ஜெயசூர்யா, இடைவேள பாபு, மணியன் பிள்ளை ராஜு, இயக்குனர்கள் ரஞ்சித், பிரகாஷ் ஆகியோர் மீது பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    பெண்கள் அமைப்பு போராட்டம் காரணமாக மலையாள திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருவனந்தபுரத்தை சேர்ந்த நடிகை ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    2013-ம் ஆண்டு தொடுபுழாவில் நடந்த படப்பிடிப்பின்போது பாலியல் ரீதியாக ஜெயசூர்யா அத்துமீறியதாக நடிகை புகார் அளித்துள்ளார். இதையடுத்து ஜெயசூர்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×