என் மலர்
தமிழ்நாடு

தமிழில் பெயர்ப் பலகை வைக்க வணிகர்கள் முன்வர வேண்டும் - மு.க.ஸ்டாலின்
- பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக அதிகரித்துள்ளது.
- வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் கருணாநிதியால் தொடங்கப்பட்ட வணிகர் நலவாரியம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
* வணிகர் நல வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை 30 ஆக திமுக அரசு உயர்த்தியது.
* 40,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் இணைந்துள்ளனர்.
* பதிவு பெற்ற வணிகர்களின் எண்ணிக்கை 88,219 ஆக அதிகரித்துள்ளது.
* வணிகர்களுக்காக பல முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க தயாராக உள்ளோம்.
* வணிகர்களுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகர்கள் கிடையாது.
* தமிழில் பெயர் பலகை வைக்க வணிகர்கள் முன் வரவேண்டும்.
* நலிவுற்ற வணிகர்களுக்கு பெட்டிக்கடை வைக்கவும், 3 சக்கர வாகனம் வழங்க ரூ.10,000 வழங்கப்படுகிறது.
* வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் உயிரிழந்தால் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிதி ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று கூறினார்.