search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வியாசர்பாடியில் தண்டவாளத்தில் மழைநீர்: சிக்னல் கிடைக்காததால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆவடியில் நிறுத்தம்
    X

    வியாசர்பாடியில் தண்டவாளத்தில் மழைநீர்: சிக்னல் கிடைக்காததால் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆவடியில் நிறுத்தம்

    • சதாப்தி எக்ஸ்பிரஸ்ரெயில் காலை 11 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
    • மின்சார ரெயில் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    திருநின்றவூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    வியாசர்பாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பேசின் பிரிட்ஜ், வியாசர்பாடி ரெயில் நிலையம் அருகே எக்ஸ்பிரஸ் ரெயில் தண்டவாள பாதையில் மழை நீர் தேங்கியது.

    இதனால் சிக்னல் கிடைப்பதில் பிரச்சினை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து தண்டவாளத்தில் தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சிக்னல் கிடைக்காததால் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை 10.30 மணியளவில் ஆவடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. மதியம் 12.30 மணிவரை சிக்னல் சீராகவில்லை. இதைத்தொடர்ந்து பயணிகள் ரெயிலில் இருந்து இறங்கி மாநகர பஸ்களிலும், ஆட்டோக்களிலும் சென்றனர். இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். சதாப்தி எக்ஸ்பிரஸ்ரெயில் காலை 11 மணிக்கு சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் இதன் பின்னால் பெங்களூரில் இருந்து வந்த வந்தே பாரத்ரெயில் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக ரெயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து மழையின் காரணமாக வந்தே பாரத் ரெயில் பெரம்பூரில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மின்சார ரெயில் சேவையில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

    Next Story
    ×