search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்- சீமான் புதிய கூட்டணியை உருவாக்குகிறார்
    X

    2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்- சீமான் புதிய கூட்டணியை உருவாக்குகிறார்

    • 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் களம் வித்தியாசமானதாகவே இருக்கும்.
    • புதிய கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கான எதிர்பார்ப்பு இப்போதே ஏற்பட தொடங்கி உள்ளது.

    தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க., பா.ஜனதா கட்சிகள் தனித்தனி கூட்டணியை ஏற்படுத்தி உள்ள நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் சீமானுடன் விஜய் கைகோர்க்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இப்படி இருவரும் கை கோர்க்க இருக்கும் புதிய கூட்டணி தேர்தல் களத்தில் திராவிட கட்சிகளுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சீமானுடன் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளையும் எதிர்க்கும் முக்கிய கட்சிகள் பலவும் கை கோர்க்க இருப்பதாக பரபரப்பான புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இது தொடர்பாக திரை மறைவில் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. வடமாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் செல்வாக்குள்ள கட்சிகளோடும், சிறிய கட்சிகள் சிலவற்றுடனும் கூட்டணி அமைத்து 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலை நாம் தமிழர் கட்சி சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    நாம் தமிழர் கட்சி 8 சதவீத ஓட்டுகளை எட்டிப்பிடித்து அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறியிருக்கும் நிலையில் விஜயும் கைகோர்க்கிறார்.

    அதுபோன்ற சூழலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா எதிர்ப்பு ஓட்டுகளை ஒருங்கிணைப்பதால் நிச்சயம் பெற்றி பெற முடியும் என்பதே புதிய கூட்டணியின் கணக்காக உள்ளது.

    இதுபற்றி அரசியல் நிபுணர் ஒருவர் கூறும்போது, 2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் களம் வித்தியாசமானதாகவே இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. சீமானின் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறி இருப்பதும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் களம் இறங்குவதுமே அதற்கு முக்கிய காரணமாகும்.

    இவர்கள் இருவரும் சேர்ந்து தேர்தலை சந்தித்தாலே அது திராவிட கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருக்கும். இவர்களோடு மற்ற கட்சிகளும் சேரும்பட்சத்தில் புதிய கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். அது போன்று ஒரு கூட்டணி உருவானால் நிச்சயம் அது 2 திராவிட கட்சிகளின் வாக்குகளை பிரிக்கும் வகையிலேயே அமையும் என்றார்.

    Next Story
    ×