search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூரி ஜகந்நாதர் கோயில் கருவூல சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டது.. மோடி மீண்டும் வெறுப்புப் பேச்சு
    X

    'பூரி ஜகந்நாதர் கோயில் கருவூல சாவி தமிழ்நாட்டுக்குச் சென்றுவிட்டது'.. மோடி மீண்டும் வெறுப்புப் பேச்சு

    • ஒடிசாவின் பழமையான அடையாளங்களில் ஒன்றான புகழ் பெற்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் உள்ளது.
    • கட்டாக்கில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

    ஒடிசாவின் பழமையான அடையாளங்களில் ஒன்றான புகழ் பெற்ற 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பூரி ஜகநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கருவூல புதையல் அறை என்று அழைக்கப்படும் ரத்ன பண்டர் உள்ளது. ரத்னா பண்டர் பல நூற்றாண்டுகளாகப் பக்தர்கள் மற்றும் முன்னாள் மன்னர்களால் வழங்கப்பட்ட தெய்வங்களின் விலைமதிப்பற்ற ஆபரணங்களை உள்ளன.

    இது கடைசியாக ஜூலை 14, 1985 இல் திறக்கப்பட்டது. இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டில், அறையைத் திறக்குமாறு ஒடிசா உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் அறையின் சாவியைக் கண்டுபிடிக்க முடியவில்லை, கடந்த 6 ஆண்டுகளாக அறையின் சாவி கிடைக்காதது மாநிலம் அளவில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்தது.

    இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்காக நேற்று (மே 20) ஒடிசா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பூரி ஜெகநாதர் கோவிலில் வழிபாடு செய்தார். பின்னர் கட்டாக்கில், தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவர் தமிழ்நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார்.

    அங்கு நடைபெற்ற பேரணியில் மோடி பேசுகையில், "முதல்வர் நவீன் பட்நாயக்கின் பிஜேடி ஆட்சியில் பூரி ஜெகநாதர் கோவில் பாதுகாப்பாக இல்லை. கடந்த 6 ஆண்டுகளாக ரத்ன பண்டர்(கருவூல அறை) சாவிகள் காணாமல் போய்விட்டன. ரத்ன பண்டரின் காணாமல் போன சாவிகள் பற்றி ஒடிசா முழுவதும் அறிய விரும்புகிறது, ஆனால் பிஜேடி அதை மூடி மறைகிறது.

    பிஜேடியின் மௌனம் இந்த விவகாரத்தில் மக்களின் சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளது. ரத்ன பண்டரின் சாவி தமிழகத்துக்கு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

    ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருங்கிய உதவியாளரும், பிஜேடியின் முக்கிய தேர்தல் வியூகதை வகுப்பவருமான தமிழகத்தைச் சேர்ந்த வி.கே.பாண்டியனை மறைமுகமாக மோடி குறிப்பிட்டுள்ளார் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். வி.கே.பாண்டியனை விமர்சிக்க பொதுப்படையாக 'தமிழ்நாடு' என குறிப்பிட்டு மோடி மீண்டும் வெறுப்புப் பேச்சில் ஈடுபட்டுள்ளார் என்று கண்டனங்கள் எழுந்து வருகிறது. ஒடிசாவில் பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×