search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தெலுங்கானாவில் மகள், மகனை கொன்று தம்பதி தூக்கிட்டு தற்கொலை.. கடன் தொல்லையால் குடும்பமே அழிந்த சோகம்
    X

    தெலுங்கானாவில் மகள், மகனை கொன்று தம்பதி தூக்கிட்டு தற்கொலை.. கடன் தொல்லையால் குடும்பமே அழிந்த சோகம்

    • தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர்.
    • சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்தார்.

    தெலுங்கானா மாநிலம் கல்குவத்தியை சேர்ந்தவர் சந்திரசேகர் ரெட்டி (வயது 44). இவரது மனைவி கவிதா (வயது 35).

    தம்பதிக்கு ஸ்ரீதா ரெட்டி (15 ), விஸ்வன் ரெட்டி (10) என ஒரு மகள், மகன் இருந்தனர். சந்திரசேகர் ரெட்டி ஹப்சிகுடாவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை செய்து வந்தார்.

    கடந்த 6 மாதங்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் வருவாய் இல்லாமல் குடும்பம் வறுமையில் வாடியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகர் ரெட்டி தனது மகளை தூக்கில் தொங்கவிட்டும், மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தார்.

    பின்னர் கணவன், மனைவி இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். போலீசார் 4 பேரின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சந்திரசேகர் ரெட்டி எழுதி வைத்த கடிதம் மூலம் அவர் கடன் தொல்லையால் மகன் மகளைக் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்தது தெரியவந்தது.

    Next Story
    ×