search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரங்கராஜபுரம்-கணேசபுரம் சுரங்கப் பாதைகள் மூடல்: கோடம்பாக்கம்-புளியந்தோப்பு-பெரம்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்
    X

    ரங்கராஜபுரம்-கணேசபுரம் சுரங்கப் பாதைகள் மூடல்: கோடம்பாக்கம்-புளியந்தோப்பு-பெரம்பூர் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்

    • கணேசபுரம் சுரங்கப் பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
    • ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதன் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் மழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள் குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இருப்பதாவது:-

    மழைநீர் பெருக்கு காரணமாக கோடம்பாக்கம் ரங்கராஜபுரம், வியாசர்பாடி, கணேசபுரம் சுரங்கப்பாதைகள் மூடப்பட்டு உள்ளன.

    ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை சேறும் சகதியுமாக உள்ளதால் இரண்டுசக்கர வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    கணேசபுரம் சுரங்கப் பாதை முழுவதும் மழைநீர் சேர்ந்துள்ளதால் வாகனங்கள் செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

    ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதன் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    கணேசபுரம் சுரங்கப் பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின்பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அனைத்து உள்வரும் மாநகர பஸ்களும் பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் அம்பேத்கர் கல்லூரி சாலை சந்திப்பிலிருந்து திருப்பி விடப்பட்டு பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம், பெரம்பூர் பாலம் வழியாக செல்கிறது.

    வெளிச்செல்லும் வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பில், ஓட்டேரி, ஜமாலியா வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளது.

    ரங்கராஜபுரம் சுரங்கப் பாதை வழியாக செல்லக்கூடிய வாகனங்களை அதன் உள்ளே அனுமதிக்கப்படாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்வதற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்து.

    கணேசபுரம் சுரங்கப் பாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாகவும், வெளியிலிருந்து உள்ளே வரக்கூடிய வாகனங்கள் பெரம்பூர் நெடுஞ்சாலை முரசொலி மாறன் பாலம் வழியாக செல்லும் வகையிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அபிராமபுரம் 3-வது தெரு, கீழ்ப்பாக்கம் மகரிஷி பள்ளி அருகில் ஆகிய 2 இடங்களிலும் மரங்கள் விழுந்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×