search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்-க்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு
    X

    பத்திரமாக பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்-க்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு

    • ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
    • அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

    விண்வெளியில் ஆராய்ச்சி பணி மேற்கொள்வதற்காக சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் சார்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போயிங் ஸ்டார்லைனர் என்ற விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அனுப்பப்பட்டனர்.

    வெறும் 8 நாட்கள் தங்கி இருந்து பூமிக்கு திரும்ப வேண்டிய அவர்கள், போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அங்கேயே தங்க வேண்டிய சூழல் உருவானது. அடுத்தடுத்து நடந்த தொடர் முயற்சிகளிலும் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் பூமிக்கு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

    இதனால் அவர்கள் 9 மாதங்கள் விண்வெளி மையத்திலேயே தவித்து வந்தனர். இந்த நிலையில், விண்வெளி ஆய்வு மையத்தில் சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு டிராகன் விண்கலம் இன்று அதிகாலை பூமிக்கு திரும்பியது. இதையடுத்து பூமி திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நாசாவின் #Crew9 பூமிக்கு பாதுகாப்பாக திரும்பியதில் மகிழ்ச்சி! இந்தியாவின் மகள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் பிற விண்வெளி வீரர்கள் அடங்கிய குழுவினர் விண்வெளியில் மனித சகிப்புத்தன்மை மற்றும் விடாமுயற்சியின் வரலாற்றை மீண்டும் எழுதியுள்ளனர்.

    சுனிதா வில்லியம்ஸின் நம்பமுடியாத பயணம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் போராடும் மனப்பான்மை உலகம் முழுவதும் உள்ள மில்லியன் கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும். அவரது பாதுகாப்பான வருகை விண்வெளி ஆர்வலர்களுக்கும் முழு உலகிற்கும் கொண்டாட்டத்தின் தருணம். அவரது தைரியமும் சாதனைகளும் நம் அனைவரையும் பெருமைப்படுத்துகின்றன.

    அவர்களை பூமிக்கு பாதுகாப்பாக மீண்டும் கொண்டு வந்த அனைவருக்கும் வாழ்த்துகள் மற்றும் ஒரு பெரிய நன்றி," என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×