என் மலர்
தமிழ்நாடு

சென்னையில் மழைநீர் தேங்கிய 65 இடங்களில் மோட்டார் 'பம்ப்செட்' வைத்து வெளியேற்றம்

- 50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீர் இரவு பகலாக நடந்த தீவிர பணியின் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டது.
- இன்னும் 15 இடங்களில் மட்டுமே மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை:
சென்னையில் பருவமழையை எதிர்கொள்ள மாநகராட்சி பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அதில் மழைநீர் தேங்கக் கூடிய பகுதிகளில் மோட்டார் பம்ப்செட் வைத்து தண்ணீரை வெளியேற்ற தயார் நிலையில் வைக்கப்பட்டன.
536 மோட்டார்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த முறை மழைநீர் தேங்கிய 156 இடங்களுக்கு மோட்டார் பம்ப் செட் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் இந்த முறை மழைநீர் தேங்காததால் அவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.
65 இடங்களில் மட்டுமே மழைநீர் அதிகளவு தேங்கியதை அதிகாரிகள் கண்காணித்தனர். அந்த பகுதியில் மட்டுமே மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டன.
50-க்கும் மேற்பட்ட இடங்களில் தேங்கிய மழைநீர் இரவு பகலாக நடந்த தீவிர பணியின் மூலம் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இன்னும் 15 இடங்களில் மட்டுமே மழைநீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை 19 மரங்கள் பல்வேறு பகுதிகளில் விழுந்தன.
இதற்கு, மாநகராட்சிக்கு பொதுமக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஊழியர்கள் மரத்தை துண்டு துண்டாக அறுத்து போக்குவரத்தை சீராக்கினார்கள். கொட்டும் மழையிலும் இந்த பணி நடந்தது.