என் மலர்
தமிழ்நாடு

அக்.25-ந் தேதி சிறுவாபுரி முருகன் கோவில் நடை மூடப்படும் நேரம் அறிவிப்பு
- சிறுவாபுரி முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.
- சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள சிறுவாபுரி முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். செவ்வாய்க் கிழமைகளில் வழக்கமாக கூட்டம் அதிகம் இருக்கும்.
இந்த நிலையில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணம் வருகிறது. அப்போது முக்கிய கோவில்களில் நடை சாத்தப்படுவது வழக்கம்.
இதேபோல் சிறுவாபுரி முருகன்கோவிலிலும் கிரகணத்தை முன்னிட்டு 25-ந்தேதி மதியம் 12 மணி முதல் மாலை 7 மணி வரை சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டு கோவில் மூடப்படுகிறது.
சூரிய கிரகணம் முடிந்த பின்னர் சாந்தி செய்யப்பட்டு இரவு 7 மணிக்கு மேல் தரிசனத்திற்கு கோவில் நடை திறக்கப்படும் என்று கோவிலின் நிர்வாக அதிகாரி செந்தில்குமார் தெரிவித்து உள்ளார்.
Next Story