என் மலர்
இந்தியா

X
தெலுங்கானாவில் 300 அடி நீள தேசிய கொடியை ஏந்தி சென்ற மாணவர்கள்
By
Maalaimalar25 Jan 2025 10:49 AM IST (Updated: 25 Jan 2025 10:49 AM IST)

- பொதுமக்களிடையே தேசப்பற்று ஏற்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தி சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
- குடியரசு தினத்தை முன்னிட்டு 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை உருவாக்கினர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம், கம்மம் மாவட்டம், கொனிஜார்லா அடுத்த தணிகெல்லாவில் உள்ள பள்ளியில் பெண் குழந்தைகள் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை உருவாக்கினர்.
நேற்று மாணவ மாணவிகள் சுதந்திர போராட்ட வீரர்கள் போல் வேடமணிந்து வந்து சாலையில் 300 அடி நீளம் உள்ள தேசிய கொடியை ஏந்தி தேசபக்தி பாடல்களை பாடியபடி சாலைகளில் ஊர்வலமாக சென்றனர்.
பொதுமக்களிடையே தேசப்பற்று ஏற்படுத்தும் விதமாக தேசிய கொடியை ஏந்தி சென்றதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
X