search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த பாடப் புத்தகங்களின் விலை
    X

    தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த பாடப் புத்தகங்களின் விலை

    • பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.
    • 10ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1130க்கு விற்பனையாகிறது.

    தமிழகத்தில் பாடப் புத்தகங்கள் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களின் விலையை உயர்த்தி பாடநூல் கழகம் அறிவித்துள்ளது.

    அதன்படி, 1ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.16 உயர்ந்து, ரூ.550க்கு விற்பனையாகிறது. 2ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.150 உயர்ந்து ரூ.530க்கு விற்பனையாகிறது.

    3ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.190 உயர்ந்து ரூ.620க்கு விற்பனையாகிறது. 4ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.180 உயர்ந்து, ரூ.650க்கு விற்பனையாகிறது.

    5ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.200 உயர்ந்து ரூ.710க்கு விற்பனையாகிறது. 6ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.320 உயர்ந்து ரூ.1110க்கு விற்பனையாகிறது.

    7ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1200 உயர்ந்துள்ளது. 8ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1000 உயர்ந்துள்ளது.

    9ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1110க்கு விற்பனையாகிறது. 10ம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து, ரூ.1130க்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×