என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முபின் தங்கை கணவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
- கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் தங்கை கணவர் ஆவார்.
- சோதனையின் நடுவிலேயே முகமது யூசுப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இன்று தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.
திருப்பூரில் திருப்பூர்-காங்கயம் ரோட்டில் வெங்கடேஸ்வரா 6-வது வீதியில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இவர் கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் தங்கை கணவர் ஆவார். இவருக்கு கார் வெடிப்பு குறித்து தெரிந்திருக்கலாம் என என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.
சந்தேகத்தின் பேரில், சோதனையின் நடுவிலேயே முகமது யூசுப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு வைத்து அவரிடம் கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? முபின் இது குறித்து உங்களிடம் ஏதாவது பேசினாரா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனையொட்டி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்