search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    146-வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை
    X

    146-வது பிறந்தநாள்: பெரியார் சிலைக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை

    • சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
    • முதலமைச்சர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை:

    பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் சிம்சன் அருகே உள்ள பெரியார் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

    தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, டி. ஆர்.பாலு எம்.பி., கனிமொழி எம்.பி., அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு.

    மேயர் பிரியா, சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு, ப.ரங்கநாதன், எம்.எல்.ஏ.க்கள் பரந்தாமன், தி.நகர் ஜெ.கருணாநிதி, மயிலை த.வேலு, எழிலன், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, சேப்பாக்கம் மதன்மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

    Next Story
    ×