search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட்- டி.கே.சிவக்குமார்
    X

    லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட்- டி.கே.சிவக்குமார்

    • நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
    • நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் மாநிலங்கள், வட இந்தியாவிலும் பலத்த எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியிருப்பது.

    மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்க்கட்சிக்கும் ஆளுங்கட்சிக்கும் இடையே நீட் விவகாரத்தால் வார்த்தைப்போர் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் நீட் தேர்வுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நீட் தேர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    மருத்துவ படிப்புகளுக்கு அந்தந்த மாநிலங்களே நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்.

    நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகள் மிகவும் தீவிரமானவை.

    மாநிலங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் பிற மாநில மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கலாம்" என்றார்.

    Next Story
    ×