search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முபின் தங்கை கணவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை
    X

    முபின் தங்கை கணவரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

    • கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் தங்கை கணவர் ஆவார்.
    • சோதனையின் நடுவிலேயே முகமது யூசுப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    கோவை கார் வெடிப்பு சம்பந்தமாக இன்று தமிழகம் முழுவதும் 45 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

    திருப்பூரில் திருப்பூர்-காங்கயம் ரோட்டில் வெங்கடேஸ்வரா 6-வது வீதியில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவரின் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

    இவர் கோவை கார் வெடிப்பில் இறந்த ஜமேஷா முபினின் தங்கை கணவர் ஆவார். இவருக்கு கார் வெடிப்பு குறித்து தெரிந்திருக்கலாம் என என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

    சந்தேகத்தின் பேரில், சோதனையின் நடுவிலேயே முகமது யூசுப்பை என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணைக்காக திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு வைத்து அவரிடம் கார் வெடிப்பு சம்பவம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா? முபின் இது குறித்து உங்களிடம் ஏதாவது பேசினாரா? என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரித்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனையொட்டி திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×